என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பத்தினம்திட்டாவில் அரசு பஸ்-மினி லாரி நேருக்குநேர் மோதல் - 4 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இன்று காலை 6 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
காலை 8.45 மணி அளவில் பஸ் பத்தினம்திட்டா அருகே மூலக்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பத்தினம்திட்டாவில் இருந்து ஆலப்புழா நோக்கி ஒரு மினி லாரி சென்றது.
எதிர்பாரதவிதமாக அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேராக பயங்கரமாக மோதின. இதில் மினி லாரியில் இருந்த பாபு, சஜீவ், ஆசாத், மற்றொரு பாபு ஆகிய 4 பேர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ்சில் இருந்த 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து செங்கனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்றனர். பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்