search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Film Festival"

    • திரைப்படவிழாவில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி பங்கேற்றனர்
    • சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி 200-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விசுபெரர்சு" குறும்ப டத்தினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மற்றும் ஊட்டியின் 200-வது ஆண்டினை போற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊட்டி 200 விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகளை வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கடந்த 6-ந் தேதி அன்று காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து புகைப்படக்கண்காட்சி, படகு போட்டி, பழக்காட்சி என ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கூடலூரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேவாலா பண்ணை யினை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், படகு இல்லத்தில் சாகச பூங்கா மற்றும் பைக்காராவில் மிதவை படகு அமைக்கவும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியதா வது:-

    கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவரால் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த 200-வது விழாவினை கொண்டாடும் வகையில், இன்றைய தினம் இந்த திரைப்பட விழாவானது நடைபெறுகிறது. தமிழ கத்திற்கு என உள்ள பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களில், நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு பெரும் பங்கினை, தொன்மைகளை பெற்றிருக்கிறார்கள். அவற்றினை நாட்டிற்கு பறைசாற்றுகின்ற வகையில் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி சென்ற நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதேபோன்று திரைப்படம் என்பது மொழி, இனம், சமூகம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை. மத நல்லிணக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் ஊட்டி நகரில் எடுக்கப்பட்டது என்பது இந்த நகரத்திற்கு தனி சிறப்பு ஆகும். எனவே ஊடியில் எடுக்கப்பட்ட மூடுபனி, முள்ளும் மலரும், ஊட்டி வரை உறவு, புதையல் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமூக சம்பவம் சமூக நிலை மற்றும் ஊட்டியின் பங்கு என்ன என்பதனை தெரிந்து கொள்ளவும், ஊட்டியில் பெருமையை தெரிந்து கொள்ளவும் திரைப்படம் உதவும், எனவே மொழியால், இனத்தால், இருக்கின்ற இடம் ஊட்டியினால், நாம் பெருமையடைகிறோம் என்கின்ற உணர்வை, இந்த திரைப்பட விழாவானது நமக்கு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. ஆகியோர் "வாக்கத்தான்" குறும்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் சுரேஷ், பிரவீன் மற்றும் குழுவினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, "பிளாஸ்டிக் தடை குறும்படம்", சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதது குறித்த மாவட்ட கலெக்டர் உரையாற்றிய விழிப்புணர்வு குறும்படம், "திஎலிபெண்ட் விசுபெரர்சு" போன்ற குறும்படங்களை பார்வை யிட்டனர்.

    விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி, முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் ராஜசேகர் (ஊட்டி), காயத்ரி (கோத்த கிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன், ஸ்ரீ வீரபத்திரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அம்மனுக்கு பால் குட ஊர்வலமும், மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மாலையில் தாய்வீட்டு சீர் அழைத்தல், இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று காலை முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு தெப்பகுளம் விநாயகர் கோவிலில் இருந்து சக்திகரகம், பூங்கரகம், காளிவேடம், அலகு குத்துதல், அக்னிசட்டி திருவீதி உலா நடைபெறுகிறது.

    நாளை (வியாழக்கிழமை) பகல் 12 தணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனையும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு கும்ப பூஜையும் நடக்கிறது.

    5-ந்தேதி காலை 10 மணிக்கு 108 வாசனை திரவியங்களுடன் அம்மனுக்கு சிறப்பு மஹா அபிசேகமும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரமும், ஸ்ரீ பலப்பட்டறை காளியம்மன் இறையருள் நண்பர்கள் குழு, சாமி தூக்கும் நண்பர்கள் குழு சார்பில் அன்னதானமும் நடைபெறுகிறது.

