என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொமதேக"

    • கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் தி.மு.க. தரப்பில் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி நடராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

     

    நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிமுக வேட்பாளர் பி காளியப்பனை தோற்கடித்தார்.
    நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி. சின்ராஜ் 6 லட்சத்து 26 ஆயிரத்து 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பி. காளியப்பன் 361142 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

    அமமுக 23347 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 30947 வாக்குகளும், நாம் தமிழர் 38531 வாக்குகளும் பெற்றன...
    வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    கோவை:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
    ×