search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cosmetology"

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
    • உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன.

    உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன. இதனால் அதனை சுத்தம் செய்து தூண்டும்போது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பாத வெடிப்புகள் உள்ளதால் நடப்பதே சிரமமாகிறது. கல் போன்ற சிறு பொருட்களும் உள்நுழைந்து விடுகிறது. இதனால் புண்கள் ஏற்படுகின்றன.

    பாதத்தில் வெடிப்பு என்பது பலரை சிரமத்திற்கு உள்ளாக்கும் விஷயமாக உள்ளது. நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில், புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

    பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும். உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. பாத வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டால் பாதத்தின் அழகும் குறைந்து, பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது. பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை இயற்கையான முறையில் சரி செய்யும் முறை குறித்து இனி காண்போம்.

    நமது பாதங்கள் பித்தவெடிப்புடன் வறட்சியாக காணப்படும் பட்சத்தில். ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதம் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்துகொள்ள வேண்டும். பின்னர் இளம் சூடுள்ள நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிய பிறகு தயார் செய்யப்பட்ட பேஸ்ட்டை தடவ வேண்டும்.

    பாதத்தின் பித்த வெடிப்பானது தொடக்க கடத்தில் இருக்கும் பட்சத்தில், வெறுமையான தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை தடவி வரலாம். இந்த முறையை வாரத்திற்கு தொடர்ந்து செய்து வரவேண்டும்.

    தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்.. நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறையத் தொடங்கும்.

    எலுமிச்சை சாற்றினை இளம் சூடுள்ள நீரில் கலந்து, பாதங்களை வாரத்திற்கு ஒரு முறை, சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவினால் பாதங்களானது மென்மையாகும்.

    தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சமமான அளவில் எடுத்து., மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் தடவினால்  பித்த வெடிப்பானது உடனடியாக நீங்கும். மேலும், நமது பாதத்திற்கு ஏற்ற வடிவம் மற்றும் அளவில் இருக்கும.

     காலணிகளை அணிவது, பாதத்தில் ஈரத்தன்மை இல்லாத அளவில் உலர்த்துவது போன்றவதை செய்யலாம். எளிமையான முறையாக இரவில் உறங்குவதற்கு முன்னதாக கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து உறங்கினாலே போதுமானது.

    முதலில் காலை ஸ்க்ரப் கொண்டு தேய்த்து கொள்ளவும். அதன்பின் எலும்பிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதனை காலில் தேய்த்துக்கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து அதன் பின் சாதா உப்பு, ஷாம்பூ சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் காலை வைத்து 15 நிமிடம் அப்படியே விட்டு விடவும். இதனால் காலில் உள்ள அழுக்குகள் இறந்த செல்கள் அகற்றபடும்.

    பிறகு காலை துடைத்து விட்டு ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து  அதனை கால் முழுவதும் நன்கு மசாஜ் செய்வது போல தடவ வேண்டும். பின்னர் அதனை ஒரு துணியால் துடைத்து பிளாஸ்டிக் கவரை காலில் கட்டி அதன் மேல் காலுறை அணிந்து தூங்க வேண்டும். காலை எழுந்ததும் அவற்றை கழட்டி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

    மேலும் மருதாணி இலை மற்றும் மஞ்சள்கிழங்கு இந்த இரண்டையும் அரைத்து காலில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலும் பாத வெடிப்பு நீங்கும்.

    • நக ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பயோட்டின் நக வளர்ச்சிக்கு உதவுகிறது.

    ஆரோக்கியமான நகங்கள் உங்கள் கைகளின் தோற்றத்தை அழகாக்குவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் குறிக்கிறது. இருப்பினும், அடிக்கடி நகங்கள் உடைவது உங்களை வெறுப்பாக்கலாம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது முறையற்ற நக பராமரிப்பு பழக்கம் போன்ற அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். நகங்கள் அடிக்கடி உடைவதைத் தடுக்கவும், வலிமையான, ஆரோக்கியமான நகங்களை மேம்படுத்தவும் உதவும் சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    சீரான டயட்

    நக ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் புரதம், பயோட்டின், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.

