என் மலர்tooltip icon

    இந்தியா

    • கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

    மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,

    தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    வி.சி.க. தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் நடைபெறும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது முரணானது என்று தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
    • சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கு காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது.

    இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.

    இதற்கிடையே அடுத்த 6 நாட்களுக்கு டெல்லியின் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமான' முதல் 'கடுமையான' மண்டலத்தில் இருக்கும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. வாகன மாசு, பயிர் கழிவுகள் எரிப்பு, குளிர்காலம் ஆகியவை டெல்லியில் காற்றுமாசுக்கு காரணமாக உள்ளது.

    காற்று மாசு காரணமாக டெல்லியில் சுமார் 80 சதவீத வீடுகளில் கடந்த மாதத்தில் குறைந்தது ஒருவராவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 36 சதவீத வீடுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுவாசம் அல்லது மாசுபாடு தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

    • இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.
    • நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    நாடு முழுவதும் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 7 முக்கியமான சேவைகளில் வர உள்ள மாற்றம் மற்றும் அப்டேட்கள் குறித்து பார்ப்போம்...

    1 ஆதார் அப்டேட் முறைகள்

    செல்போன் மூலம் ஆதார் அட்டைகளில் செய்யப்படும் அப்டேட்கள் இப்போது எளிதாகிவிட்டன. அதில் குழந்தைகள் ஒரு வருடத்திற்கு இலவச பயோமெட்ரின் அப்டேட்களை பெறலாம். மேலும் பெரியவர்களுக்கு அனைத்து வகையான அப்டேட்டுகளுக்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும்.

    2 பான் லிங்கிங் முறை

    உங்கள் பான் கார் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன் வழங்கப்பட்டிருந்தால், டிசம்பர் 30-ந்தேதிகள் ஆதாருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது 2026 முதல் செல்லாதாகிவிடும்.

    3 வங்கியில் நாமினி முறை

    வங்கியில் தற்போது நடைமுறையில் இருக்கும் நாமினி முறையில் இனி 4 பேர் வரை நாமினியாக சேர்த்து சமமான பங்கை ஒதுக்கலாம்.

    4 வலைத்தள பாதுகாப்பு முறை

    வங்கிகளின் பெயரில் போலி இணைப்பு மோசடிகளை குறைக்க வங்கிகள் இனி .bank.in டொமைனைப் பயன்படுத்த உள்ளன.

    5 ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தல் விதி

    ஜி.எஸ்.டி. வரியில் சிறு வணிகங்கள் விரைவான ஒப்புதலையும், குறைவான ஜி.எஸ்.டி. அடுக்குகளையும் பெறுகின்றன.

    6 ஓய்வூதியதாரர் விதி

    நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும்.

    7 NPS-க்கு UPS விதி

    அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்தால் நவம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற வேண்டும்.

    • திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார்.
    • வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவ தொடங்கியது. தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் நபர்களுக்கு, அதில் இருக்கக்கூடிய அமீபா நாசி மற்றும் காது துவாரம் வழியாக சென்று மூளையை தாக்குவதால் அமீபிக் மூளைக்காய்ச்சல் வருகிறது.

    இதனால் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரின் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் வரவில்லை.

    இந்த நோய் தொற்றுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகி விட்டார்.

    திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினயா (வயது26). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.

    அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 40 நாட்கள் சிகிச்சையில் இருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வினயா இறந்து விட்டார்.

    வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை. அவர் அவருடைய வீட்டில் இருந்த கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது வீட்டின் கிணற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    கேரள மாநி லத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு இதுவரை 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பலியாகி விட்டனர். மாநிலத்தில் இந்த மாதத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.
    • ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிறநாடுகள் மீதான வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில், ரஷியாவின் கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுவத்துவதாக பிரபல தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அதன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையத்தில் ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    • திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, கலெக்டர் வெங்கடேஸ்வரர், எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் சாலை மார்க்கமாக பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை 9.30 மணி அளவில் வராஹ சாமியை தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

    இதையடுத்து திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
    • சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது.

    இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். விடுமுறை தினமான நவ.23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஓய்வு பெற உள்ளதால் இன்று அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணையை மேற்கொள்கிறார்.

    டெல்லியில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பி.ஆர்.கவாய் கூறியதாவது:

    புத்த மதத்தை பின்பற்றினாலும், இந்து மதம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் உட்பட அனைத்து மதத்தையும் நம்பும் உண்மையான மதச்சார்பற்ற நபர்.

    தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன். அவர் உண்மையிலேயே மதச்சார்பற்றவராகவும், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சீடராகவும் இருந்தார்.

    நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன்.

    தலைமை நீதிபதியாக தனது ஆறு மாத காலப் பணிக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணிக்கும் நிறுவனத்தின் கூட்டு வலிமையே காரணம். கடந்த ஆறரை ஆண்டுகளில் என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.

    சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால் முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.

    சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
    • பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



    • சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
    • முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.

    சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.

    அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.

    எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.

    முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.

    எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.

    மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.

    மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன.
    • போதுமான திட்டமிடல், தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.

    கொல்கத்தா:

    தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இந்நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது.

    இது மிகவும் ஆபத்தானது. இதை உடனே நிறுத்த வேண்டும். போதுமான திட்டமிடல் , தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.

    பெரும்பாலான பிஎல்ஓக்கள் உரிய பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்புகள், மீண்டும் மீண்டும் தரவு பொருந்தாத தன்மை காரணமாக ஆன்லைன் படிவங்களுடன் போராடுகிறார்கள்.

    இந்த வேகத்தில் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல தொகுதிகளில் உள்ள வாக்காளர் தரவை தேவையான துல்லியத்துடன் பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி.

    ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீவிர அழுத்தம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்த பயத்தின் காரணமாக பலர் தவறான அல்லது முழுமையற்ற உள்ளீடுகளைச் செய்யத் தள்ளப்பட்டனர்.

    இது உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும். வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதிக்கும்.

    இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
    • சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்

    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.

    மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

    இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்

    • ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
    • காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.

    ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.

    சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.

    1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×