என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்
    • என்றும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.

    'இன்னைக்கும் இட்லிதானா' என சொல்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான பதிவுதான் இது. இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லிதான் முதலிடம் பிடித்துள்ளதாம். டின்னருக்கு நீங்க எப்புடியோ (உப்மா), அதுபோல ப்ரேக்ஃபர்ஸ்ட்க்கு அவங்க (இட்லி) என சுந்தரபாண்டியன் பட டயலாக்கை வைத்து எப்படி கலாய்த்தாலும், அய்யாதான் ஆல் ஏரியாலயு கிங்கு என கில்லி பட டயலாக்போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முதலிடம் பிடித்துள்ளது இட்லி. 'நீங்க நெனக்கிறமாதிரி நா சாதாரணமான ஆள் இல்லடா' என்பது போல பல குணாதியசங்களை கொண்டது இட்லி. 

    அதாவது தொட்டுப் பார்த்தால் பஞ்சு, கடித்துப் பார்த்தால் ரப்பர் (சில ஹோட்டல்களில்), சட்னியில் முக்கி எடுத்தால் சோப்பு நுரை போல உறிஞ்சும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு தனித்துவம். இன்னும் சொல்லப்போனால் இட்லி ஒரு மகாத்மா மாதிரி. மென்மையான உடம்பு, பெரிய மனசு, எல்லாருக்கும் பிடிக்கும். இன்னும் ஏதாவது சொல்லலாம் என நினைத்தால், புழந்தது போதும், எனக்கு புகழ்ச்சி புடிக்காது என இட்லியே கூறிவிடும். அதனால் இதனை இதோடு நிறுத்திக் கொள்வோம். 


    இட்லியை வைத்து பெரும் அரசியல் நடந்தது

    ஆனால் யார் இட்லியை தேடியிருப்பார்கள்? இட்லியை ஏன் தேடவேண்டும்? என நீங்கள் நினைப்பீர்கள். அதுகுறித்து பார்ப்போம். அட வேற யாரு இல்லங்க. எல்லாம் நம்ம பசங்கதான் என்று கூறுவதற்கு ஏற்ப இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் எனது கணிப்பு. காரணம் மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு சர்ச்சை இந்த வருட நடுவில் எழுந்தது. உங்களுக்கு நியாபகம் உள்ளதா? இந்த வாக்குவாதம் ரயில்நிலையம், பேருந்து நிலையம், சமூக வலைதளங்கள் என அனைத்து பக்கங்களும் முற்றியது. 

    முடிவுதான் என்ன?. வாக்குவாதம் முற்ற ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை விமர்சிக்க தொடங்கினர். அதாவது சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்களும், தென் மாநிலங்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது தென்னிந்தியர்களை கிண்டலடிக்கும் விதமாக பல போஸ்டுகள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றுதான் இட்லி. அதாவது தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. இப்படி இட்லியை வைத்து ஒரு அரசியலே நடந்தது.

    அப்போது இட்லி பற்றி தெரிந்துகொள்ள வட இந்தியர்கள் பலரும் தேடியிருக்கலாம். எது எப்டியோ நம்ம ரூட் கிளியர் ஆனா சரிதா என்பதுபோல அனைவரும் கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலில் இடம்பிடித்தார் இட்லி. 


    இட்லி

    இவ்ளோ தெரிஞ்சிகிட்ட நாம இவரோட (இட்லி) வரலாறு தெரியாம போனா எப்டி? 

    இவ்ளோ நாளா நாம எல்லாரும் இட்லி, நம்ம ஊர்ல பிறந்ததுன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அது எங்கயோ வெளிநாட்டுல இருந்து வந்துதுனு நிறைய பேர் சொல்றாங்க. எங்க இருந்து வந்தா என்ன? நம்ம ஊருக்கு வந்த பிறகு, நம்மளோட ஒன்னுக்குள்ள ஒன்னாய்ட்டாய்ங்க. அதனால வெளிநாடு வரலாறு எல்லாம் வேண்டாம். வட இந்தியர்கள் கிண்டலடித்ததுபோல அவர் என்னைக்கும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும். 

    இந்தியாவில் நடந்த இந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..

    2025-ம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த இந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..

    திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம்:

    ஆந்திரப் பிரதேசம் திருமலையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வாங்குவதற்காக பக்தர்கள் முண்டியடித்தபோது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

    மகா கும்பமேளா:

    உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி, அதாவது மௌனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காகக் கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர்.

    இந்த விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    டெல்லி ரெயில் நிலையம்:

    பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று, டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளாவிற்குச் செல்ல ரெயில் ஏறுவதற்காகக் காத்திருந்த பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

    ஸ்ரீலைராய் தேவி கோயில் திருவிழா:

    கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி அன்று நடந்த வருடாந்திர விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

    பெங்களூரு ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடந்த ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது மைதானத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலால் இந்த துயரச் சம்பவம் நடந்தது.

