search icon
என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பெரும்பாலனவை ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.

    ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

    இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் குறித்து செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை.

    இருந்த போதிலும் தற்போது வரை உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பும் அதிகம். சேதமும் அதிகரிப்பு என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்பு.
    • ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

    ஜப்பானில் இதற்கு முன் 2011ல் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால், ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு கைவிட்டது.

    இருப்பினும், பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.
    • 2.08 மீட்டர் வரை அலைகள் கரையை அடையலாம் எனவும் தகவல்.

    2024 புத்தாண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானை பேராபத்து தாக்கியுள்ளது.

    ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2.08 மீட்டர் வரை அலைகள் கரையை அடையலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஜப்பானில் பதிவான நிலநடுக்கங்களின் தாக்கமாக தென் கொரியாவிலும் ஒரு சில பகுதிகளில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளது.

    மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவிவன் போஸ்னியா- ஹெர்சகோவினா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது.

    சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சாகலின் தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மக்களை வெளியேற்ற ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவுவாகியுள்ளது.
    • இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.

    புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவுவாகியுள்ளது.

    இஷிகாவா மாகாணத்தில் 1.2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சுனாமி அலை எழுந்தது.

    இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களில் சுனாணி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    இந்நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு தொடர்பாக அங்குள்ள இந்தியர்களுக்காக தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, +81-80-3930-1715 (திரு. யாகுப் டாப்னோ), +81-70-1492-0049 (திரு. அஜய் சேதி), +81-80-3214-4734 (திரு. டி.என். பர்ன்வால்), +81-80-6229-5382 (திரு.எஸ்.பட்டாச்சார்யா), +81-80-3214-4722 (திரு. விவேக் ரத்தீ).

    மேலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
    • மக்கள் கட்டிடங்களின் மேல்தளத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

    நில நடுக்கங்களுக்கு அதிக சாத்தியம் உள்ள நாடான ஜப்பானில், ரிக்டர் அளவுகோளில் 7.6 எனும் அளவில் வட மத்திய ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

    இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி நிறுவனம், இஷிகாவா, நிகாடா மற்றும் டொயாமா ஆகிய கடற்கரையோர பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

    அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

    • புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது.
    • மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

    டோக்கியோ:

    ஜப்பானுக்கு சொந்தமான ஹகோடேட் தீவு பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு திடீரென ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனையறிந்த மக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர். ஆனால் நேரம் செல்லச்செல்ல லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. எனவே புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். அதன் முடிவு வெளிவந்த பின்னரே மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • மற்ற ஒலி அலைகளுடன் ஒப்பிடும் போது சூரியனின் உட்புறத்தை இயக்க ரீதியாக மிகவும் வலுவாக கண்டறிய பி-முறைகள் உதவுகின்றன.
    • எப்-முறைகள் பாரம்பரியமாக சூரியனின் நில அதிர்வு ஆரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

    டோக்கியோ:

    நமது சூரிய குடும்பத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். இது மிகவும் வெப்பமான வாயுக்களை கொண்ட மிகப்பெரிய கோளாக உள்ளது.

    சூரியனை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்தநிலையில் சூரியன் நாம் நினைத்ததை விட பெரியது கிடையாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் ஆரம் (ரேடியஸ்) முந்தைய பகுப்பாய்வுகளை காட்டிலும் சில நூறு சதவிகிதம் மெலிதாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    டோக்கியோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியல் வல்லுநர் மசாவோ தகாடா, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டக்ளஸ் கோப் ஆகியோர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூரியனின் சூடான பிளாஸ்மா உட்புறத்தில் உருவாக்கப்படும் ஒலி அலைகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இது அழுத்தம் அல்லது பீ-முறைகள் என்று அழைக்கப்படுகிறது.

    மற்ற ஒலி அலைகளுடன் ஒப்பிடும் போது சூரியனின் உட்புறத்தை இயக்க ரீதியாக மிகவும் வலுவாக கண்டறிய பி-முறைகள் உதவுகின்றன. எப்-முறைகள் பாரம்பரியமாக சூரியனின் நில அதிர்வு ஆரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அலை சூரியனின் ஒளிக்கோளத்தின் விளம்புவுக்கு வலதுபுறம் நீட்டிக்கப்படாததால் அலை முற்றிலும் நம்பகமானவை அல்ல. அதற்கு பதிலாக பி-முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தும் அலை காந்தப்புலங்கள் மற்றும் சூரிய வெப்பச்சலன மண்டலத்தின் மேல் எல்லை அடுக்கில் உள்ள வெப்பம் ஆகியவற்றால் எளிதில் உள் வாங்கப்படுகிறது.

