என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வலசக்காடு கிராமத்தில் சித்திரை திருவிழா
- வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது,
- முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் வலசக்காடு ஊராட்சியில் முத்துமாரியம்மன், வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது, இந்த திருவிழா நாளை புதன்கிழமை தொடங்கி 10 நாள் நிகழ்வாக நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெறுகின்றது. வருகின்ற 4- ம் தேதி வியாழக்கிழமை 9ம் நாள் விழாவை முன்னிட்டு முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 5- ம்தேதி வெள்ளிக்கிழமை 10ம் நாள் அலகு குத்துதல் ,காவடி எடுத்தல் ,தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி நாளான 11 - ஆம் தேதி வியாழக்கிழமை பக்த பிரகலாத நாடகமும் அதனைத் தொடர்ந்து 12 - ம் தேதி வெள்ளிக்கிழமை அரிச்சந்திரா நாடகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அறங்காவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்