என் மலர்
நீங்கள் தேடியது "Madurai rain"
- மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
- பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அம்மாபிள்ளை (65), வெங்கடம்மா (55), வீரமணி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மதுரையில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 14-ந்தேதி அகோர முகத்துடன் தொடங்கியது. வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கோடையின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தகித்தது. வழக்கமாக வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மதுரையில் பதிவானது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் சாலைகளில் தோன்று கானல் நீரானது மக்களை அச்சப்பட வைத்தது. முதியோர்கள், குழந்தைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தை கடந்து செல்ல வசதி படைத்த பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தனர். நடுத்தர வர்க்கத்தினர் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று ஆறுதல் படுத்திக்கொண்டனர். இளநீர், தர்பூசணி, பதநீர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலை விரட்டியடித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் அங்கு மழை நீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் சாலைகளை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. புதிதாக அந்த சாலைகளை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கி காயங்களுடன் எழுந்து செல்கிறார்கள்.
மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. சாலையில் நடுவில் செல்வதை தவிர்த்த வாகன ஓட்டிகள் சாலையோரமாக தடுமாற்றத்துடன் சென்றனர்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை பெய்துள்ளது.
குறிப்பாக மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.
சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார்.
- மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
- புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதைதொடர்ந்து, மதுரை செல்லூர் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதிப்பை தடுக்க, உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 2 நாட்களாக இரவு, பகலாக நடத்தட்டு வந்தது.
இந்நிலையில், கால்வாயில் நேற்று இரவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு செல்லும் இந்த கால்வாய் மூலம், பந்தல்குடி கால்வாயில் செல்லும் அதிகளவு தண்ணீரை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கண்மாயை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கண்மாய்கள் முறையாக தூர்வாறி ஆழப்படுத்தப்படாததால் தண்ணீர் வீணாகி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது.
கூடல்புதூர், ஆனையூர் பகுதிகளில் உள்ள சிலையனேரி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக நேற்று இரவு திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் கூடல் புதூர், ஆனையூர் பகுதிகளில் உள்ள 150 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களை ஆழப்படுத்தி இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.
அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் இன்று மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை சீர் செய்ய வேண்டும். கண்மாய்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.
தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றவும் உடனடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain






