search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brain damage"

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
    • தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.

    கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.

    தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

    சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

     கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.

    கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.

    கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

     பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை  கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.

    • மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் தெரபி எனும் புதிய சிகிச்சை முறை.
    • மூளையின் காந்த ஆற்றலை அறிந்து கொள்ள கர்மா பீக் பிரைய்ன் அறிமுகப்படுத்தும் நவீன கருவி.

    சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ சேவை மற்றும் ஆய்வு மையம் கர்மா பீக் பிரைய்ன். இந்த சேவை மையம் ஆட்டிசம் மற்றும் மாற்று திறன் படைத்த சிறப்பு குழந்தைகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இந்த மையம், மூளை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கு நவீன கருவி மற்றும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    இந்நிறுவனம் தற்போது புதிதாக கண்டுபிடித்திருக்கும் பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து இந்த சிகிச்சையை நிறுவனம் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்தக் குழு மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு முன்னர் குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எந்த மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்துகிறது.

    நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை நியூரோரெஸ்டரேசன் மூலம் மேம்படுத்துவதிலும் இந்த குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தற்போது இவர்கள் கண்டறிந்திருக்கும் புதிய சிகிச்சை முறை வெகுவாக பலன் அளித்து வருகிறது. மேலும் இது நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், இந்த சிகிச்சையை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

    கர்மா பீக் பிரைய்ன் கண்டறிந்திருக்கும் தனித்துவமான சிகிச்சை முறை தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மேம்பட்டது. இதன் மூலம் நோய்க்கான அறிகுறிகளையும், நோய்க்கானக் காரணங்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கவனம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், மனப்பதட்டம், மன இறுக்கம், நடத்தை பிரச்சனைகள், உறக்கமின்மை, ஒற்றைத் தலைவலி... உள்ளிட்ட ஏராளமான மூளை தொடர்பான நரம்பியல் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சைகளை தேர்வு செய்து, அதனை எளிய முறையில் வழங்கி நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

    இந்த சிகிச்சை முறைப்படி நோயாளிகளின் மூளை பகுதியை இசிஜி அல்லது ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிவது போல்.. மூளை மேப்பிங் எனப்படும் முறையை எனும் கருவியை பயன்படுத்தி மூளையின் மின்னாற்றல், அதன் இயங்குதிறன் மற்றும் செயல்பாட்டை துல்லியமாக அளவிட இயலும். இது தொடர்பான உங்களுக்கு இலவச சேவை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள எங்களுடைய contact@karmapeakbrain.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த இலவச சேவைகளை பயன்படுத்திக் கொண்டு உங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூளை மேப்பிங் செய்து உங்களுடைய மூளையின் செயல்பாடு, இயங்குத்திறன், மின்னாற்றல் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் மேம்பட்ட தரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்.

    மூளை பாதித்த சிறுவனை கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கடலூரைச் சேர்ந்தவர் திருமேனி. டெய்லர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் பிறந்தது முதல் அவனால் பேச முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதால் மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அவன் குணமடையவில்லை. தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு ஏற்படுகிறது.

    இதை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் எனது குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறது. நோய் பாதிப்பை குணப்படுத்த முடியாத நிலையில் பாதிப்புக்கு உள்ளானவரை கருணைக் கொலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, எனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சிறுவன் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளானா? என்பதை கண்டறியவும், அவனை கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கவும் தகுதியான மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக்குழுவில் இடம் பெறும் மருத்துவர்கள் 2 வாரங்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    அப்பல்லோ மருத்துவ மனையின் நரம்பியல் துறை பேராசிரியர் ரெஜினால்டு, ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன், மத்திய அரசின் சுகாதார திட்டங்களுக்கான தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோர் அந்த மருத்துவர்கள் குழுவை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    விசாரணை அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×