என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.

    மதுரை:

    வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை தோனி இன்று திறந்து வைத்துள்ளார்.

    • முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
    • தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே

    ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.

    ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.

    டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    தாலிபான்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை முத்தாகி சந்திப்பார் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஜியா அகமது தகால் தெரிவித்தார்.

    இதுவரை தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே. ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்ட நிலையில் இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் முத்தாகிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    • செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

    விநாயகப் பெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்காக மேற்கொள்ளும் விரதம் தான் சங்கடஹர சதுர்த்தி. நாம் எப்போதும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சங்கடஹர சதுர்த்தியைத் தான் மஹா சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுவோம். ஆனால் மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியை அப்படியே விட்டுவிடுவோம்.

    மஹாசங்கடஹர சதுர்த்தியைப் போலவே மாதம்தோறும் வரும் சதுர்த்தியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்து விநாயகரின் அருளை முழுமையாகப் பெற முடியும்.

    குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அந்த வகையில், நாளை வரும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்...

    * சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள் அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்.

    * வீடு வாசல் துடைத்து மாக்கோளமிட்டு பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

    * விநாயகரின் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து விளக்கேற்றி அவரது முகம் பார்த்து மனமுறுகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

    * பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால் காலை எழுந்தவுடன் விநாயகரின் முகம் பார்த்து தரிசித்து       மாலையில் சந்திரனை தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    * வேண்டுதலின் போது விநாயகருக்கு அருகம்புல் படைக்கலாம். விரதம் இருக்க முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம்.

    * விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம், முதலானவற்றை சாப்பிடலாம். இப்படியும் விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத பண்டம் முதலான எளிமையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

    * விரதத்தை முடிக்க மாலைப்பொழுதில் விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் சார்த்தி விநாயகருக்கு பிடித்த சுண்டல், கொழுக்கட்டை அல்லது மோதகம் முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம் .



    * பூஜையின் நிறைவில் உங்களால் முடிந்த பிரசாதத்தை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம்.

    * மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் விலகும்.

    * நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

    மேலும் சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், திருமணத் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு.

    கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர்
    • தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.

    இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

    கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 480-க்கும், கிராம் ரூ.11 ஆயிரத்து 185-க்கும் விற்பனையானது.

    புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.120உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    • தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர்.

    சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.

    இருப்பினும் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அம்மாநில பா.ஜ.க.வினர் கோழிக்கோட்டில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். மேலும் பாலக்காட்டிலும் பாஜகவினர் போராட்டம் நடைபெற்றது. 

    இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக வேண்டும், கடந்த 30 ஆண்டுகால கோவில் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது

    பாலக்காடு மற்றும் கோழிக்கோட்டில் நடந்த போரட்டங்களின்போது பாஜகவினரை களைந்து செல்ல அறிவுறுத்தியும் களைந்து செல்லாததால் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாஜகவினர் பலர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே அமைச்சர் வாசவன் பதவி விலகக் கோரி இன்று சட்டமன்றக் கூட்டத்திலும் அமளி ஏற்பட்டது. இதனால் கேரள சட்டமன்றம் தொடர்ந்து நான்காவது நாளாக முடக்கியது.  மேலும் அவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

    • மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?
    • திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    ராணிப்பேட்டை போல் திருச்சியிலும் அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனின் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என அவர் கூறியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இது என்ன மாதிரியான மனநிலை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

    ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், "ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை" என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன்.

    உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

    ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார்.
    • படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் வரலாற்று கதையம்சத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் நடித்துள்ளனர். இது அவரது 25-வது படமாகும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.

    • விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'.
    • ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

    ராம்போ:

    அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

    ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது. பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க நாளை முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...

    மிராய்

    கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் 'மிராய்'. மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்துள்ள இப்படம் விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது.

    அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இப்படம் கடந்த மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. இந்த நிலையில், 'மிராய்' படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    வேடுவன்

    தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. இவர் தற்போது பவன் இயக்கத்தில் 'வேடுவன்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'வேடுவன்' வெப் தொடர் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வெப் தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.



    வார் 2

    ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 'வார் 2' படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

    பாம்

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'. இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    உருட்டு உருட்டு

    இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் வெளியான படம் 'உருட்டு உருட்டு'. இதில் கதாநாயகனாக நாகேஷின் பேரன் கஜேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    திரிபநாதரி பார்பரிக்

    மோகன் ஸ்ரீவத்சா இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான படம் 'திரிபநாதரி பார்பரிக்'. இதில் சத்யராஜ், சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

    • ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
    • பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபாஜி குகைக்கு ரஜினிகாந்த் சென்றார். இந்நிலையில், பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார். இங்கு ஒரு வாரம் அவர் தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயுள்ளன.

    • அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
    • பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.

    அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

    ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.  

    ×