    கரூர் த.வெ.க. பரப்புரைக் கூட்டம்:

    தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

     தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் இந்த விபத்து ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ஆந்திரா வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழா:

    கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் ஏகாதசி விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்தனர்.

     

    ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவிற்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது- அதில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா! சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

    பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

    செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்! அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.

    அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன.

    குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் "எந்த குற்றமும் நடக்கவில்லை" என ரத்து செய்துவிட்டது.

    அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால்- அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்!

    எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் "சாதனை- சாதனை- சாதனை" என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது.

    மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள்! முழுமையான சாதனைகள்! மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது "அதிமுக- பா.ஜ.க." கூட்டணியினர் "பொய்யையும், புரட்டையும்" மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
    • தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

    கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

    இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகும் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ நேற்றே (டிச.7) வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தாமதமானது. இந்நிலையில் வீடியோவை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த வீடியோவில்  படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.


    • ‘கருப்பு’ அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
    • இன்னும் சில மலையாள நடிகர்கள் படத்தில் இணைய உள்ளதாக தகவல்

    சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ரெட்ரோ'. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் த்ரிஷா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 47-வது படத்தை 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதில் சூர்யா போலீசாக நடிக்கிறார். நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள், இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். 

    இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஆவேஷம் புகழ் பிரணவ் ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
    • ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

    2022 மற்றும் கடந்த அக்டோபரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

    மசோதாவில் திருத்தங்கள் வேண்டும் எனச் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

    • ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது.
    • இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது.

    ஜியோ ஹாட்ஸ்டார் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். இந்த தளம் 17 மொழிகளில் நாடகங்கள், திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை வழங்குகிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரபலமானது.

    ஜியோ ஹாட்ஸ்டார் 2024 முதல் 2027 வரையிலான ஐசிசி நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை 3 பில்லியன் மதிப்பில் பெற்றிருந்தது. இதில் டி20 உலகக் கோப்பை 2024 (ஏற்கனவே நடந்தது), சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 2025, பெண்கள் உலகக் கோப்பை 2025, டி20 உலகக் கோப்பை 2026 போன்ற முக்கிய போட்டிகள் அடங்கும். இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலை ஸ்ட்ரீமிங் செய்யலாம், மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

    இந்நிலையில், நிதி இழப்புகள் காரணமாக (குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட இழப்புகள்), ஜியோஸ்டார் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பே இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்புவதாக ஐசிசிக்கு தெரிவித்துள்ளது.

    இதனால், ஐ.சி.சி இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒளிபரப்பாளரைத் தேடி வருகிறது. இது தொடர்பாக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற நிறுவனங்களை அணுகியுள்ளது. புதிய ஒளிபரப்பாளர் கிடைக்காவிட்டால், அவர்கள் உரிமைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்தார்.

    வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.

    இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

    ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.

    ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார்.
    • நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதம்

    இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு நடப்பாண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை கொண்டாடும் வகையில் இன்று மக்களவையில் 10 மணிநேரம் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதுபோல இன்று மக்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தையும் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இதுகுறித்து உரையாற்றினர். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த சிறப்பு விவாதத்தை தவிர்த்தனர். தொடர்ந்து வந்தே மாதரம் சிறப்பு விவாதம் தொடர்பாக மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். 

    மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, 

    "மேற்குவங்கத்தில் தேர்தல் வருவதனால்தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

    கடந்த காலம் பற்றி பேசியே பாஜக அரசியல் செய்கிறது. நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி. நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார். ஆனால் இன்னும் நேருவை குறைகூறுகிறார் மோடி. அவர் இஸ்ரோவை உருவாக்கவில்லை என்றால், மங்கள்யான் வந்திருக்காது. அவர் AIIM-களைத் தொடங்கவில்லை என்றால், கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்தியிருக்க முடியும்?


    நீங்கள் நேருவைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால், ஒரு காரியத்தைச் செய்வோம். அந்த விவாதத்திற்கென ஒரு நேரத்தை ஒதுக்குவோம். அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பட்டியலிடுவோம், அதைப் பற்றி விவாதிப்போம், இதை அதோடு முடித்துக்கொள்வோம். நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பற்றி விவாதிப்பது போல, உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக, நேருவைப் பற்றி விவாதிப்போம்.

    நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் பல பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர், அரசு அதை கவனிக்கவில்லை. இப்போது இதைப்பற்றி விவாதிப்பது ஏன்?. இந்த அரசு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் புறக்கணித்துவிட்டு கடந்த காலத்தையே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறது." என்று பேசினார். 

