என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.
    • எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம்.

    கடந்த எட்டு நாட்களாக பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல விமானங்களை ரத்து செய்து இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் தந்தது.

    இந்நிலையில் இப்போது அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 5 ஆம் தேதி, இண்டிகோ 700 விமானங்களை மட்டுமே இயக்க முடிந்தது. அதன் பின்னர், அது படிப்படியாக ஆனால் சீராக மேம்பட்டுள்ளது.

    டிசம்பர் 6 ஆம் தேதி 1,500 விமானங்களும், டிசம்பர் 7 ஆம் தேதி 1,650 விமானங்களும், டிசம்பர் 8 ஆம் தேதி 1,800 விமானங்களும், இன்று(நேற்று) 1,800க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டன.

    நேற்று(திங்கள்கிழமை) முதல், எங்கள் நெட்வொர்க்கில் உள்ள 138 நகரங்களுக்கும் நாங்கள் விமானங்களை இயக்குகிறோம், மேலும் எங்கள் நேரமின்மையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

    எங்கள் செயல்பாடுகளில் பெரும் இடையூறு ஏற்பட்டபோது நாங்கள் உங்களை சிரமப்படுத்தினோம், அதற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதற்கும், மீண்டும் இண்டிகோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததற்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதை 10 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

    • தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
    • காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும்.

    நேற்று மக்களவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்கும் ஜனநாயக நிறுவனங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும். இந்தியா 1.5 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நெய்த துணியைப் போன்றது, வாக்குகள் இல்லாமல், இந்த நாட்டில் எந்த நிறுவனங்களும் இருக்காது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருவதாக கூறினார்.

    ஆர்எஸ்எஸ் குறித்து ராகுலின் பேச்சைக் கேட்ட பாஜக வரிசை எம்பிக்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் தேவையில்லாததை பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்தார்.  

    • பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், பவனுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடிக்கிறார்.

    இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் தத்லானி இதை பாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த முழு பாடலும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

    • பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
    • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்

    மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

    தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

    இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.

    அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.

    இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.

    காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.

    நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.

    ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

    சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    • தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

    பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

    நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேநேரம் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.   

    • இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
    • அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்றது.

    விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன், உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம், ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்  உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயைச் சேர்ந்த கேரள தொழிலதிபர் ராஜ் ஹீத் இப்ரானுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்த விஷயம் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் புகைப்படங்களை பகிர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் நிவேதா மற்றும் ராஜ் ஹீத் இருவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து அந்த புகைப்படங்களை தற்போது நீக்கியுள்ளனர். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் unfollow செய்துள்ளனர். இதனால் திருமணம் நின்றுபோனதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அண்மையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் நின்ற நிலையில் அதே பாணியில் நிவேதா திருமணமும் நின்றதாக பலர் புறணி பேசி வருகின்றனர்.  

    • முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
    • மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

    முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஸ்தீப் பந்துவீசிய 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் 14 ரன்னில் சுருண்டார். டேவிட் மில்லர் 1 ரன், டோனோவன் பெரீரா 5 ரன்கள், மார்கோ ஜான்சன் 12 ரன்கள் மட்டும் ஸ்கோர் செய்து வெளியேற மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

     ஒரு வழியாக அவரும் 22 ரன்களில் மூட்டையை கட்ட 12.3 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.   

    • வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம்
    • இந்தியாவில் நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமை இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது

    இன்னும் சிலநாட்களில் நாம் புத்தாண்டை பூரிக்க இருக்கிறோம். அதாவது 2025 முடியப் போகிறது. ஒவ்வொரு வருடம் முடியும்போதும் அந்த வருடத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவுக்கூறுவோம். அப்படிதான் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை, அதாவது நீங்கள் டிரெண்ட் செய்த முக்கிய நிகழ்வுகளை, தகவல்களை உங்களுக்கு நினைவுப்படுத்தி வருகிறோம்.

