search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்கலேட்டர்"

    • முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.
    • எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துவிட்ட இன்றைய காலத்தில் ரெயில் நிலையங்கள் முதல் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய ஜவுளி கடைகள் என எங்கு பார்த்தாலும் எஸ்கலேட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.

    ஆனால் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்த ஒரு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்ட ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா என்ற நகரம் தான் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் நகோயா நகரில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே இந்த சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஜப்பான் நாட்டில் பயணிகள் எஸ்கலேட்டரின் இடது பக்கத்தில் நிற்க வேண்டும். மற்றவர்கள் விரைவாக ஏறவோ அல்லது இறங்கவோ வலது பக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    • ரெயில் நிலையத்திற்கு பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
    • 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது.

    குறிப்பாக கூடுதல் இருக்கைகள்அமைக்கப்பட்டும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டும் வந்தது. இதில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் நடைபெற்றது. எஸ்கலேட்டர் பணி ஏறத்தாழ 70 சதவீதபணிகள் நிறைவடைந்து விட்டது, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது . ஒரு பிளாட்பார்மில் இருந்து மறு பிளாட்பார்மிற்கு செல்ல நடை மேம்பாலம் மற்றும் மின் தூக்கியை(லிப்ட்) பயணிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் லிப்ட அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் ெரயில் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கியும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தியும் மறு பிளாட்பார்மிற்கு சென்று வந்தனர். எனவே பயணிகள் சிரமத்தை போக்க விரைவில் எஸ்கலேட்டர் பணிகளை முடித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×