    மெலிந்த இறைச்சிகள், மீன், முட்டை மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் நகங்களின் வலிமையை ஆதரிக்கின்றன, அதேநேரத்தில் பயோட்டின் நக வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த நக ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்க ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்

    நீரேற்றமாக இருக்க வேண்டும்

    நகங்களின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும், உடையக்கூடிய தன்மையைத் தடுக்கவும் சரியான நீரேற்றம் அவசியம். உங்கள் நகங்களை உள்ளே இருந்து நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். கூடுதலாக, மாய்ஸ்சரைசிங் ஹேண்ட் க்ரீம் அல்லது க்யூட்டிகல் ஆயிலை தவறாமல் தடவுவது, நகங்கள் மற்றும் சுற்றியுள்ள தோலை ஹைட்ரேட் செய்து, உடையும் அபாயத்தைக் குறைக்கும்.

     மென்மையான நக பராமரிப்பு பயிற்சி

    கடுமையான ரசாயனங்கள், அதிகப்படியான ஃபைலிங் அல்லது உங்கள் நகங்களை கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்த நடைமுறைகள் நகங்களை வலுவிழக்கச் செய்து உடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நகங்களை ஒரு திசையில் வடிவமைக்க மென்மையான நக வெட்டிகளைப் பயன்படுத்தவும், முன்னும் பின்னுமாக வெட்டுவதைத் தவிர்க்கவும், இது பிளவு மற்றும் உடைவதற்கு வழிவகுக்கும். நகங்கள் அதிக நீளமாகவும், உடைந்து போகாமல் இருக்கவும் அவற்றைத் தொடர்ந்து ஒழுங்கமைக்கவும்

    சரியான நக சுகாதாரத்தை பராமரிக்கவும்

    பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க உங்கள் நகங்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருங்கள், இது நகங்களை வலுவிழக்கச் செய்து உடைப்பை ஏற்படுத்தும். நகங்களுக்கு அடியில் சுத்தம் செய்யவும், அழுக்கு அல்லது குப்பைகளை அகற்றவும் மென்மையான தூரிகையைப் பயன்படுத்தவும். நகங்களை ஆக்ரோஷமாக வெட்டுவதையோ அல்லது பின்னுக்கு இழுப்பதையோ தவிர்க்கவும், இது நக அமைப்பை சேதப்படுத்தும் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

    • போதிய வலுவில்லாமல் நகங்கள் அடிக்கடி உடைந்து போகும்.
    • அக்ரிலிக் நகங்கள்' எனப்படும் செயற்கை நகங்கள்.

    விரல்களின் மகுடமாக இருப்பவை நகங்கள். பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பது நகங்களுக்குத்தான். பலருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், போதிய வலுவில்லாமல் நகங்கள் அடிக்கடி உடைந்து போகும். இதற்கு தீர்வாக வந்திருப்பது தான் 'அக்ரிலிக் நகங்கள்' எனப்படும் செயற்கை நகங்கள்.

    பண்டிகைகள், விசேஷங்கள், விருந்து போன்ற முக்கிய தருணங்களில் பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த இந்த நகங்களை உபயோகிக்கலாம்.

    அக்ரிலிக் நகங்கள் என்பது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட நகங்களைப் போலவே இருக்கும். மோனோமர் திரவம் மற்றும் பாலிமர் தூள், இவை இரண்டையும் சேர்த்து கலந்தால் ஜெல் வடிவ கலவை கிடைக்கும். அதை விரல்களில் உள்ள இயற்கையான நகங்களின் மீது பிரஷ் கொண்டு சீராக பூச வேண்டும். அது சற்று உலர்ந்த பின்பு, அதை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம்.

    இந்த ஜெல் நகத்தில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். எனவே அக்ரிலிக் நகங்கள் பிரிந்து வந்துவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.

    இயற்கையான நகங்களின் ஓரங்களை சீர்ப்படுத்தி, மெனிக்யூர் செய்த பின்பு அகரிலிக் கலவையைப் பூசி. விரும்பிய வடிவத்துக்கு கொண்டு வரலாம். அது நன்றாக உலர்ந்தவுடன், அதில் விரும்பிய டிசைன்களை வரையலாம். மணிகளை ஒட்ட வைத்தும் அலங்கரிக்கலாம்.