    • டிசம்பர் மாதத்தில் 31 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.

    உலக அளவில் நிறைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. விளையாட்டு போட்டிகளின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளித்த வீரர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் 2025-ம் ஆண்டில் மறைந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களின் தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    ஜனவரி மாதத்தில் மறைந்த வீரர்கள் குறித்த தகவலை பார்க்கலாம். அதன்படி அமெரிக்காவை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரரான கிரெக் பெல் தனது 94 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார். இவர் 1956-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார்.

    அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து உரிமையாளர் (பிலடெல்பியா ) ஹரோல்ட் காட்ஸ் (Harold Katz), 87 வயதில் ஜனவரி 25-ந் தேதி மறைந்தார்.

    பிரெஞ்சு நாட்டை சேர்ந்து அர்னால்டோ கிருவாரின் (86 வயது)(Arnaldo Gruarin). ரக்பி யூனியன் வீரரான இவர் ஜனவரி 28-ந் தேதி மறைந்தார்.

    ரஷிய நாட்டை சேர்ந்த ஜோடி ஸ்கேட்டர் விளையாட்டு வீராங்கனை எவ்ஜெனியா ஷிஷ்கோவா (Evgenia Shishkova). இவர் தனது 52 வயதில் ஜனவரி 29-ந் தேதி காலமானார். இவர் 1994-ம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார்.

    மே

    நினோ பென்வெனுட்டி (Nino Benvenuti), 87 வயது, இத்தாலியன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் தங்கம் 1960, உலக சாம்பியன்). மறைந்தது மே 20.

    ஜிம் இர்சே (Jim Irsay), 65 வயது, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து உரிமையாளர் (இண்டியானாபோலிஸ் கொல்ட்ஸ்), மறைந்தது மே 21.

    ஜூன்

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி (Dilip Doshi). சுழற்பந்து வீச்சாளராக இவர் தனது 77 வயதில் ஜூன் 23-ந் தேதி மறைந்தார். 

    டியாகோ செகுய் (Diego Seguí), 87 வயது, கியூபன், பேஸ்பால் பிட்சர், மறைந்தது ஜூன் 24.


    டக் எக்கர்ஸ் (Doug Eggers), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர், ஜூன்.

    ஜூலை

    பெலிக்ஸ் பாம்கார்ட்னர் (Felix Baumgartner), 56, ஆஸ்திரியன், எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் (ஸ்கைடைவர்), மறைந்தது ஜூலை 17.

    ஹல்க் ஹோகன் (Hulk Hogan), 71, அமெரிக்கன், மல்யுத்த வீரர், மறைந்தது ஜூலை 24.


    செப்டம்பர்

    கென் டிரைடன் (Ken Dryden), 78, கனடியன், ஐஸ் ஹாக்கி கோல்கீப்பர் (ஸ்டான்லி கப் வென்றவர்), மறைந்தது செப்டம்பர் 5.


    நவம்பர்

    கென்னி ஈஸ்லி (Kenny Easley), 66, அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து வீரர் (சீஹாக்ஸ்), மறைந்தது நவம்பர் 14.


    ராட்னி ரோஜர்ஸ் (Rodney Rogers), 54, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர் (NBA), மறைந்தது நவம்பர் 21.


    ஜான் பீம் (John Beam), அமெரிக்கன், அமெரிக்கன் கால்பந்து பயிற்சியாளர், நவம்பர்.

    மற்ற மாதங்களை விட டிசம்பரில் அதிக வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதன்படி 31 வீரர்கள் இந்த மாதத்தில் மறைந்துள்ளார். குறிப்பாக டிசம்பர் 1-ந் தேதி மட்டும் 8 பேர் மறைந்துள்ளனர்.

    டிசம்பர்

    1. ஜிம்மி மரியானோ (Jimmy Mariano), 84, பிலிப்பைன்ஸ், கூடைப்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர், டிசம்பர் 7.

    2. வோலோடிமிர் சிசென்கோ (Volodymyr Sysenko), 63, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 7.

    3. டாம் ஹிக்ஸ் (Tom Hicks), 79, அமெரிக்கன், விளையாட்டு உரிமையாளர் (லிவர்பூல் FC, டல்லாஸ் ஸ்டார்ஸ்), டிசம்பர் 6.

    4. நிக் ஜோனைட்ஸ் (Nick Joanides), 55, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 6.

    5. விக்டர் மிரோஷ்னிசென்கோ (Viktor Miroshnichenko), 66, உக்ரைன், குத்துச்சண்டை வீரர் (ஒலிம்பிக் வெள்ளி 1980), டிசம்பர் 6.

    6. அப்துல் ரஷீட் (Abdul Rashid), 46, பாகிஸ்தான், ஹர்டில்ஸ் வீரர் (ஒலிம்பிக் 2008), டிசம்பர் 6.

