என் மலர்
மதுரை
- பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார்.
- தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.
மதுரை:
மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழு நடைபெறும் பந்தலில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. குளு, குளு ஏ.சி.வசதியுடன் இருக்கைகளும், வண்ண விளக்குகளுடன் அமைகிறது. முக்கிய நிர்வாகிகள் அமரும் மேடை, முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் வர தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்களது பெயர்கள் பார்த்து பதிவு செய்து எளிதில் அனுமதி பெற்று பொதுக்குழு அரங்கிற்குள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் பல்வேறு வகையான உணவுகள் சுமார் 3 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது.
அரங்கின் முன்பு 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீரூற்றும் அமைக்கப்படுகிறது.
இந்த பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கப்படுகிறது. மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதையொட்டி ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். பின்னர் புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் முதலமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.
- கூட்டணியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம்.
மதுரையில் இன்று நடைபெற்ற முருகபக்தர்கள் மாநாட்டுக்கான கால்கோள் விழாவில் கலந்துகொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை த.வெ.க. தலைவர் விஜய் வைத்திருந்தார். என்னுடைய சிந்தனையில் தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும், அதற்கான தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.
கருத்துவேறுபாடுகள், விமர்சனங்கள் வெவ்வேறாக இருக்கலாம். உங்கள் கருத்து ஒன்றாக இருக்கும், எங்கள் கருத்து ஒன்றாக இருக்கும்.
ஆனால் தி.மு.க. அரசு அகற்றப்பட ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். எனவே ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விஜய்யை கூட்டணிக்கு அழைத்துள் ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
தி.மு.க.வை எதிர்க்க அனைத்து கட்சிகளும் த.வெ.க. உள்பட அனைரும் ஒன்றிணைய வேண்டும்.
கூட்டணியை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தலில் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம்.
தமிழகம் முழுவதும் விரைவில் வேல் யாத்திரை, அண்ணாமலை நடைபயணம் போல சட்டமன்ற உறுப்பினர்களுடன் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
- சாலையோரமாக பேருந்தை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் கருப்பையாவை சிகிச்சை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டார்.
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
அந்த பேருந்து மதுரை நகரை கடந்து ஒத்தக்கடை பகுதியில் உள்ள திருச்சி நான்கு வழிச்சாலையில் ஏறி வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இரும்பு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்றபோது திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்தார். அதே சமயம் பேருந்தின் கதவுகள் மூடப்படாமல் இருந்துள்ளது. இதில் டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த கண்டக்டர் கருப்பையா நிலை தடுமாறி பேருந்தின் படிக்கட்டு வழியாக கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனையடுத்து சாலையோரமாக பேருந்தை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் கருப்பையாவை சிகிச்சை அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடர்பு கொண்டார். இருந்தபோதிலும் வாகனம் வருவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனது. இதற்கிடையே பலத்த காயம் அடைந்ததாலும், ரத்தப்போக்கு அதிகமானதாலும் கண்டக்டர் கருப்பையா மயங்கி சுயநினைவை இழந்தார். பின்னர் உடனடியாக அருகில் இருந்த ஆட்டோ மூலமாக கருப்பையாவை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து உள்ளனர்.
அப்போது டாக்டர்கள் கருப்பையாவின் உடலை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பேருந்தின் கதவுகள் முறையாக மூடப்படாத நிலையில் சாலை நடுவே இருந்த தடுப்பு காரணமாக பிரேக் பிடித்தபோது கீழே விழுந்து கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்ஸ் சேவை தாமதமானதாலும் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளை தானியங்கி கதவு மூலமாக மூடுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்ட நிலையிலும் பெரும்பாலான அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத சூழல் இருந்து வருகிறது. அத்துடன் முறையாக பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத நிலையில் இது போன்ற விபத்துகளில் பயணிகளை தொடர்ந்து தற்போது போக்குவரத்து பணியாளர்களும் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது அரசின் அலட்சியத்தை காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் வேகத்தடை மற்றும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாததால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்.
- கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் அரசே ஈடுபட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல் குறித்து கருத்து கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என 3 மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மனுதாரர்கள் மதுரை மாவட்ட டாஸ்மாக்கில் பணிபுரிகின்றனர். மதுரை மாவட்ட டாஸ்மார்க் மேலாளராக பணியில் இருந்த ராஜேஸ்வரியும் திருமங்கலம் டாஸ்மார்க் மேற்பார்வையாளராக பணியில் இருந்த செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தினமும் 5 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார்கள்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் புகார் அளித்தனர். புகாரில் நடவடிக்கை இல்லாததால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்துள்ள உத்தரவில், "மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி ஊழியர் செல்வம் இணைந்து வசூல் வேட்டை நடத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்களின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி உள்ளார்கள். மனுதாரர் ஊடகங்களுக்கு சென்று பேட்டி அளித்துள்ளனர். இது டாஸ்மார்க் விதிகளுக்கு எதிரானது என்றாலும் இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணிபுரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது டாஸ்மார்க் நிறுவனத்தில் ஏதோ நடக்கின்றது.
கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுவால் உயிரிழப்புகளை தடுக்க மதுபான விற்பனையில் அரசே ஈடுபட்டுள்ளது. இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்கக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும்போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
டாஸ்மார்க் துறை தன் தவறுகளை உணர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மனுதாரர்கள் மீது டாஸ்மாக் நிறுவன விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க அனுமதி உள்ளது என்றும் மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- விபத்திற்கு காரணமாக கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவுள்ளார்.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி அருகே மதுரை-தேனி மெயின்ரோட்டை கடக்க முயன்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பின்னர் ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஜெயபாண்டி என்பவருடைய மனைவி பாண்டிச்செல்வி(வயது 28), குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயமணியின் தாயார் லட்சுமி(55), மனைவி ஜோதிகா (20), இவருடைய ஆண் குழந்தை பிரகலாதன்(3) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெயபாண்டி, கருப்பாயி, ஜெயமணியின் பெண் குழந்தை கவியாழினி(1) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்திற்கு காரணமாக கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சம்பந்தப்பட்ட காரை ஓட்டிவந்தது, பூச்சிப்பட்டியை சேர்ந்த ஆனந்த் என தெரியவந்துள்ளது. கார் ஓட்டுனர் ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது.
- இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும்.
மதுரை:
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், வருகிற ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறாத நிலையில் முதன்முதலாக மதுரையில் தி.மு.க. பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு முதல் நாளான மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இந்த ரோடு ஷோ மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்ரத் புரம், காளவாசல், குரு தியேட்டர், திருமலை நாயக்கர் சிலை வழியாக நடைபெற்று தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த ரோடு ஷோ வரலாறு காணாத வகையில் இருக்க வேண்டும். அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய மதுரையின் பத்து தொகுதியின் வெற்றிக்கு அடித்தளமாகவும், தேர்தல் வியூகமாகவும் இந்த ரோடு ஷோ அமையும் அளவிற்கு நமது தொண்டர்கள் அணி திரண்டு வர வேண்டும். தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், அரசியலுக்கு தலைநகரம் மதுரை என்று சொல்லுகின்ற அளவிற்கு பல மாற்றங்களை நமது மதுரை கண்டு இருக்கிறது.
இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற நமது கட்சியின் மாநாடு மாபெரும் திருப்புமுனை மாநாடாக அமைந்தது. அதேபோல் ஒரே நாளில் மேலூர் டங்ஸ்டன் வெற்றி மாநாடு அமைந்திருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மருத்துவத் துறையில் பணியாற்றும் இளநிலை நிர்வாக அலுவலர்கள் கவுன்சிலிங்கில் மட்டுமே மாறுதல் வழங்க உத்தரவிடகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வை முறையாக நடத்தாமல் விதி மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதற்கு தடை கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வந்தது.
விசாரணையின்போது, மருத்துவத்துறையில் இளநிலை நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் அனைத்தும் கவுன்சிலிங்கில் மட்டுமே வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொது கலந்தாய்வில் மாறுதல் வழங்காது வேறு முறையில் பணியிட மாறுதல் செய்திருந்தால் அதற்கு தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேறு வகை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- பிரமாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது.
- கடந்த வாரம் முதல் மாவட்டச்செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே முன்னணி அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வியூகம் அமைத்து காய் நகர்த்தி வருகின்றன. தி.மு.க. சார்பில் மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.
