என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 19-ந்தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    • ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
    • மரியா ராஜா இளஞ்செழியன் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 




    • உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
    • சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

    உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

    இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.

    நேற்று 4-வது நாளாக இதே சூழ்நிலை நீடித்ததால் ஒரேநாளில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் சுமார் 220 விமானங்கள், பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஐதராபாத்தில் 90-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் மட்டும் 104 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இயக்கப்பட்ட விமானங்களும் கடும் கால தாமதத்தை சந்தித்தன. இதனால் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

    இந்நிலையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.35,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.26,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல விமான கட்டணம் ரூ.25,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கோவைக்கு நாளை செல்ல விமான கட்டணம் ரூ.71,000-ஆக உயர்ந்துள்ளது.

    • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'வா வாத்தியார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று வெளியாகவில்லை.


    இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்து உள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது. 



    • ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
    • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.

    கோட்டூர்புரம்:

    சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவரின் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் கபடி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே லட்சியம்.

    * விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றி முன்னுக்கு கொண்டு வருகிறோம்.

    * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தி.மு.க. அரசு உறுதி செய்திருக்கிறது.

    * ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை.

    * அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்தான் முக்கியமானது.

    * சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் மாதிரி விடுதிகள்.

    * ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.

    * ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.

    * உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பயில அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் செயல்படுத்துகிறோம்.

    * சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிக்காக ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    * 9,659 மாணவர்களுக்கு ரூ.90 கோடி அளவுக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் 385 மாணவர்கள் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்,

    * சட்டப்படிப்பு என்பது நமக்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    * இவ்வளவு நேரம் நான் பட்டியலிட்ட திட்டங்கள் அனைத்தும் எள் முனையளவுதான்.

    * அனைத்து தடைகளையும் உடைத்து நாம் முன்னேற வேண்டும்.

    * ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்பது உறுதி என்றார். 

    • ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
    • குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

    இண்டிகோ நிறுவனத்தின் இச்செயலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே, இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து விவகாரத்தை கண்காணிக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இப்பிரச்சினை பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.



    இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள்...



    பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.



    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்...



    • கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசல் விளையாடி வந்தார்.
    • 2026 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன் ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா அணி விடுவித்தது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

    கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பேசுபொருளானது. இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். மேலும் மற்ற ஜெர்சியை போட்டு பார்ப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக அவர் கூறினார்.

    இதனையடுத்து அவர் 2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இவரை அணியில் இருந்து கழற்றி விட அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் ஆலோசனை வழங்கியதாக கொல்கத்தா அணியின் CEO வெங்கி மைசூர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆண்ட்ரே ரசலுக்கு தற்போது 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
    • அம்பேத்கர் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
    • கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்னும் எடுத்தன. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 531 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    531 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது. ஷாய்ஹோப் 116 ரன்னுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 319 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. ஷாய்ஹோப் 140 ரன்னிலும், அடுத்து வந்த டெவின் இம்லாக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 277 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 7-வது விக்கெட்டான ஜஸ்டின் கிரீவ்ஸ்-கேமர் ரோச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.

    ஜஸ்டின் கிரீவ்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 12-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு 2-வது செஞ்சுரியாகும். தொடர்ந்து விளையாடிய கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இருவரும் போட்டியை டிரா செய்ய உதவினர். கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது.

    தோல்வியடைய வேண்டிய போட்டியில் பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது.
    • இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார்.

    கோபி:

    கோபியில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைப்பு செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம், மாவட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது. தலைமை உத்தரவின் படி, அம்பேத்கர் புகழை போற்றும் வகையில் நடைபெறுகிறது.

    ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுச்சி நாயகன் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் எதிர்கால சக்தியாக உருவாகி உள்ளார் என்றார். 

    • சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
    • இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது.

    * சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.

    * பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

    * பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது.

    * ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    * திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?

    * இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும்.
    • இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமை திக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா), அமைதிக்கான பரிசை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது.

    இதற்கான போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.

    மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும்.



    இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.

    இதுதொடர்பாக இன்பான்டினோ கூறும் போது, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு என்றார்.

    தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும். நான் பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்கா அதிகமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக முன்னேறி வருகிறது என்றார்.

    ×