கருப்புப்பணத்தை வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு பயன்பட்டது - நீதிபதி பி.வி.நாகரத்னா

கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்
கருப்புப்பணத்தை வெள்ளையாக்கவே பணமதிப்பிழப்பு பயன்பட்டது - நீதிபதி பி.வி.நாகரத்னா
Published on

ஐதராபாத்தில் நடைபெற்ற சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 98% திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பண மதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று நினைக்கின்றேன்.

அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்தேன்

மேலும், சமீபகால நிகழ்வுகளை பார்க்கும் போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com