    7. மனோலோ வில்லனோவா (Manolo Villanova), 83, ஸ்பெயின், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 6.

    8. மைக்கேல் அன்னெட் (Michael Annett), 39, அமெரிக்கன், ரேசிங் டிரைவர், டிசம்பர் 5.

    9. வாசிலே கரவுஸ் (Vasile Carauș), 37, மோல்டோவன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.

    10. ஸ்டீவ் ஹெர்ட்ஸ் (Steve Hertz), 80, அமெரிக்கன், பேஸ்பால் வீரர், டிசம்பர் 4.

    11. ராய் கிரேமர் (Roy Kramer), 96, அமெரிக்கன், கல்லூரி புட்பால் பயிற்சியாளர், டிசம்பர் 4.

    12. மேபெல் போச்சி (Mabel Bocchi), 72, இத்தாலியன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 4.

    13. அன்டோனியோ வர்கியு (Antonio Vargiu), 86, இத்தாலியன், பீல்ட் ஹாக்கி வீரர் (ஒலிம்பிக் 1960), டிசம்பர் 3.

    14. மொஹம்மது ரஹ்மதுல்லா (Mohammed Rahmatullah), 87, இந்தியன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 3.

    15. லூயிஸ் அன்டோனியோ சில்வா டாஸ் சான்டோஸ் (Luiz Antônio Silva dos Santos), 55, பிரேசிலியன், கால்பந்து ரெஃப்ரீ, டிசம்பர் 3.

    16. மௌரிசியோ தெர்ம்ஸ் (Maurizio Thermes), 86, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 3.

    17. அலெக்ஸ் சான்செஸ் (Alex Sánchez), 95, கோஸ்டா ரிகன், கால்பந்து வீரர், டிசம்பர் 5.

    18. மாட்டி சுண்டெலின் (Matti Sundelin), 91, பின்னிஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 5.

    19. மௌஸ்தபா அலி (Moustafa Ali), 59, எகிப்தியன்-கனடியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.

    20. அனடோலி பெல்யாயேவ் (Anatoli Belyayev), 73, பெலாருசியன், ஐஸ் ஹாக்கி வீரர், டிசம்பர் 2.

    21. மார்வின் ஹின்டன் (Marvin Hinton), 85, இங்கிலீஷ், கால்பந்து வீரர், டிசம்பர் 2.

    22. எஸாவ் கன்யெண்டா (Essau Kanyenda), 43, மலாவியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.

    23. ஆர்காடியோ வென்டூரி (Arcadio Venturi), 96, இத்தாலியன், கால்பந்து வீரர், டிசம்பர் 2.

    24. எல்டன் கேம்ப்பெல் (Elden Campbell), 57, அமெரிக்கன், கூடைப்பந்து வீரர், டிசம்பர் 1.

    25. ராபின் ஸ்மித் (Robin Smith), 62, தென்னாப்பிரிக்கா-இங்கிலீஷ், கிரிக்கெட் வீரர், டிசம்பர் 1.

    26. ஹென்னி வான் சில் (Hennie van Zyl), 89, தென்னாப்பிரிக்கா, ரக்பி யூனியன் வீரர், டிசம்பர் 1.

    27. டெனிஸ் டர்னியன் (Denis Durnian), 75, இங்கிலீஷ், கோல்ஃப் வீரர், டிசம்பர் 1.

    28. இபோ எல்டர் (Ebo Elder), 46, அமெரிக்கன், குத்துச்சண்டை வீரர், டிசம்பர் 1.

    29. கேப்ரியல் மோய்சியானு (Gabriel Moiceanu), 91, ரோமானியன், சைக்கிள் வீரர் (ஒலிம்பிக் 1960, 1964), டிசம்பர் 1.

    30. வோலோடிமிர் முன்ட்யான் (Volodymyr Muntyan), 79, உக்ரைன், கால்பந்து வீரர் மற்றும் மேலாளர், டிசம்பர் 1.

    31. நிகோலா பீட்ராங்கெலி (Nicola Pietrangeli), 92, இத்தாலியன், டென்னிஸ் வீரர், டிசம்பர் 1. 

    • இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது.
    • டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் எடுத்துக் காத்திருந்த பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.

    இந்நிலையில், பணியாளர்கள் பிரச்சனையால் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு இதுவரை ரூ.827 கோடி திருப்பித்தந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வரும் டிசம்பர் 1-7ம் தேதி வரை இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது.

    மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் 48 மணி நேரத்தில் பயணிகளின் 4500 உடமைகளை திருப்பித் தந்துள்ளது.

    பயணிகளின் 9000-க்கும் மேற்பட்ட லக்கேஜூகளில் 4,500 லக்கேஜ்கள் திருப்பி தரப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 1800 இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×