என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் - தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
- டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவிடுமாறு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
* டிட்வா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
* டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
* தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவிட வேண்டும்.
* டிட்வா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
* பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






