search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 killed"

    அமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உள்பட் 5 பேர் பலியாகினர். #HurricaneFlorence
    வாஷிங்டன்:

    அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் நேற்று கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.

    வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் நேற்று காலை புயல் கரையை கடந்தது. அதனால் பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

    கடும் மழை பெய்ததால், வடக்கு கரோலினா பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன.

    அதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வடக்கு கரோலினா நகரம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் இருளில் மூழ்கின. அங்குள்ள தனியார் டெலிவி‌ஷன் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.


    புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகிவிட்டனர். வில்மிங்டனில் ஒரு பெண் தனது குழந்தையுடன் பலியானார். இவர்களது வீட்டின் மீது மரம் விழுந்தது. அதில் அவர்கள் பலியாகினர். இறந்த பெண்ணின் கணவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் லெனாயிர் கவுன்டி பகுதியில் 70 வயது முதியவர் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மின்சாரம் தாக்கியும், மற்றொருவர் வீட்டின் வெளியே காற்றில் சிக்கி தவித்த தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்றபோதும் பலியாகினர். ஹாம்ஸ்டட் நகரில் ஒரு பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வீட்டின் அருகே மரம் விழுந்து கிடந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியவில்லை.

    இதற்கிடையே புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். ஜேக்சான் வில்லேவில் இரவில் ஓட்டல் மீது மரம் விழுந்தது. அங்கு தங்கியிருந்த 60 பேர் மீட்கப்பட்டனர்.

    நியூபெர்ன் மற்றும் வடக்கு கரோலினாவில் வீடுகளுக்குள் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்தது. அங்கு தவித்துக் கொண்டிருந்த 30 ஆயிரம் பேர் பத்திரமாகமீட்டு வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 17 லட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். நிலைமை சீராகி மின் வினியோகம் கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே புளோரென்ஸ் புயல் தெற்கு கரோலினாவுக்குள் ஊடுருவியிருப்பதாக வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பலத்த மழை பெய்யும். இதன்மூலம் 18 லட்சம் கோடி காலன்கள் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புயல் பாதித்த வடக்கு கரோலினாவுக்கு அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #HurricaneFlorence
    ஆப்கானிஸ்தானின் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #KabulSuicideAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் மல்யுத்தம் பயிற்சி மையம் அமைந்துள்ளது.  இந்த மையத்தில் சிலர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

    இந்நிலையில்,  தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பயிற்சி மையத்தில் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabulSuicideAttack
    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் சென்ற பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #Accident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர். 

    நியூ மெக்சிகோ நகர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. பேருந்தில் உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
     #Accident
    பத்தினம்திட்டாவில் அரசு பஸ்-மினி லாரி நேருக்குநேர் மோதலில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இன்று காலை 6 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    காலை 8.45 மணி அளவில் பஸ் பத்தினம்திட்டா அருகே மூலக்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பத்தினம்திட்டாவில் இருந்து ஆலப்புழா நோக்கி ஒரு மினி லாரி சென்றது.

    எதிர்பாரதவிதமாக அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேராக பயங்கரமாக மோதின. இதில் மினி லாரியில் இருந்த பாபு, சஜீவ், ஆசாத், மற்றொரு பாபு ஆகிய 4 பேர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ்சில் இருந்த 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

    விபத்து பற்றிய தகவல் அறிந்து செங்கனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்றனர். பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Accident
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் புறநகர் வழிச்சாலையில் இன்று அதிகாலை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அங்கு வந்த கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். #Accident
    ×