    இதனால் சூரியனின் ஆரத்தை அளவிட பி-முறைகளை பயன்படுத்த வேண்டும். இதனால் நாம் முன்பு கணித்ததை விட சூரியன் அளவு பெரியதாக இருக்காது. அதைவிட சிறியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார்.
    • மசாகோ வகாமியா தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார்.

    புதிதாக கற்றுக்கொள்ளவும், சாதனை படைக்கவும் வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 87 வயது பெண் ஒருவர். மசாகோ வகாமியா என்ற அந்த பெண் முதியவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடியோ கேம் மற்றும் புதிய செல்போன் செயலிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    இதுபற்றிய தகவல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஹினாடன் என்ற பெயரில் மசாகோ வகாமியா உருவாக்கி உள்ள புதிய செயலி முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக பொம்மை விளையாட்டாகும்.

    மசாகோ வகாமியா 43 வருடங்கள் வங்கி துறையில் பணியாற்றி உள்ளார். அவர் தனது 60-வது வயதில் தான் கம்ப்யூட்டர் பயிற்சி பெற தொடங்கி உள்ளார். அவரை பற்றிய பதிவு இணையத்தில் வைரலாகி 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

    • அமெரிக்காவின் சிட்டாடல் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களை டூர் அழைத்துச் சென்றது.
    • 1,200 ஊழியர்களை அவர்களது குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் சென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் கென்னத் சி.கிரிபின். சிட்டாடல் என்ற நிதி நிறுவனம், கணினி தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல தொழில்களை செய்யும் இவர், தனது நிறுவன ஊழியர்களை நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவையொட்டி மகிழ்விக்க விரும்பினார்.

    அதற்காக சுமார் 1,200 ஊழியர்களை, அவர்களது குடும்பத்தினருடன் 3 நாள் சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார்.

    டோக்கியோ நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வது, தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

    டிஸ்னிலேண்ட் கட்டணம் மட்டும் குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர் இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சமாகும்.

    மொத்த செலவுத்தொகையை அவர் வெளியிடவில்லை. இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவின் குர்கான் நகரில் இருந்து இந்நிறுவன பணியாளர்கள் சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.
    • எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துவிட்ட இன்றைய காலத்தில் ரெயில் நிலையங்கள் முதல் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய ஜவுளி கடைகள் என எங்கு பார்த்தாலும் எஸ்கலேட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.

    ஆனால் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்த ஒரு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்ட ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா என்ற நகரம் தான் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் நகோயா நகரில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே இந்த சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஜப்பான் நாட்டில் பயணிகள் எஸ்கலேட்டரின் இடது பக்கத்தில் நிற்க வேண்டும். மற்றவர்கள் விரைவாக ஏறவோ அல்லது இறங்கவோ வலது பக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    • ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இத்தாலியும், பின்லாந்தும் உள்ளன
    • குழந்தை பெற்று கொள்ள ஜப்பானிய தம்பதியினர் தயங்குகின்றனர்

    கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

    ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8 சதவீதம் எனும் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

    24.5 சதவீதத்துடன் இத்தாலியும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் அடுத்தடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்முறையாக அந்நாட்டில், 10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது.

    உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.

    1970 காலகட்டங்களில் 20 லட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 லட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.

    ஜப்பானிய நிறுவன பணியிடங்களில் ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம். இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள்.

    ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா கடந்த ஜனவரியில் தெரிவித்தார். இச்சிக்கலை விரைவாக சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாடு எடுக்க வேண்டும் என மனிதவள மேலாண்மை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவில், 2021 ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின்படி வயதானவர்களின் ஜனத்தொகை 10.1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.

    டோக்கியோ:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

    இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ராக்கெட் ஏவுதல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்லிம் விண்கலத்தை இன்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    4 அல்லது 6 மாதங்களில் விண்கலம் நிலவை சென்றடையும் என்றும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தில் சிறிய ரக லேண்டர் உள்ளது.

    இந்த ராக்கெட்டில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய எக்ஸ்ரே தொலை நோக்கியும் அனுப்பப்பட்டு உள்ளது.

    ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடங்களுக்கு பிறகு எக்ஸ்ரே இமேஜிங் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ் கோபி மிஷன் என்ற செயற்கை கோள் பூமியின் சுற்று வட்ட பாதையில் செலுத்தப்பட்டது. இது விண்மீன் திரள்களுக்கு இடையே உள்ளவற்றின் வேகத்தையும் ஆராயும். இந்த தகவல் மூலம் வான் பொருட்கள் உருவானது எப்படி என்பதை கண்டறிய உள்ளோம். மேலும் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்ற மர்மத்தை தீர்க்க வழி வகுக்கும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலவை ஆய்வு செய்வதற்கான இத்திட்டத்தில் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5-வது நாடாக ஜப்பான் இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது விண்கலங்களை நிலவில் தரையிறக்கி உள்ளன.

    ×