இதற்கிடையே முதல்முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் ரேசில் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. கோவையை தொடர்ந்து விரைவில் வேலூரில் 2 நாட்கள் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் பிரமாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. மேலும் கடந்த வாரம் முதல் மாவட்டச்செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது கட்சி தொண்டர்கள் அங்கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினராக உள்ள மதுரை மேற்கு தொகுதியை வரும் 2026 தேர்தலிலும் தக்கவைக்க பணிகளை தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. தரப்பில் மேற்கு தொகுதியை கைப்பற்ற அமைச்சர் மூர்த்தி அங்கு பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் த.வெ.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மதுரை மேற்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் நடிகர் விஜய்யை 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து முதலமைச்சர் ஆக்கியதற்கு நன்றி என கூறி த.வெ.கவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்ற புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
- ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
- புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திடீர் நகரை சேர்ந்த பூ வியாபாரி தனம் கூறுகையில்,
மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது குண்டு மல்லி தான். நாங்கள் பல தலைமுறைகளாக பூ வியாபாரம் பார்த்து வருகிறோம். என் கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளை வளர்ப்பதற்காக கடந்த 37 வருடங்களாக பெரியார் பேருந்து நிலையம் அருகே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.
குடும்ப தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறிது சிறிதாக வாங்கிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தால் ஒரு வருடத்திற்குள் நகைகளை திருப்ப வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. மேலும் நகைகளை திருப்ப இயலவில்லை என்றால் நகைகள் மீது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மறு அடகு வைக்கும் நடைமுறையும் இருந்தது.
ஆனால் தற்போது நகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையை செலுத்தி திருப்ப வேண்டுமெனவும், அதன் பிறகு மறுநாளில் மீண்டும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
இதனால் எங்களைப் போன்ற ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது இன்றைய விலையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் வாங்கிய தங்கத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுகிறோம். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.
முன்பெல்லாம் நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி. வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கான பில்லை சாமானிய மக்களால் எப்படி வங்கியில் தர முடியும். இது நகை அடகு வைப்பவர்களை மிகவும் பாதிக்கும். மொத்தத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் என்னை போன்ற அன்றாட கூலிகளுக்கு நகை அடமானம் வைப்பதையே மறக்கடித்துவிடும் என்றார்.

பூ வியாபாரி தனம் - இல்லத்தரசி அஞ்சலி
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி கூறியதாவது:-
முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொண்டு வந்தோம்.
ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நகை அடைமானம் காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும் என வங்கி கூறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடயை கடன் சுமையை குறைக்க வேண்டியே வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கிறோம். முழுத் தொகை செலுத்தி அதனை எடுக்க முடியாத சூழ்நிலையில் நகைக்கடனுக்காக வட்டியை மட்டும் கட்டி விட்டு அதனை மறுபடியும் வங்கியில் அடமானம் வைத்து வந்தோம்.
ஆனால் தற்போது முழுதொகை மற்றும் அதற்கான வட்டியை முழுவதும் கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் எனக் கூறும் இந்த புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
சில தனியார் வங்கிகள் முழுதொகை மற்றும் அசல் வட்டியை உடனே கட்ட வேண்டும். இல்லையெனில் நகை ஏலத்திற்கு சென்று விடும் கூறி வருகின்றனர்.
இதனால் நடுத்தர குடும்பத்தினர் வங்கியின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து கந்து வட்டியில் கடன் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் நகையை வங்கியில் அடமானம் வைத்து கந்துவட்டி நபர்களுக்கு பணத்தை கொடுத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
ஆகையால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது என பேசி முடித்தார்.
- எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
- ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.
மதுரை:
மதுரையில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் தி.மு.க. அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.
ஊழலை மடைமாற்றும் விதமாக தி.மு.க. அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசியது அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்.
ஆபரேசன் சிந்தூரில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் ரியல் ஹீரோவாக செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் மோடியின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் பேசியுள்ளனர். நாட்டிற்கு எதிராக செயல்படுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
- பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அம்மாபிள்ளை (65), வெங்கடம்மா (55), வீரமணி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது.
- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்.
மதுரை:
மதுரை தனியார் மருத்து வக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடை பெற்று வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.
அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது ஒரு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அப்போது பா.ஜ.க. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.
நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றி யாரும் குறை சொல்லி பேசக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகமில்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






