என் மலர்
நீங்கள் தேடியது "இ.பி.எஸ் ஆதரவாளர்கள்"
- நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது.
- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்.
மதுரை:
மதுரை தனியார் மருத்து வக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடை பெற்று வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.
அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது ஒரு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அப்போது பா.ஜ.க. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.
நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றி யாரும் குறை சொல்லி பேசக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகமில்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- போடியில் இன்று ஊர்வலமாக சென்ற இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ். தரப்பினர் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ெதாகுதியாகும். இங்கு அ.தி.மு.க. வின் ஒற்றை தலைமை பிரச்சனை தொடங்கியதிலிருந்து ஓ.பி.எஸ்.இன் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்.க்கு எதிராக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பொதுக்குழு ஒன்று கூடி இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது. இதனையடுத்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். போடி திருவள்ளுவர் சிலை முன்பாக பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
நம்ம தலைவர் எடப்பாடியார் என்ற வாசகம் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியவாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சேதுராமன், எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்பாஸ், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒன்று கூட தொடங்கியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ஊர்வலமாக வந்தவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனையடுத்து உடனடியாக போலீசார் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அகற்றினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.






