search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் சோகம் - லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
    X

    தஞ்சையில் சோகம் - லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

    தஞ்சாவூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Accident
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் புறநகர் வழிச்சாலையில் இன்று அதிகாலை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அங்கு வந்த கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். #Accident
    Next Story
    ×