என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "4 killed"
அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையை கடந்தது. அதனால் பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன.
மேலும் லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில் சிக்கி தவித்த தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்றபோதும் பலியாகினர். ஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வீட்டின் அருகே மரம் விழுந்து கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை.
இதற்கிடையே புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். ஜேக்சான் வில்லேவில் இரவில் ஓட்டல் மீது மரம் விழுந்தது. அங்கு தங்கியிருந்த 60 பேர் மீட்கப்பட்டனர்.
நியூபெர்ன் மற்றும் வடக்கு கரோலினாவில் வீடுகளுக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்தது. அங்கு தவித்துக் கொண்டிருந்த 30 ஆயிரம் பேர் பத்திரமாகமீட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். நிலைமை சீராகி மின் வினியோகம் கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே புளோரென்ஸ் புயல் தெற்கு கரோலினாவுக்குள் ஊடுருவியிருப்பதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பலத்த மழை பெய்யும். இதன்மூலம் 18 லட்சம் கோடி காலன்கள் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் பாதித்த வடக்கு கரோலினாவுக்கு அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #HurricaneFlorence
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இன்று காலை 6 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
காலை 8.45 மணி அளவில் பஸ் பத்தினம்திட்டா அருகே மூலக்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பத்தினம்திட்டாவில் இருந்து ஆலப்புழா நோக்கி ஒரு மினி லாரி சென்றது.
எதிர்பாரதவிதமாக அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேராக பயங்கரமாக மோதின. இதில் மினி லாரியில் இருந்த பாபு, சஜீவ், ஆசாத், மற்றொரு பாபு ஆகிய 4 பேர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ்சில் இருந்த 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து செங்கனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்றனர். பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்