search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair Smoothing"

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.
    • வீட்டிலே முடியை மென்மையாக்கலாம்.

    சிலருக்கு தலைமுடி வறண்டு ஒவ்வொரு முடியும் உடைந்து காணப்படும். இதனால் முடி கொட்டுதல் பிரச்சினை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை கூட பண்ண முடியாத அளவிற்கு வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க அனைவரும் பார்லருக்கு சென்று ஹேர் ஸ்மூத்தனிங் செய்வார்கள்.

     அப்படி செய்வதால் நம் முடி மென்மையாக ஆனாலும் இதனை தொடர்ந்து செய்தால் நாளடைவில் முடிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வீட்டிலே முடியை மென்மையாக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்

    வாழைப்பழம்- 2 (பச்சை வாழைப்பழத்தை தவிர)

    * முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதனை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

    * இப்போது இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து அதன் சாற்றினை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.

    * அடுத்து, இந்த உருளைக்கிழங்கு சாற்றுடன் கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதனை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை 15 நிமிடங்கள் வரை ஆறவைக்க வேண்டும். அதன்பிறகு, வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    இப்போது, இதனுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கிரீமினை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவு தாங்க ஹேர் ஸ்மூத்தனிங் கிரீம் தயார்.

    ×