    • பக்தர்கள் அலகு குத்தி பூந்தேர் இழுத்து நேர்த்திக்கடன்
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    நெமிலி:

    நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் பொன் னியம்மன், தக்காளியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா நடைபெற்றது. முன்னதாக பொன்னியம்மன், தக்காளி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி பூந்தேர் இழுத்தனர். இதைதொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    பின்பு பொன்னியம்மன், தக்காளியம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கிராமத்தின் அனைத்து வீதிகளி லும் ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது ராஜ மேளம் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது,
    • முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் வலசக்காடு ஊராட்சியில் முத்துமாரியம்மன், வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது, இந்த திருவிழா நாளை புதன்கிழமை தொடங்கி 10 நாள் நிகழ்வாக நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெறுகின்றது. வருகின்ற 4- ம் தேதி வியாழக்கிழமை 9ம் நாள் விழாவை முன்னிட்டு முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 5- ம்தேதி வெள்ளிக்கிழமை 10ம் நாள் அலகு குத்துதல் ,காவடி எடுத்தல் ,தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி நாளான 11 - ஆம் தேதி வியாழக்கிழமை பக்த பிரகலாத நாடகமும் அதனைத் தொடர்ந்து 12 - ம் தேதி வெள்ளிக்கிழமை அரிச்சந்திரா நாடகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அறங்காவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
    • பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடர்பான மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.

    மேலும் பாதுகாப்பான உணவாக இருப்பதோடு செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.

    அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து மேற்படி இடங்களில் சேரும் கழிவுகளை முறையாக சேகரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்களில் சேர்க்க வேண்டும். அதேபோல் ஓட்டல்களி லும் சுத்தமான முறையில் தயார் செய்யப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும். திருவிழாவில் மண்டகப் படிகள் மற்றும் பொது இடங்களில் அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் foscos.fssai.gov.in என்ற இணை யதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவு சான்றிதழ்) பெற்று பிரசாதங்களை வழங்க வேண்டும்.

    பொதுமக்களுக்கும் வழங்கப்படும் உணவு மற்றும் உணவு பொருட்கள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் உடனே அரசின் உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண் 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மதுரை சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    மதுரை

    மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வு களான தினந்தோறும் மீனாட்சியம்மன் 4 மாசி வீதிகளில் வீதிஉலா வருதல், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சுவாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற்றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மை யாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்சு வசதி, தகவல் மையம், கண்காணிப்பு காமிராக்கள், தன்னார்வ லர்கள், மின்சாரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிவறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.

    திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை போக்கு வரத்து இடையூறின்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கே திருவிழாவை பார்க்க வசதியாக எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக டிரோன் மூலமாக கண்காணித்தல், வாகனங்கள் நிறுத்து வதற்கான இடங்கள், மருத்துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் காவல் துணை ஆணையாளர் அரவிந்த், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் (காவல்துறை) மாரியப்பன், செல்வின், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம், கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, நகரப்பொறி யாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி ஆணையாளர்கள் காளிமுத்தன், வரலட்சுமி, திருமலை, சையது முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழா 23-ந்தேதி தொடங்குவதால் மதுரை வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • தடுப்பணைகளால் விபத்து அபாயம் ஏற்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது. மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.

    அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கு வார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்

    இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

    வைகை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் இது இன்னமும் தூர்வாரப்படவில்லை. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம். அப்போது மக்கள் வெள்ளம் 6 அடி உயர தடுப்பணை அருகே சென்றால், தண்ணீருக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதுவும் தவிர வைகை ஆற்றின் படித்துறைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

    எனவே அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கிறது. வைகை ஆற்றில் கள்ளழகரை காண வரும் பக்தர்கள், மொட்டையடித்து ஆற்றில் நீராடுவார்கள். அப்போது ஆற்றின் படிகள் சிதிலமடைந்து இருப்பதன் காரணமாக அதனை அறியாமல் பக்தர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும். எனவே வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கும் முன்பாக ஆற்றை சுத்தம் செய்து தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு இணைய தளம் மூலம் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது.
    • வருகிற 22-ந்தேதி முதல் பதிவு செய்யலாம்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யா ணம் ஆகும். இது கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதே போல தெற்கு கோபுரம் வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா தரிசனம் என்ற முறையில் அனுமதி வழங்கப் படும். இது யார் முதலில் வருகிறார்களோ அவர்க ளுக்கு அனுமதி என்ற நிலையில் இருக்கும்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in- திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனை வருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ள லாம்.

    இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26-ந் தேதி தகவல் அனுப்பப்படும்.

    உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்- குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது. வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்த கவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அடுத்த மாதம் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப் படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழி யாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவி லுக்குள் அனுமதிக்கப்படு வர். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்க ளில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன் -சுவாமி அருள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திரைப்பட விழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நியோ ஐடோலா இலக்கிய மன்றம் சார்பில் திரைப்பட விழா நடந்தது. ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.இலக்கிய மன்றத் துணைத் தலைவரும், ஆங்கிலத்துறை, 3-ந் ஆண்டு மாணவருமான பிரதீப் வரவேற்றார். முதல் அமர்வாக உலக சினிமாவில் இருந்து சிறந்த காட்சிகள் திரையிடப்பட்டன. ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா தலைமையில் இந்த திரைப்படங்களின் சிறப்பம்சம் குறித்த கலந்தாய்வுகள் நடந்தன.

    உலகத் திரைப்படங்களின் காட்சியமைப்பு, கதையம்சம், இயக்கம், நடிப்பாற்றல் மற்றும் இசை கோர்ப்பு பற்றி மாணவர்கள் கலந்துரையாடினர். திரையிடப்பட்ட காட்சிகளில் தங்களை கவர்ந்த காட்சிகளைப் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களின் விமர்சனத் திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இலக்கிய மன்ற மாணவர் தலைவரும், முதுகலை 2-ந் ஆண்டு மாணவியுமான மரியா கிரிஸ்டைனா நன்றி கூறினார்.

    • சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
    • மூன்று தமிழ் படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் கோவாவில் நாளை தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன. ராஜ்மவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்.திரைப்படமும் இதில் கலந்து கொள்கிறது.


    மேலும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.

    இந்த விழாவில் பங்கேற்கும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், தொட்டுணரக் கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரைப்படக் கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கோவாவில் உள்ள கலா அகாடமிக்கு அருகே கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் மொத்தம் 20 அரங்குகள் இடம்பெறும்.

    சமகால சினிமா தயாரிப்பில் தொழில்நுட்ப வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். இந்நிலையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் திரைப்படவிழாவை நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகளை போதிக்கும் குழந்தைகள் திரைப்பட விழா சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில், எங்களாலும் முடியும், மல்லி, துபாஷி மற்றும் முதலை ஆகிய நான்கு படங்கள் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த குழந்தைகள் திரைப்பட விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 27 திரையரங்குகளில் 81 காட்சிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் தேர்வுகள் பாதிக்காத வகையில் அட்டவணை தயார் செய்து, அருகில் உள்ள திரையரங்குகளின் இருக்கைக்கு ஏற்றவாறு பள்ளி குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 114 பள்ளிகளில் பயிலும் 51 ஆயிரத்து 936 மாணவ, மாணவிகளுக்கு இக்குழந்தைகள் திரைப்படமானது திரையிடப்படுகிறது.

    பள்ளி குழந்தைகளை அழைத்து வரும்போது உடன் ஆசிரியர்கள் வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளை தூய்மையாக பராமரித்திடவும், மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விசிறி வசதி, சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்திடவும், குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் சமயம் திரையரங்க பணியாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் திரையரங்கத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    முன்னதாக தியேட்டரில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் பலரும் அமர்ந்து குழந்தைகள் திரைப்படத்தை பார்த்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்திய குழந்தைகள் திரைப்பட சங்க உதவி வினியோக அலுவலர் அகிலா, சேலம் (மேற்கு) தாசில்தார் தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×