search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூளை பாதிப்பு"

    • வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
    • தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.

    கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.

    தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

    சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.

     கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.

    கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.

    கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

     பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை  கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.

    • மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் தெரபி எனும் புதிய சிகிச்சை முறை.
    • மூளையின் காந்த ஆற்றலை அறிந்து கொள்ள கர்மா பீக் பிரைய்ன் அறிமுகப்படுத்தும் நவீன கருவி.

    சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ சேவை மற்றும் ஆய்வு மையம் கர்மா பீக் பிரைய்ன். இந்த சேவை மையம் ஆட்டிசம் மற்றும் மாற்று திறன் படைத்த சிறப்பு குழந்தைகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இந்த மையம், மூளை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கு நவீன கருவி மற்றும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    இந்நிறுவனம் தற்போது புதிதாக கண்டுபிடித்திருக்கும் பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து இந்த சிகிச்சையை நிறுவனம் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்தக் குழு மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு முன்னர் குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எந்த மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்துகிறது.

    நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை நியூரோரெஸ்டரேசன் மூலம் மேம்படுத்துவதிலும் இந்த குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தற்போது இவர்கள் கண்டறிந்திருக்கும் புதிய சிகிச்சை முறை வெகுவாக பலன் அளித்து வருகிறது. மேலும் இது நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், இந்த சிகிச்சையை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

    கர்மா பீக் பிரைய்ன் கண்டறிந்திருக்கும் தனித்துவமான சிகிச்சை முறை தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மேம்பட்டது. இதன் மூலம் நோய்க்கான அறிகுறிகளையும், நோய்க்கானக் காரணங்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கவனம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், மனப்பதட்டம், மன இறுக்கம், நடத்தை பிரச்சனைகள், உறக்கமின்மை, ஒற்றைத் தலைவலி... உள்ளிட்ட ஏராளமான மூளை தொடர்பான நரம்பியல் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சைகளை தேர்வு செய்து, அதனை எளிய முறையில் வழங்கி நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

    இந்த சிகிச்சை முறைப்படி நோயாளிகளின் மூளை பகுதியை இசிஜி அல்லது ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிவது போல்.. மூளை மேப்பிங் எனப்படும் முறையை எனும் கருவியை பயன்படுத்தி மூளையின் மின்னாற்றல், அதன் இயங்குதிறன் மற்றும் செயல்பாட்டை துல்லியமாக அளவிட இயலும். இது தொடர்பான உங்களுக்கு இலவச சேவை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள எங்களுடைய contact@karmapeakbrain.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த இலவச சேவைகளை பயன்படுத்திக் கொண்டு உங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூளை மேப்பிங் செய்து உங்களுடைய மூளையின் செயல்பாடு, இயங்குத்திறன், மின்னாற்றல் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் மேம்பட்ட தரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்.

    ×