என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு எச்சரிக்கை"
- டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு.
- மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்!
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.
- மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி சுற்றுவட்டார வன பகுதிகளில் கடந்த 3 மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.
இந்த காட்டு யானைகளை சில நாட்களுக்கு கர்நாடக வனப்பகுதிக்கு தமிழக வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இந்த நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.
சின்னதாமன்டரப்பள்ளி கிராம வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதமன்றபள்ளி, திம்மசந்திரம், கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, கே.கொத்தூர், தோட்டகணவாய், சிகரமாகனபள்ளி ஆகிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் விளை நிலைகளில் தங்க வேண்டாம் என்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதி வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அந்த காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






