search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்பு"

    • கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி.
    • விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி. ரமேஷ் குடவாலா தமிழ்நாட்டின் முன்னள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்குமான பிரச்சனை நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் வெளியானது அப்போது நடந்த நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து நானும் சூரியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார்.

    இப்பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் விஷ்ணு விஷால், சூரி மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேரம் தான் எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் பதில், லவ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவினை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு.
    • உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது.

    பள்ளி, கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான வாழ்வில், பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணி இடங்களில் தான் உள்ளோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

    ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சினைகளை எளிதாகப்புரிந்துகொள்வார். பிரச்சினையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சினை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம் என்பதை இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.

    உற்சாகம்

    `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

    உதவி

    எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

     மதிய உணவு

    அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

     குழு

    நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    • ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.
    • மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 28). திருமணமானவர். வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய எண்ணில் இருந்து போன் வந்தது. செல்போனை எடுத்து பேசியபோது, எதிர்தரப்பில் இருந்து ஆண் நபரின் குரல் கேட்டது. அவர் எண்களை தவறாக போட்டதால் தனக்கு போன் வந்ததை உணர்ந்த அனிதா, அவரிடம் அதனைக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் தினமும் போன் செய்துள்ளார். புதுவை வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர், தினமும் அனிதாவிற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். இது நட்பாக மாறி நாளடைவில் கள்ள க்காதலாக மாறியுள்ளது.

    இதனையடுத்து இருவரும் சந்திக்க திட்டமிட்டு, நேற்று ஆரோவில் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அனிதா திடீரென மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை காணவில்லை. மேலும், தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, ஸ்ரீதருக்கு போன் செய்துள்ளார். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அனிதா, இது குறித்து கோட்டக்குப்பம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய ஸ்ரீதரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது.
    • கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

    வேளச்சேரி:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.

    இந்த நிலையில் அவர்களது நட்புக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

    இவர்களில் ஒருமாணவி தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் எங்களது விருப்பப்படி நாங்கள் செல்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து பட்டி வீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. மாணவிகள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் மீட்டனர்.

    பின்னர் மாணவிகள் இருவரும் திண்டுக்கல் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். மாணவிகள் இருவருக்கும் போலீசாரும், அதிகாரிகளும் அறிவுரை கூறினர்.

    • இன்று (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.
    • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சகோதரி நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இரண்டாவது தாயாக இருப்பவர் அவருடைய சகோதரிதான். சிறுவயதில் இருந்து எதிரும் புதிருமாக இருந்தாலும், நெருக்கம் இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவரே நம்முடைய சிறந்த நண்பராகி விடுவார்.

    இன்னும் சில நேரங்களில், சகோதரியுடனான பகிர்வு, பிணைப்பு என்பது தோழமை உணர்வையும் தாண்டி, 'அன்னை' என்ற நிலையை அடைந்துவிடும். இவ்வாறு அனைத்து உறவுகளின் சங்கமமாக விளங்கும் 'சகோதரி' எனும் உறவை மதித்து கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 7) 'தேசிய சகோதரிகள் தினம்' கொண்டாடப்படுகிறது.

    மூத்தவர், இளையவர் என சகோதரி எந்த வயதினராக இருந்தாலும், அவருடைய கவனம் எப்போதும் நம் நிழலாக செயல்படும். அவர் நம் வாழ்வின் முதல் விமர்சகராக விளங்குவார். நம்முடைய மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு, மறைமுகமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்.

    தகுந்த நேரத்தில் வழிகாட்டியாக, பாதுகாப்பு அரணாக, அன்பின் அரவணைப்பாக, வாழ்வின் அனைத்து கட்டத்திலும் நம்முடன் பக்கபலமாக இருக்கும் சகோதரி என்ற உன்னத உறவை, மகிழ்ச்சியுடன் நம் வாழ்க்கைப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வோம்.

    • வாழ்க்கையில் நட்பும், நண்பர்களும் முக்கியமானது.
    • பெண்களின் நட்பு வட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றதாகி விடுகிறது.

    நம் வாழ்வில் நிகழும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் என அனைத்து உணர்வுகளின்போதும் உடன் இருப்பவர்கள் நண்பர்கள். ஆண்-பெண் இருவருடைய வாழ்க்கையிலும் நட்பும், நண்பர்களும் முக்கியமானது. ஆனால் பெண்களின் நட்பு வட்டம், வாழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் நிலையற்றது ஆகி விடுகிறது.

    எனினும், பிறந்ததில் இருந்து பருவம் அடையும் வரை தந்தை, பதின்பருவத்தில் தாய், திருமணத்துக்குப் பிறகு கணவர், குழந்தைப்பேறுக்குப் பின்பு பிள்ளைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கைக்குரிய உறவே, பெண்களுக்கு நண்பர்களாக மாறும். பெண்களின் நண்பர்கள் வட்டம் நிலையற்று போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    ஆனால், அவர்களின் வாழ்வில் அனைத்து காலகட்டத்திலும் வயதுவரம்பு இல்லாத ஒரு நண்பர் இருந்துகொண்டே இருப்பார். அது அவர்களோடு தினமும் உடன் பயணிக்கும் பூ விற்கும் பாட்டி, கடலை விற்கும் தாத்தா, அலுவலக பாதுகாவலர், தெருவில் விளையாடும் குழந்தைகள், கீச்சிடும் குருவி, தோட்டத்து ரோஜா என எதுவாகவும், யாராகவும் இருக்கலாம்.

    காரணம், அன்புக்கும் நட்புக்கும் வயது, பாலினம், நிறம், சமூகம் போன்ற எதுவும் தடை இல்லை. எதிர்பார்ப்பற்ற நட்பு எனும் உறவை, எப்போதும் மரியாதையுடன் வழிநடத்தி வாழ்வை இனிதாக்கலாம்.

    ×