    அந்த வரிசையில் இன்றைய தலைப்பு 'வரி'. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு என விஜயகாந்த் கூறியதுபோல வரி என்ற வார்த்தையே கேட்டாலே அனைவருக்கும் ரத்தம் கொதிக்கும் அளவிற்கு கோபம் வரலாம். அனைவரின் கோபமும் நியாமானதுதான். மக்களின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன?

    வரி என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். இந்த நிதியைக் கொண்டே அரசாங்கம் பொதுச் சேவைகளான சாலைகள் அமைத்தல், மருத்துவமனைகள், பள்ளிகள், பாதுகாப்பு மற்றும் பிற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகளின் நிலை என்ன? பாதுகாப்பு குறித்து பேசவேக்கூடாது. அந்த நிலைமை.



    நாம் கடையில் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கி செல்லும்போது, அந்தப் பொருள் சரியில்லை என்றால் மறுநாள், ஏன் அந்த நாளே வந்து கடைக்காரரை உண்டில்லை என ஆக்கிவிடுவோம். அப்படி இருக்கையில் நமக்கான அடிப்படை தேவைகளுக்காக நாம் செலுத்தும் வரி பயனற்று போகும்போது யாருக்குதான் ஆத்திரம் வராது?. அதனால் உங்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கதையை தொடர்ந்தால் சென்றுக்கொண்டே இருக்கும். அதனால், அதைவிடுத்து இந்த கட்டுரைக்கான தலைப்புக்குள் வருவோம்.

    இந்தாண்டு பேசப்பட்ட, கூகுளில் தேடப்பட்ட முக்கிய தலைப்புகளில் ஒன்று வரி. ஏன்? இந்திய அரசு வரியை குறைத்தது. அதாவது நான்கு அடுக்குகளாக இருந்த வரிச்சுமையை, இரண்டு அடுக்குகளாக குறைத்தனர். இந்த நடைமுறை கடந்த செப்டம்பர் முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் செலவு குறையும் என மகிழ்ந்தனர். மற்றொன்று அமெரிக்க அரசின் வரிவிதிப்பு. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, உள்நாட்டு வரியையே தாங்கமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு, அமெரிக்கா மேலும் ஒரு குண்டை வீசியது. 


    அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

    அதாவது இந்தியப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அரசு அதிகரித்தது. இந்தியப் பொருட்களின் மீது கூடுதல் 25% வரி விதித்து, மொத்த வரிகளை 50% ஆக உயர்த்தியது. கண்ணாடிய திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்பதுபோல இதற்கு ரஷ்யாவை எல்லாம் காரணம் கூறியது அமெரிக்கா. இது போதாது என்று, நீங்கள் இன்னும் நிறைய வரிகளை பார்க்கப்போகிறீர்கள் என்றும் டிரம்ப் கூறுகிறார். மக்களின் அச்சத்திற்கு காரணம் அந்த வரியை ஈடுகட்ட நம்மீது தாக்கம் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம்தான். 

    நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? என்ற திரைப்பட டயலாக்தான் மக்களின் நிலை. ஏனெனில் கொடுப்பவர்களும் அவர்கள்தான். அடிவாங்குபவர்களும் அவர்கள்தான். 

    இப்படித்தான் டிரெண்டானது வரி. 

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
    • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.

    சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.

    கட்டாக்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    • மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

    மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.


    மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்

    அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.

    இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.

    மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது. 


    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)

    இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.

    உயிரிழப்புகளும் சேதங்களும்:

    மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)


    கலவரத்தின்போது

    • இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
    • 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
    • 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
    • 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
    • சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
    • காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    • மழலையர் பள்ளி மீது நடத்திய தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
    • இது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கெய்ரோ:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் (RSF) சண்டையிட்டு வருகிறது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.

    இதற்கிடையே, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் துணை ராணுவம் தெற்கு கோர்டோபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மற்றும் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மழலையர் பள்ளி மீது நடத்திய டிரோன் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 குழந்தைகளும் அடங்குவர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என கண்டனம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், சுகாதாரம் உட்பட மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.

    ×