    முதல்முறையாக அக்ரிலிக் நகங்களை அணிந்துகொள்ள விரும்புபவர்கள், மெல்லிய அடுக்காக நகங்களை வடிவமைக்கலாம். இது இலகுவாக இருப்பதோடு இயற்கையான நகங்கள் போன்ற தோற்றத்தையும் அளிக்கும். இந்த வகை நகங்களை பராமரிப்பதும் எளிதாகும்.

     அக்ரிலிக் நகங்களை ஓட்டுவதற்கு முன்பு, இயற்கையான நகங்களை சீராக வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். அவற்றை அதிகமாக டிரிம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இயற்கையான நகத்துக்கும். அக்ரிலிக் நகத்துக்கும் உள்ள இடைவெளி நன்றாகத் தெரியும்.

    அக்ரிலிக் நகங்களை நீளமாக வடிவமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீளமான செயற்கை நகங்களை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியாது. தினசரி வேலைகளில் ஈடுபடும் போது, நீளமான நகங்கள் அசவுகரியத்தை ஏற்படுத்தும். எளிதாக உடையும். எனவே. முடிந்தவரை நீளம் குறைவாக இருக்கும் வகையில் அக்ரிலிக் நகங்களை அமைத்துக் கொள்ளலாம். ஓவல் வடிய நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

    வழக்கமான வீட்டு வேலைகள் செய்யும்போது, கைகளில் கையுறை அணிவது அவசியமாகும். இது நகங்களை சேதமடையாமலும், நகத்துக்குள் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும். அக்ரிலிக் நகங்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. நகத்தை பயன்படுத்தி சுவிட்சுகளை இயக்குவது. கடினமான பொருட்களை திறப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

    அக்ரிலிக் நகங்களை வடிவமைக்க ரசாயன ஜெல்லை பயன்படுத்துவதால் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும். கர்ப்பிணிகள் அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    • பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
    • ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள்.

    சிலருக்கு முகத்தில் உள்ள சருமம் சீரான நிறத்தில் இல்லாமல், ஆங்காங்கே கருப்பு நிற திட்டுக்கள் காணப்படும். பெண்களின் முக அழகை பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை `ஹைப்பர் பிக்மென்டேஷன்' என்று குறிப்பிடுகிறார்கள், தூக்க மின்மை, அழகுசாதனப் பொருட்களால் ஏற்படும். ஒவ்வாமை, மனஅழுத்தம் என இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க உதவுகிறது

    `கோஜிக் அமிலம்'. பெரும்பாலான அழகு பராமரிப்பு பொருட்களில் கோஜிக் அமிலம் முக்கியமான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான பூஞ்சைகளில் இருந்து கோஜிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இதுதவிர சோயா, அரிசி போன்ற சில உணவுப்பொருட்களை நொதிக்க வைத்து அதில் இருந்தும் கோஜிக் அமிலத்தை தயாரிக்கிறார்கள்.

    `மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தி அதிகமாகும் பொது சருமத்தில் கருமை நிறம் உண்டாகிறது. 'டைரோசின்' என்ற அமினோ அமிலத்தின் மூலம்தான் மெலளின் ற்பத்தியாகிறது. கோஜிக் அமிலம், உடலில் டைரோசின் உருவாவதை தடுக்கிறது. இதன்மூலம் மெலனின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டு, சருமத்தில் இயற்கையான நிறம் பாதுகாக்கப்படுகிறது. கோஜிக் அமிலத்தின் பயன்கள் பற்றிய மேலும் சில விஷயங்கள் இங்கே.

    கரும்புள்ளிகளை நீக்கும்

    முகப்பரு அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகம் பொலிவு இழந்து காணப்படும். கோஜிக் அமிலத்தில் உள்ள மூலக்கூறுகள் கரும்புள்ளிகளை எளிதாக நீக்கக்கடியவை இந்த அமிலத்தை முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களி பூச வேண்டும். அது எளிதாக சருமத்தில் ஊடுருவி மெல்வின் உற்பத்திக்கு காரணமான டைரோசினை கட்டுப்படுத்தும் சமத்தில் ஏற்படும் அதிகப்படியான நிறமியின்  உற்பத்தியை தடுக்கும். இதன்மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், புள்ளிகள் ஆகியவை எளிதாக நீக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சினையும் குறையும்.

