என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம்
    • ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாட்டில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
    • ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும்

    ஆப்கனிஸ்தானில் 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.

    ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.

    'ரேடியோ பேகம்' தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.

    தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிக்கையில், 'ரேடியோ பேகம்' செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.

    பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.     

    • சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
    • கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னையில் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக! எடப்பாடி வாழ்க என கோஷங்களை முழங்கினர். அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை வெட்டினார்.

    கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், சோமசுந்தரம், அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, ரமணா, சின்னையா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், அசோக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மற்றும் சந்தான கிருஷ்ணன்.

    கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி.ஆயிரம் விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
    • ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.

    அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
    • நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

    அப்போது செங்கோட்டையன் பேசும் போது,

    அ.தி.மு.க ஒரு அசைக்க முடியாத இயக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி வரும். இதனால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மீண்டும் செய்து தர முடியும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு நன்மையும் நடைபெறவில்லை. 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றார்.

    இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அப்போது நிருபர்கள் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஏன்? பங்கேற்கவில்லை என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும் என்றார்.

    வெள்ளாடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.

    • ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
    • எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.

    ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(சிஎஸ்யு/சிடியு) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    நேற்று (பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகலின்படி ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி(ஏ.எப்.டி) 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம் இது. 

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • தங்கும் அறையிலேயே மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    கோயம்பத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வெளியில் கஞ்சா வாங்குவது மிகவும் ரிஸ்க் ஆகிவிட்டதால் அறையிலேயே வளர்த்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
    • வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது.

    அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது. இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அதிபர் டிரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த வாஷிங்டன் நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர் இந்த தடையை வாஷிங்டன் தலைமை நீதிபதி கார்ல் நிகோலஸ் நீக்கி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை அதிபர் டிரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும் விடுப்பில் அனுப்புவதாகவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும்.
    • சென்னையில் மட்டும் 39 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-8-2024 அன்று சுதந்திர தின விழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29-10-24 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தன. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு கடைகளும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை வெளி மார்க்கெட்டில் 70 ரூபாய் ஆகும். ஆனால் முதல்வர் மருந்தகத்தில் ரூ.11-க்கு கிடைக்கிறது.

    பிரதமர் பெயரிலான மக்கள் மருந்தகத்தில் இது ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

    அதாவது தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைக்காக மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவழித்தவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகத்தில் 1000 ரூபாய் இருந்தால் இந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்கு வதில் சேமிக்க முடியும்.

    இந்த மலிவு விலை மருந்தகத்தை சென்னை பாண்டிபஜாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கோட்டூர்புரம் நூலகத்திற்கு சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ரா ஜீட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்து மருந்தகங்களுக்கு வழங்கப்பட உள்ளது. வெளிச்சந்ததையை விட 75 சதவீதம், மத்திய அரசின் மருந்தகங்களை விட 20 சதவீதம் வரை குறைவாக முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகிறது.

    மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    2006-2011 கால கட்டத்தில் கூட்டுறவு மருந்து கடைகள் என்ற பெயரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக தான் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டது.

    இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்துள்ளார்.

    சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    * கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.

    * ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.

    * மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.

    * திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.

    * கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.

    * காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்.

    * கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.

    * நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.

    * கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.

    * சாமியர்ஸ் சாலை, நந்தனம்.

    * லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.

    * காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி.

    * வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.

    * மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.

    * நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.

    * சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.

    * லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.

    * செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.

    * பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,

    * சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.

    * மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம்.

    * புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.

    * வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.

    * பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.

    * காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.

    * 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர்.

    * வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.

    * 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.

    * 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.

    * 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.

    * துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.

    * 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.

    * பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.

    * 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.

    * ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை.

    * 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.

    * பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.

    * பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை,

    * பெரியார் நகர், கொளத்தூர்.

    * தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.

    • இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.
    • விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது

    ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழக்கில் முதற்கட்ட விசாரணை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கர்நாடகாவில் அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக மாநில லோக் அயுக்தா போலீசார் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறி இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் திபாங்கர் தத்தா, சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஒவ்வொரு வழக்கிலும் முதற்கட்ட விசாரணையை கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட சில வழக்குகளில் முதற்கட்ட விசாரணை தேவைப்பட்டாலும், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது அத்தகைய விசாரணை கட்டாயமில்லை.

    முதல்கட்ட விசாரணையின் நோக்கம், பெறப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அல்ல. மாறாக அது ஒரு கைது செய்யக்கூடிய குற்றமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும்.

    வழக்கு தொடர்பான ஆதாரத்தை உயர் அதிகாரி ஒருவர் கைப்பற்றினால், அது விரிவானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால், முதல் பார்வையிலேயே குற்றம் வெளிப்படையாகக் கண்டுபிடிக்கப்பட்டால் முதல்கட்ட விசாரணையைத் தவிர்க்கலாம்.

    இந்த விவகாரத்தில், முதல்கட்ட விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் தவறு செய்துள்ளது என்று தெரிவித்தனர். தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர் மீதான வழக்கை விசாரிக்க உத்தரவிட்டனர்.   

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    19-02-2025- ஒரு கிராம் ரூ.108

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    ×