search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் முதல்வர்"

    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக 5-மாநில தேர்தல்கள் கருதப்படுகிறது
    • ரூ.500 கோடிக்கு மேல் பூபேஷ் பாகேல் பெற்றதாக அமலாக்க துறை கண்டுபிடித்தது

    இம்மாத இறுதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்களை அரசியல் கட்சிகள் முன்னோட்டமாக கருதுவதால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு புறமும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறுபுறமும் இந்த 5 மாநிலங்களிலும் வெல்வதற்கு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில், "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" எனும் மென்பொருள் செயலியை உருவாக்கி, அதன் மூலம் மக்களை பெருமளவு பணம் இழக்க செய்து லாபம் சம்பாதித்த அந்நிறுவனர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருப்பதாகவும், இதை அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

    சத்தீஸ்கரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேலின் ஆட்சி நடைபெறுகிறது.

    இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து, அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. இவ்வாறு பிரச்சாரம் செய்வதாக கூறியது.

    இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஊழல் குற்றச்சாட்டை வைப்பது பா.ஜ.க.விற்கு வழக்கமாகி வருகிறது. எதிர்கட்சிகளை அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் துன்புறுத்துவதும் வழக்கம். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வை பதவியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்" என தெரிவித்தார்.

    • இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
    • காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.

    ராய்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த வழிபாட்டின்போது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார்.

    கௌரி- கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    மாநிலம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×