என் மலர்tooltip icon

    சென்னை

    • கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
    • கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்ட நெரிசலில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கரூர் சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் என பதிவிட்டுள்ளார்.

    • பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
    • தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார்.

    தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதலமைச்சரை இன்று சந்தித்து உரையாடினர்.

    இந்த சந்திப்பின்போது தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சந்திப்பின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரெயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கும் மண் தேவைபடுகிறது. ஆகவே தட்டுபாடின்றி மண் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், குமரி மக்களின் நெடு நாள் கனவான குமரி விமான நிலையம் சாத்தியம் ஆகும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

    மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் குளங்களை தூர் வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

    • கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்த விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் திரு.@OfficeofminMRV

    அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.

    மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
    • அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.

    அப்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி" என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

    ஜெயலலிதா கூறியதற்கு மாறாக அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளதாக பேசிய நிலையில் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை.

    எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்கிறார். ஆவாங், விஜய் மாவட்ட வாரியாக பயணிக்கிறார்.

    மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தும் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய உள்ளது.

    • சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர்.
    • இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்காக உறவினர்கள்- நண்பர்கள் என ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி நேரத்தில் ரெயில் ஏற செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் நடைமேடை டிக்கெட்டுடன் நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் காத்து இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன ரெட்டி கூறியதாவது:-

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரெயில்களும், விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.

    சமீபகாலமாக வட மாநிலங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கும் மேற்பட்டோரும் ரெயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் 162 வடமாநில குழந்தைகளும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 85 குழந்தைகளும் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளை தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் பலர் ரெயில் நிலைய நடைமேடை அனுமதி டிக்கெட் எடுத்துக்கொண்டு விரைவு ரெயில் பகுதியில் தூங்குகின்றனர். இப்படி நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    ரெயில் நிலையத்தில் ரெயிலில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு.

    எனவே நடைமேடை டிக்கெட் எடுத்து நீண்ட நேரம் ரெயில் நிலையத்தில் தங்குவது விதிகளை மீறுவதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை முதல் 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    30-ந்தேதி மற்றும் 01-ந்தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான்.
    • திராவிட மாடல் அரசு ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு #EmploymentGeneration-தான்!

    அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது #DravidianModel!

    நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
    • வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்து இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளும் அடுத்த வாரம் வருகிறது.

    வார இறுதி நாள் மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை.

    இந்த சூழ்நிலையில் அரசு பஸ்களில் பயணம் செய்ய மக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    இது தவிர தனியார் பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    திடீர் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தனியார் பஸ்கள் 11 மாத ஒப்பந்தத்தில் வாடகைக்கு அமைத்துள்ள னர். கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    விழுப்புரம் மற்றும் சேலம் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தனியார் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சேலம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு இந்த பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் போன்ற வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் நாட்களில் பெரும் அளவில் பக்தர்கள் வருவதால் தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படுகிறது.

    வார இறுதி நாட்கள், பவுர்ணமி நாட்கள், திருமண முகூர்த்த நாட்கள் போன்ற விசேஷங்களுக்கு தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இந்த ஒப்பந்த காலத்தில் சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர் வரை பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்களை பராமரிக்கும் செலவு அவர்களை சார்ந்தது. கண்டக்டர் மட்டும் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டு டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தனியார் பஸ்கள் தற்போது கூடுதலாக இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 100 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல சேலம் போக்குவரத்து கழகத்தில் இருந்து கோவை, சேலம், நாமக்கல், ஈரோட்டிற்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் எந்தெந்த பகுதிகளுக்கு மக்கள் தேவை அதிகம் இருக்கிறதோ அந்த பகுதிகளுக்கு 30-ந் தேதி வரை இயக்கப்படும் என்றார்.

    • 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
    • வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையேயான 53 கி.மீ ஒற்றை அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், சென்னை- ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை அறிமுகப்படுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல்நேர வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான திட்டம் ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் ரெயில் சேவைகள் இயக்கப்படவில்லை.

    இரவு நேர சேவையாக சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரெயில் சேவைகளும், 4 வாராந்திர ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் விடப்பட்டால் தற்போது ஓடும் ரெயில்களில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே 53 கி.மீ. நீளமுள்ள முழு ரெயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின் மயமாக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உச்சிப்புளி ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின்கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.

    எனவே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த பகுதியில் தனி சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான இறுதி பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநாளில் ராமேசுவரத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு ரெயிலை இயக்குவதற்கு, வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து 8 மணி நேரத்திற்குள் ராமேசுவரத்தை அடைய வேண்டும். எனவே வழித்தடத்தை இறுதி செய்வதற்கு முன்பு பயண நேரம் மற்றும் பாதையின் தன்மை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.
    • 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதலமைச்சர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது.

    * உழவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்கிறோம்.

    * தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    * இந்த ஆண்டில் மட்டும் 5.66 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 1 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    * ஆக்கப்பூர்வமாக செயல்படுவதால் தான் கடந்த 4 ஆண்டுகளில் 456 மெட்ரிக் டன் லட்சம் உணவு உற்பத்தியை எட்டி உள்ளோம்.

    * 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.

    * விவசாயிகளை தேடி சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முகாம்கள் நடத்துகிறோம்.

    * பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம்.

    * எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் 2-ம் இடத்தில் உள்ளது.

    * வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

    * தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×