search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhattisgarh CM"

    • சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார்.
    • பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 54 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ.க. தலைமை அறிவித்தது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் முதல் மந்திரியாக பதவியேற்றார். கவர்னர் அரிசந்தன் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய்க்சாய்க்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களின் முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக 5-மாநில தேர்தல்கள் கருதப்படுகிறது
    • ரூ.500 கோடிக்கு மேல் பூபேஷ் பாகேல் பெற்றதாக அமலாக்க துறை கண்டுபிடித்தது

    இம்மாத இறுதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்களை அரசியல் கட்சிகள் முன்னோட்டமாக கருதுவதால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு புறமும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறுபுறமும் இந்த 5 மாநிலங்களிலும் வெல்வதற்கு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில், "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" எனும் மென்பொருள் செயலியை உருவாக்கி, அதன் மூலம் மக்களை பெருமளவு பணம் இழக்க செய்து லாபம் சம்பாதித்த அந்நிறுவனர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருப்பதாகவும், இதை அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

    சத்தீஸ்கரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேலின் ஆட்சி நடைபெறுகிறது.

    இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து, அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. இவ்வாறு பிரச்சாரம் செய்வதாக கூறியது.

    இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஊழல் குற்றச்சாட்டை வைப்பது பா.ஜ.க.விற்கு வழக்கமாகி வருகிறது. எதிர்கட்சிகளை அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் துன்புறுத்துவதும் வழக்கம். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வை பதவியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்" என தெரிவித்தார்.

    • இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
    • காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.

    ராய்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சத்தீஷ்கர் முதல்-மந்திரி ராமன் சிங்குக்கு எதிராக வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #BJP #Congress #KarunaShukla
    ராய்ப்பூர்:

    பா.ஜனதா ஆட்சி நடைபெறும் சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மக்கள் செல்வாக்கால் அசைக்க முடியாத முதல்- மந்திரியாக திகழும் ராமன் சிங்குக்கு இந்த தேர்தல் சவாலாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதற்கு காரணம் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அதிகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது.

    முதல்-மந்திரி ராமன் சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா நிறுத்தப்பட்டார். 3 முறை தொடர்ந்து முதல்- மந்திரியாக இருந்து வரும் ராமன்சிங் 4-வது முறையாக தனது ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சுக்லா போட்டியிடுகிறார்.

    நேற்று ராஜ்நந்த்கான் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முதல்- மந்திரி ராமன்சிங் மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அவர் மனுதாக்கல் செய்ததும் வாஜ்பாய் மருமகள் கருணா சுக்லா காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கருணா சுக்லா மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். அவருக்கு வயது 68.

    இவர் வாஜ்பாயின் மூத்த சகோதரர் மகள் ஆவார். 1980-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவில் கட்சி பணியாற்றினார்.

    ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலோடா பஜார் சட்டசபை தொகுதியில் 1993-ம் ஆண்டு பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சத்தீஷ்கர் மாநில பிரிவினைக்குப்பின் 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜஞ்ச்கிர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அடுத்து 2009-ல் கொர்பா தொகுதியில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார்.

    அதன்பிறகு கருணா சுக்லா பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிலாஸ்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.

    பின்னர் ஒதுங்கி இருந்த கருணா சுக்லா தற்போது மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக முதல்-மந்திரி ராமன்சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    சத்தீஷ்கரில் ராமன்சிங் தான் முதல்-மந்திரி பதவிக்கு பொறுத்தமானவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அவரை எதிர்த்து போட்டியிட கருணா சுக்லா தகுதியான தலைவர் இல்லை என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஸ்ரீவத்சவ் கூறினார். #BJP #Congress #KarunaShukla
    ×