search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonetization"

    • கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது?
    • ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்

    ஐதராபாத்தில் நடைபெற்ற சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 98% திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பண மதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று நினைக்கின்றேன்.

    அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்தேன்

    மேலும், சமீபகால நிகழ்வுகளை பார்க்கும் போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • பொதுத்துறை வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என மோடி அறிவித்தும் அவை இயங்கவில்லை
    • புதிய நோட்டுக்கள் வேறு நீள, அகல பரிமாணங்களுடன் வெளிவந்தன

    கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.

    அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.


    இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டத்திற்கு புறம்பான வழியில் நடக்கும் "ஹவாலா" பணபரிமாற்றம், கள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், வருமானவரி கட்டாமல் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிமாற்றம் "கருப்பு பொருளாதாரம்" என அழைக்கப்படும். இதற்கு எதிராக எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அப்போதைய இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் வைத்திருப்பவர்கள் வங்கியில் தங்கள் பணத்தை செலுத்தி விகிதாசார முறையில் தினமும் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் வருமான வரி துறையிடம் சிக்கி கொள்ள நேரிடும் என்பதால் இதற்கு முன்வரவில்லை. ஒரு சில வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் வங்கியில் இருந்து புதிய நோட்டுக்களை ரகசியமாக பெற்று கொண்டு, கணக்கில் காட்டாமல் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    2016 நவம்பர் 8லிருந்து டிசம்பர் 30 வரை, சுமார் 50 நாட்கள் மக்கள் வங்கிகளில் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள மிக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பணம் இல்லாமல் தங்கள் தேவைகள் தடைபட்டு சிலர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பெறவும் மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

    மத்திய ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக அச்சடித்து வெளியிட்ட புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புது நீள, அகல பரிமாணங்களை கொண்டிருந்ததால் பணம் வழங்கும் இயந்திரங்களையே (ATM) புதுப்பிக்க வேண்டியிருந்தது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.


    இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திலும், மொத்த விற்பனையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த நோட்டுக்கள் திடீர் என செல்லாததாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர்.

    அன்றிலிருந்து இந்திய பொருளாதாரம் சுமார் 1 வருடத்திற்கு ஸ்தம்பித்தது.

    அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2023 ஜனவரி மாதம், "அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆனால், அப்போது மக்களிடம் அறிமுகம் பெற தொடங்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, தற்போது வரை மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிகமாக டிஜிட்டல் பணப்புழக்கம் இந்தியாவில்தான் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற வழிமுறையில் யாரிடமிருந்து, எவருக்கு, எப்போது, எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு பண வழித்தடத்தை (money trail) கண்டறிவது அரசுக்கு சுலபம் என்பதால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் அரசிடம் சிக்கி கொள்வார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



    2016, நவம்பர் 8 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களும் சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அரசின் நோக்கங்கள் திட்டமிட்டபடி நிறைவேறியதா அல்லது தோல்வியுற்றதா என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தற்போது வரை நிலவுகின்றன.

    இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினம். அரசின் முடிவை விமர்சித்தாலும், இந்தியர்கள் எங்கும் போராடாமல் அமைதி காத்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைத்தனர்.

    7 வருடங்கள் கடந்தும் மக்கள் அந்த காலகட்டத்தில் தாங்கள் பட்ட இன்னல்களை மறக்கவில்லை.

    • இந்த முடிவு விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
    • இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும்.

    பிலோலி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் தமிழகம், கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானாவை தாண்டி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தை அடைந்தது.

    இந்நிலையில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான இன்று பிலோலி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

    தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதி செய்ய பே பி.எம். மேற்கொண்ட நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார். 2016 ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி பேடிஎம் என்பதை மாற்றி பே சிஎம், பே பிஎம் என்ற வார்த்தை பயன்படுத்தி வருகிறது. தற்போது பிரதமர் மோடி குறித்து அந்த வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தெக்லூரில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும் என்றார். அதற்கு முன்பு யார் நினைத்தாலும் அதை பாதியில் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization

    நாசரேத்:

    தூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வருகிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.

    பாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.

    இந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #pmmodi #demonetization  

    மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST #Demonetization
    திருப்பூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

    தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசினார். பின்னர் தாராபுரம் மற்றும் எல்லப்பாளையத்தில் அரச மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து காங்கேயம், பல்லடம், வீரபாண்டி, திருப்பூர் சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி கமல்ஹாசன் பேசினார். இறுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை கண்டிருக்கிறது. பணமதிப் பிழப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட மும்முனை தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சினிமாத் துறையும் இதில் பாதிக்கப்பட்டது. அதற்கான கடுமையான குரலை நானும் எழுப்பியிருக்கிறேன். உங்களுக்கான உரிமையை நீங்கள் கேட்டுபெறுங்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழகத்தின் தொழில் துறை மற்ற மாநிலங்களை நோக்கி செல்கிறதென்றால் அதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இழந்தபின்பு ஆறுதல் தெரிவிப்பதை விடுத்து இழப்பு ஏற்படும் முன் அதனை சரிசெய்ய கவனம் செலுத்தவில்லை.

    மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் பல குறைகளை தெரிவித்திருக்கின்றனர் . அவற்றை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டும்.

    தமிழக வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மக்கள் நீதி மய்யம் செயல் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதனை தொழில் துறையோடு கலந்து பேசி செயல்படுத்த முனைப்பு காட்டுவோம்.

    மக்கள் நீதி மய்யத்தின் ஸ்லோகமான ‘நாளை நமது’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் எங்களுக்கான பலம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும்.

    படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தை நோக்கி நகர வேண்டும். நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்து விட்டது. அது தான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது.

    கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி செல்கிறேன். கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    சட்டமன்றத்துக்கு இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமலே மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் நலனுக்காக கேள்விகளை கேட்டது. யார் தடுத்தாலும் தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். என்னைப் பல இடங்களில் நான் மக்கள் முன் பேசுவதற்கு பல தடைகளை இடுகின்றனர். நாம் சந்தித்து பேசி விடப்போகிறோம் என்ற பயத்தில் நான் பேசப்போகும் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

    கல்வியை தாங்கிபிடிக்க வேண்டிய அரசு அதை விடுத்து மதுக்கடைகளை தாங்கி நிற்கிறது. இளைஞர்கள் அனைவரையும் நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை. வருங்கால முதலாளிகளாக தான் பார்க்கிறேன்.

    எனக்கு தெரியும் முதலாளிகளை எங்கு வைக்க வேண்டும், திருடர்களை எங்கு வைக்க வேண்டும் என்று. இது மின்னல் போல் வந்து மறைந்து செல்லும் பயணம் அல்ல. இது தொடரும். பல்வேறு இடையூறுகளிடையே காவல்துறையினர் நமக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காவல்துறையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் பணிக்கு நாம் இடையூறு செய்ய அளிக்க கூடாது. நமது இயக்கம் கட்டுப்பாடு நிறைந்த இயக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #GST

    ×