search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2point0"

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் இன்று நடக்கிறது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. 

    உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.



    ரஜினி படம் என்றாலே அவரது ரசிகர்களைத் தாண்டி பல மட்டங்களிலும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றி பெற்றதால், படத்தின் டிரெய்லர் வெளியீடு ஆவலுடன் எதிர்நோக்கப்பட்டது. இணையத்தில் டிரெய்லர் இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.

    முன்னதாக காலை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பிரத்யேகமாகப் படத்தின் சில பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புது விதமான டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் சவுண்டு சிஸ்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கப்படுகிறது. #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 2.0. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பற்றிய முக்கிய வி‌ஷயங்களை இயக்குனர் சங்கர் பகிர்ந்துள்ளார். 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது.

    எனவே இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகி இருக்கிறார்கள். அர்னால்டும் ஆர்வமாக இருந்து இருக்கிறார். ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்குமான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போயிருக்கிறது.



    அடுத்து ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகி இருக்கிறார்கள். அவர் சங்கரிடம் இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள். இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது.

    அவரது மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார். 2.0 படத்தில் மொத்தம் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். #2Point0 #Rajinikanth #KamalHaasan #Shankar

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ஐந்தாம் விசை வருவதாக குறிப்பிட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #2Point0
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் இணைந்து நடித்துள்ள படம் `2.0'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தின் டிரைலர் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், அக்‌‌ஷய் குமார் ஏற்றுள்ள கதாபாத்திரம் தனது கையில் உடைந்த செல்போனை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

    மேலும் “ஐந்தாம் விசை வருகிறது” எனவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ‌ஷங்கர். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதால் தற்போது படத்தின் மீது புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயற்பியல் உலகில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த அணுக்கரு விசை மற்றும் தளர்ந்த அணுக்கரு விசை என நான்கு விசைகளே அகில விசைகளாக அறியப்பட்டு வருகின்றன.

    பிரபஞ்சத்தில் ஐந்தாவதாகவும்கூட ஒரு விசை இருப்பதாகப் பல்வேறு கோட்பாடுகள் உலவுகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியிலும் பலர் ஈடுபட்டுள்ளார்கள். இப்படியான சூழலில் இந்தப் படத்திற்கு ஐந்தாம் விசை தியரியைக் கனெக்ட் செய்திருக்கும் காரணத்தால் அதுகுறித்த படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 29-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. #2Point0 #Rajinikanth #FifthForce

    சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth


    ரஜினி தற்போது `2.0' மற்றும் `பேட்ட' படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில், ரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் `2.0' படத்தின் டிரைலர் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

    நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு முன்பாக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் `2.0'. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் ராஜாளி, எந்திர லோகத்து சுந்தரியே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போனுக்கு அடிமையாக இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குநர் ஷங்கர் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் 2.0. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் நிறுவனங்களால் தாமதம் ஆனது.

    பல நிறுவனங்களிடம் கிராபிக்ஸ் பணிகள் கைமாறி தற்போது வேறு ஒரு நிறுவனத்திடம் கிராபிக்ஸ் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் தள்ளிப்போடாமல் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்று சங்கர் உறுதியாக இருக்கிறார்.

    75 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள்.



    3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் ‌ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை சங்கர் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என்பதுதான் அது. கிராபிக்ஸ் பணி முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசைக்கு குறைந்தது ஒரு மாதமாவது தனக்கு வேண்டும் எனக் கேட்டிருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். #2Point0 #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் நேற்று காலை வெளியாகிய நிலையில், ஒரு நாளில் படத்தின் டீசர் தமிழ் மற்றும் இந்தியில் பெரும் சாதனை படைத்துள்ளது. #2Point0 #Rajinikanth
    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியான நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியது. நேற்று காலை 9 மணிக்கு வெளியான 2.0 தமிழ் டீசரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் வேகமாக ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் டீசர் என்ற பெருமையை 2.0 படைத்துள்ளது.

    மேலும் படத்தின் டீசரை சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்தியில் 2.0 டீசரை 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 4.5 லட்சம் பேர் டீசரை லைக் செய்துள்ளனர். தெலுங்கில் இந்த டீசரை இதுவரை சுமார் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 

    மொத்தமாக இதுவரை 2.0 டீசரை 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். 



    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என மாபெரும் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. #2Point0 #Rajinikanth 

    2.0 படத்தின் டீசர்:


    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் கதை பற்றிய சிறய விளக்கத்தை கீழே பார்ப்போம், #2Point0 #Rajinikanth
    உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில் படம் நவம்பர் 29- ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. 

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ‌ஷங்கர், இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.



    2.0 படத்தின் டீசரில் இருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. தொழில்நுட்ப உலகத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணமாக உள்ளன. தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சியானது அபரிமிதமானது. அந்த வகையில் செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.

    சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது. அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.

    மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை. இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற தான் உருவாக்கி சிட்டி ரோபோவை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் வசீகரன். அந்த ரோபோவுக்கும், பறவை வில்லனுக்குமான மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம். இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போன் அடிமையாகி இருக்கின்றனர். அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது.



    எனினும் அதனை உறுதிப்படுத்த நவம்பர் 29 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். 

    படத்தில் பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்‌‌ஷய் குமார். படத்தின் நீளம் வெறும் 100 நிமிடங்கள் தான் என்பதால் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே இருக்க வைத்திருக்கும் என்கிறார்கள். படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல், காமெடி காட்சிகள் கூட இல்லையாம். முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படும் என்கிறார்கள். #2Point0 #Rajinikanth #AshayKumar

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இழுத்தடிப்பதால் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2.0 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

    ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.

    ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த படத்தை 2.0 மிஞ்சும் என்றும் கூறுகின்றனர். 



    இந்த நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. எனினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AmyJackson

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்‘ என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ‌ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.



    படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ‌ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.

    ரஜினிகாந்துடன், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. #2Point0 #Rajinikanth

    கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் 3டியில் உருவாகி இருக்கிறது.

    படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.



    டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியான படக்குழு கிராபிக்ஸ் வேலைகளை மும்முரப்படுத்த தொடங்கியது. #2Point0 #Rajinikanth

    ×