    சருமத்தை பிரகாசமாக்கும்

    அடிக்கடி வெயிலில் செல்பவர்களுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்பட்டு சருமம் கறுத்துப்போகும். அந்த இடங்களில் கோஜிக் அமிலத்தை பூசும்போது அது ஆழமாக ஊடுருவி சருமத்தின் பலவேறு அடுக்குகளில் இருந்து கருமையை நீக்கும். இதன்மூலம் மீண்டும் சருமம் பிரகாசமாக மாறும்.

    மெலஸ்மாவுக்கு தீர்வாகும்

    கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் முகம் மற்றும் உடலில் கருத்திட்டுகள் உருவாகும். இந்த நிலையை மருத்துவத்தில் 'மெலஸ்மா' என்று அழைக்கிறார்கள். சிலருக்கு பிரசவத்திற்கு பின்னும் இந்த கருந்திட்டுகள் போகாமல் சருமத்தில் நிரந்தரமாக படித்துவிடும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கோஜிக் அமிலத்திற்கு உண்டு.

    கிருமித்தொற்றை எதிர்க்கும்

    பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றால் முகத்தில் கொப்புளங்கள், முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோஜிக் அமிலம் இவற்றை குணப்படுத்துவதோடு இவற்றால் சருமத்தில் ஏற்படும் தழும்புகளையும் அதுமட்டுமில்லாமல் அவற்றையும் குணப்படுத்தும். கிரீம்கள் மற்றும் சோப் மற்றும் திரவ வடிவிலும் கோஜிக் அமிலத்தை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும்போது மாய்ஸ்சரைசர்களையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    • முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு புருவங்கள்.
    • விளக்கெண்ணெய் புருவங்களின் மீது பூசி மசாஜ் செய்யலாம்.

    பெண்களின் முக அழகை மேம்படுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவை புருவங்கள். பெண்களின் வில் போன்று வளைந்து இருக்கும் அவை, பார்ப்பவர்களை வசீகரிக்கக்கூடியவை. ஆனால், தற்போது பல பெண்களுக்கு புருவ முடிகளின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இதன் காரணமாக செயற்கையாக 'ஐ புரோ பென்சில்' கொண்டு புருவங்களைத் தீட்டிக்கொள்கிறார்கள்.

    புருவ முடிகள் சீராக வளர்ச்சி அடைந்து, புருவங்கள் அடர்த்தியாக காட்சி அளிப்பதற்கு இயற்கையான வழிகளை கடைப்பிடிக்கலாம். அதுபற்றிய சில விஷயங்கள்:

    முடி வளர்ச்சிக்கு:

    ஒரு சில பெண்களுக்கு புருவத்தில் ஆங்காங்கே முடிகள் இல்லாமல் திட்டுத்திட்டாக இடைவெளி இருக்கும். இவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் விளக்கெண்ணெய்யை புருவங்களின் மீது பூசி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

    விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்தும் புருவத்தில் பூசி மசாஜ் செய்யலாம்.

    எண்ணெய் பூசுவதற்கு முன்பு புருவப் பகுதியை லேசாக 2 அல்லது 3 முறை கிள்ளி விடவும். இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புருவ முடிகள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

    பொடுகு நீங்க:

    புருவங்களை முறையாக பராமரிப்பது அவசிய மாகும். இல்லையென்றால், அவற் றில் பொடுகு பிரச்சினை ஏற்படும். இந்த பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தினமும் புருவங்களில் ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வரலாம். இவ்வாறு செய்வதால் பொடுகு நீங்குவதோடு புருவ முடிகள் மிருதுவாகவும், வசீகரமாகவும் மாறும்.

    வேக்சிங்கை தவிர்க்கவும்:

    சில பெண்கள் புருவங்களை ஒழுங்கு படுத்துவதற்கு, அந்த இடத்தில் வேக்சிங் செய்வது, பிளேடு கொண்டு புருவ முடிகளை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது சருமத்தையும், முடி வளர்ச்சியையும் பாதிக்கும். புருவத்தை சீர்படுத்த, திரெட்டிங் முறையை மட்டுமே கையாள வேண்டும். புருவத்தின் மேல்பகுதியிலுள்ள முடிகளை நீக்காமல், கீழ் பகுதியில் உள்ள முடிகளை மட்டும் நீக்கினால். அதன் வடிவம் அழகாக அமையும்.

    முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகள்:

    புருவங்களை ஒழுங்குபடுத்தும் போது. உங்கள் முக வடிவத்துக்கு ஏற்ற புருவ அமைப்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், புருவ முடிகளை அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கும் வகையில் அமைத்தால் அழகாக இருக்கும். திரெட்டிங் செய்யும் போது, புருவங்கள் உயர்ந்து வளையும் வகையில் அமைத்தால் முக அழகை மேம்படுத்திக் காட்டும்.

    ஓவல் வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கன்னத்தை விட நெற்றி சற்று அகலமாக இருக்கும். இவர்கள் மெல்லிய புருவ அமைப்பை தவிர்க்க வேண்டும். புருவங்கள் அடர்த்தியாகலாம். இருக்குமாறு அமைக்கலாம்.

    இதய வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு, கூர்மையான கன்னம், பரந்த நெற்றி இருக்கும். இவர்கள் அரைவட்ட வடிவ புருவ அமைப்பை தேர்வு செய்யலாம். இது முகத்தை மேலும் அழகாகக் காட்டும்.

    செவ்வக வடிவ முக அமைப்பு கொண்டவர்கள். மெல்லிய வளைவு இருக்குமாறு, புருவத்தை சீரமைக்கலாம். புருவங்கள் ஆரம்பிக்கும் இடங்களில் நேராகவும், அவை முடியும் இடங்களில் மட்டும் லேசாக வளைந்து இருக்குமாறும் செய்யலாம்.

    • தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படும்.
    • உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

    தொடைகளின் உள்பகுதி மற்றும் தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படுவது சந்திக்கும் பிரச்சினையாகும். நடக்கும்போது இரண்டு தொடைகளும் உராய்வது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அதிகப்படியாக மெலனின் உற்பத்தி ஆவது என இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இதை போக்குவதற்கு ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது. உங்கள் சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே, தொடைப்பகுதியில் இருக்கும் கருமையை நீக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    தொடைப் பகுதியில் மட்டுமின்றி. உடலின் மற்ற இடங்களில் படிந்துள்ள கருமையையும் போக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உண்டு. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, கருமை நிறத்தை மறையச் செய்வதோடு. சேதமடைந்த சரும செல்களையும் சீர்படுத்தும்.

    அரை முடி எலுமிச்சம் பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சருமத்தில் கருமை இடங்களில் பூசவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் மிருதுவாக தேய்த்து சுத்தம் செய்யவும்.

    பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உள்ளது. இது சருமத்தின் கடினத் தன்மையை போக்கி மிருதுவாக்கும். சொரசொரப்பான மேற்புற தோலை நீக்கி மென்மையாக்கும். பேக்கிங் சோடாவை சம அளவு தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை மென்மையான கிரீம் பதத்துக்கு வந்ததும், அதை சருமத்தில் கருமை உள்ள இடங்களில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

    ஆப்பிள் சிடார் வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து பயன்படுத்தினாலும் சருமத்தில் உள்ள கருமை மறையும். 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை தொடையின் உள்புரம் கருமை உள்ள பகுதியில் பூசவும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இது கருமை நிறத்தை போக்கி

    சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்டுத் தரும்.

    உருளைக்கிழங்கில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன்கள் உள்ளன. இதில் நிறைந்துள்ள

    வைட்டமின் சி, இறந்த சரும செல்களை எளிதாக நீக்கும். மேலும் உருளைக் கிழங்கில் இருக்கும் 'கேடகோலேஸ்' என்ற நொதி சருமத்தின் அடர் கருமை நிறத்தை எளிதில் நீக்கி அது மீண்டும் உருவாகாமல் தடுக்கும்.

    உருளைக் கிழங்கில் இருந்து சாறு எடுத்து சருமத்தின் மீது பூசலாம். இல்லாவிடில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அதை சருமத்தின் மீது நேரடியாக

    தேய்க்கலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமத்தில் படிந்துள்ள கருமை நீங்குவதை காணலாம்.

    சொரசொரப்பாக இருக்கும் தோலை மிருதுவாக மாற்ற மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகியவை சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டவையாகும்.

    • அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
    • இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.

    `பேஷியல்' என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒன்றாக, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது, ஹைட்ரா பேஷியல். இதுதான், இளம் வயதினரின் அபிமான பேஷியல் முறையாகி இருக்கிறது. காரணம், மற்ற பேஷியல் முறைகளை விட, முகப்பொலிவும், சரும ஆரோக்கியமும் இதில் அதிகம் என்பதால், இளம் வயதினர், அதிகமாக விரும்புகின்றனர்.

    அது என்ன ஹைட்ரா பேஷியல், இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? ஹைட்ரா பேஷியல் என்பது சருமத்தை சுத்தப்படுத்தவும், நீரேற்றமாகவும் (ஹைட்ரேட்) வைத்துக்கொள்ள பயன்படும் நவீன பேஷியல் முறை. இதற்கு என பிரத்தியேக கருவிகள் உண்டு. அந்த கருவிகள், சரும நுண் துளைகளை சுத்தம் செய்து, அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றும் பணிகளை செய்யும். மேலும் சருமத்தை அழகுகூட்ட, பல்வேறு `சீரம்' வகைகளை பயன்படுத்துவதால், முகம் பொலிவாகிறது.

    இதுதான் அடிப்படை என்றாலும், டீன்-ஏஜ் வயதினரின் தேவைக்கு ஏற்ப, சீரம் வகைகளும், பூஸ்டர் வகைகளும் மாறுபடும்.

    பொதுவாக மூன்று விதமான முறைகளில் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. அதில் ஒன்று சிக்னேச்சர். இது 30 நிமிடங்கள் செய்யக்கூடியது. அடுத்தது, டீலக்ஸ். இது 45 நிமிடங்கள் செய்யக்கூடியது. இறுதியாக, பிளாட்டினம் வகை பேஷியல் 1 மணிநேரம் செய்யக்கூடியது. இந்த மூன்று பேஷியலிலும், சீரம் எனப்படும் முகப்பொலிவு எண்ணெய்களும், பூஸ்டர் எண்ணெய்களுமே மாறுபடும். மேலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம்... இப்படி சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும், சில நுணுக்கங்கள் மாறுபடும்.

    வயதான பிறகும், முகத்தை இளமையாக காட்டக்கூடிய சக்தி, இந்த பேஷியலுக்கு உண்டு. சரும வெடிப்புகளை நீக்கி, சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பருக்கள், வடுக்கள் போன்றவற்றையும் போக்கக்கூடியது. மேலும் இதில் 5-6 படிநிலைகள், 9 படி நிலைகள், 10, 11 என நிறைய படி நிலைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதாகவும், சரும அழகை மெருகேற்றுவதாகவும் அமைந்திருக்கிறது.

    அந்தவகையில், வெயில் பாதிப்பினால் கருப்பாகும் சருமத்தை மீட்டெடுப்பது, பிக்மென்டேஷன் பாதிப்பை சீர்செய்வது, தீக்காயங்களை மறைய வைப்பது... போன்ற பல நன்மைகள் இருப்பதினால் தான், எல்லா வயதினரும் இதனை விரும்புகின்றனர். பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்பி, இதை செய்கின்றனர்.

    கொஞ்ச நாட்களிலேயே இது பிரபலமாகி விட்டது என்பதால், நிறைய இடங்களில் இந்த பேஷியல் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம், முறையாக பயிற்சி பெற்றவர்களா...? என்பதை உறுதி செய்வது நல்லது. இது எளிமையான பிராசஸ்தான் என்றாலும், சருமத்தோடு சாலிஸ் லைக், கிளைகாளிக் போன்றவை பூசுவதால், முறையான கல்வியறிவு பெற்றவர்களிடம் பேஷியல் செய்வது நல்லது.

    சிலர் சுயமாகவே, வீட்டிலேயே செய்கிறார்கள். அதுவும் நல்லதுதான் என்றாலும், இதை அழகு நிலையங்களில் செய்துகொள்ளும்போது 100 சதவிகித முகப்பொலிவு கிடைக்கும். மேலும் சரும வல்லுநர்களின் ஆலோசனையும் கிடைக்கும்.

    • ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம்.
    • உதட்டுக்கு மேல் முடி முளைப்பது முக அழகையே கெடுத்து விடும்.

    உதட்டுக்கு மேல் முடி முளைப்பது பெண்களின் முக அழகையே கெடுத்து விடும். மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது இந்த முடியை நீக்க வேண்டுமென்று ரேசர் பயன்படுத்துவது, ஹேர் ரிமூவல் க்ரீம்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்வார்கள். ஆனால் ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம். அதோடு முடி வளர்ச்சியும் வேகமாகத் தூண்டப்படும். ஆனால் கீழ்வரும் சில இயற்கையான வழிமுறைகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உதட்டுக்கு மேலே உள்ள முடிகளை நீக்க முடியும்.

    வசம்பு

    அரை ஸ்பூன் வசம்பு பொடியை எடுத்து தண்ணீரில் திக்காக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தும் போது உதட்டுக்கு மேலுள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

    மஞ்சள்

    ஒரு ஸ்பூன் மஞ்சளை காய்ச்சாத பால் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி உதட்டுக்கு மேலே முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு உலர்ந்ததும் தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் நிரந்தரமாக வளராமல் தடுக்க முடியும். இதற்கு சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் இரண்டுமே பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

    படிகாரம்

    படிகாரம் என்பது ஒருவகையான உப்புக்கல். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த படிகாரம் சருமத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும். ஆண்களும் ஷேவிங் செய்யும்போது இதை பயன்படுத்தலாம். ரேசர் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது.

    கல்போன்று கடினமாக இருக்கும் இந்த படிகாரத்தை இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவு படிகாரத்துடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேலே முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முதல்முறையிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்துவர வேகமாக உதட்டுக்கு மேலே உள்ள முடி நிரந்தரமாக உதிர ஆரம்பிக்கும்.

    சர்க்கரை

    சர்க்கரை ஸ்கிரப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமாக உதடு மற்றும் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க முடியும். ஆனால் சர்க்கரையை லேசாக நுணுக்கி பயன்படுத்துங்கள். பெரிய பெரிய துகள்களாக இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

    ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டின்மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு மெதுவாக விரல்களால் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உதட்டுக்கு மேலே உள்ள மெல்லிய முடிகள் உதிர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரும்போது நிரந்தரமான முடிகள் நீங்கும்.

    ஜெலட்டின்

    ஜெலட்டின் பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும். இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும். அதோடு சருமத்திலுள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமம் மென்மையாக மாறும். காசு கொடுத்து விலையுயர்ந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது.

    ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு பழத்தின் சாறையும் சேர்த்து கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதை உதட்டின் மேற்பகுதியில் முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் அது நன்கு இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். பீல் ஆஃப் மாஸ்க் மாதிரி மெதுவாக பிரித்து எடுக்க அந்த ஜெலட்டின் மாஸ்க்கோடு சேர்த்து சின்ன சின்ன முடிகளும் வருவதை பார்க்க முடியும். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள முடிகள் நிரந்தரமான நீங்கும்.

    முட்டை

    சருமத்திலுள்ள முடிகளை நீக்குவதற்கும் சருமத்துக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கவும் முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இதை தொடர்ந்து மாஸ்க்காக சருமத்தில் அப்ளை செய்து வர மேல் உதட்டுக்கு மேலுள்ள முடி மற்றும் கன்னங்கள் என முகத்திலுள்ள மென்மையான முடிகள் நீங்கும்.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மேல் உதட்டின்மீது உள்ள முடிகளையும் முகத்திலுள்ள வேறு மெல்லிய முடிகளும் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மென்மையாக விரல்களால் தேய்த்து ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

    • காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
    • அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

    காபி:

    காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.

    அவுரி:

    அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    ரூபார்ப்:

    ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    பீட்ரூட் ஜூஸ்:

    பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.

    எலுமிச்சை சாறு:

    எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.

    சீமை சாமந்தி:

    இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.

    வாதுமை கொட்டை:

    கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    கேரட் சாறு:

    கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும். இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.

    தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன.

    கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.

    • புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
    • புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.

    பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.

    * தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

    * விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.

    * தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

    * கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.

    * முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதை காண முடியும்.

    * வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

    ×