என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம்.
    • பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அள வுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்தது. கடந்த 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 35 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட வாய்ப்பளித் திருந்தது.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து மாயாவதி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கட்சியின் நலன் கருதி அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய முடிவுகளை ஆய்வு செய்வோம். தலித் மக்கள் முக்கியமாக ஜாதவ் பிரிவினர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அவர்க ளுக்கு நன்றி.

    அதே நேரத்தில் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியைப் புரிந்துகொண்டு வாக்களிக்கத் தவறியது வருத்தம் அளிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியில் முஸ்லிம்கள் முக்கிய அங்கமாவர்.

    இந்த மக்களவைத் தேர்த லில் மட்டுமின்றி இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்க ளிலும் முஸ்லிம் களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிக முஸ்லிம் வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் நிறுத்தியது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தோல்வியைச் சந்தித்துள் ளது என்றார்.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
    • பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்நிலையில், 25 வயது 3 மாதங்கள் ஆன சமாஜ்வாதி வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், உ.பி.யின் கவுஷாம்பி தொகுதியில் பாஜக வேட்பாளரான வினோத் குமார் சோங்கரை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

    இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் புஷ்பேந்திர சரோஜின் தந்தையான முன்னாள் அமைச்சர் இந்த்ரஜித் சரோஜ், 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வினோத் குமார் சோங்கரிடம் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தார்.

    கடந்த தேர்தலில் அப்பாவை தோற்கடித்த பாஜக வேட்பாளரை இந்த தேர்தலில் மகன் வீழ்த்தி பழி தீர்த்துள்ளார். 

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை வென்றுள்ளது.
    • உத்தரபிரதேசத்தில் பாஜக 33 இடங்களையும் வென்றுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களையும் பாஜக 36 இடங்களையும் வென்றுள்ளது.

    இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 13 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 சட்டமேலவை உறுப்பினர்களும் போட்டியிட்டனர். அதில் 8 சட்டமனற உறுப்பினர்களும் 1 சட்டமேலவை உறுப்பினரும் வென்று எம்.பி.யாகி உள்ளனர்.

    இதனால் விரைவில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒருவர் இரண்டு பதிவுகளை வகிக்க முடியாததால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி எம்.எல்.ஏ பதவியை அவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவ் (கர்ஹால்), ஜியா உர் ரஹ்மான் (குந்தர்கி), லால்ஜி வர்மா (கடேஹாரி) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    பாஜக எம்எல்ஏக்கள் பிரவீன் படேல் (புல்பூர்), அதுல் கர்க் (காசியாபாத்), அனூப் பிரதான் (கைர்) ஆகியோர் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.

    • உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது. பேசிக்கொண்டிருந்த போதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட்டத்தில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.

    அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது .சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கு நடத்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவராத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
    • காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியா கூட்டணி 234 இடங்களும் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை பெற்றுள்ளதால் ஜூன் 8 ஆம் தேதி ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதி அளித்திருந்தார். மாதா மாதம் பெண்களுக்கு 8,500 ரூபாய் அவர்களின் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரபிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ஏராளமான முஸ்லீம் பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் 1 லட்ச ரூபாய்க்கான கேரண்டி கார்டு உடன் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த உத்தரவாத அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு ரசீது கிடைத்ததாக சில பெண்கள் தெரிவித்தனர்.

    தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் 1 லட்சம் பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது இந்தியா கூட்டணி வென்றுள்ளதால், இந்த உத்தரவாத அட்டையை சமர்ப்பிக்க வந்துள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புகளை முறியடித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளது.

    முக்கியமாக இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கைகள் ஓங்கியுள்ளது. மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளை இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி கைப்பற்றியுள்ளது. 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    உத்தர பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக வந்துள்ள இந்த தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணாமாக அகிலேஷ் யாதவ் உள்ளார். முக்கியமாக இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் அவரது குடும்பத்திலிருந்து 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கன்னோஜ் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றுள்ளார்.

    மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகிலேஷ் யாதவின் உறவினர்களான அக்ஷய் யாதவ் அயோத்தி ராமர் கோவில் உள்ள பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் ஆசாம்கர் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதவுன் தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், " இந்திய கூட்டணியின் வெற்றி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தலித்-பகுஜன் மக்களின் நம்பிக்கையின் வெற்றியாகும்.

    ஒடுக்கப்பட்டோர், உயர் சாதியினரிடையே பிற்படுத்தப்பட்டோர், சமத்துவம், மரியாதை, சுயமரியாதை, கண்ணியமான வாழ்க்கை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பைக் காப்பாற்ற தோளோடு தோள் நின்ற மக்களின் வெற்றி இது" என்று தெரிவித்துள்ளார்.  

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் உள்ள தொகுதியையே பாஜக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை தோற்கடித்த பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லாலிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.

    கிஷோரி லால் 5,39,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியை அவர் தோற்கடித்துள்ளார்.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

    இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,52,513 ஆகும்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வாரணாசி தேர்தலில் பிரதமர் மோடி 5,81,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார்.
    • மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை இந்தியா கூட்டணி வழங்கி வருகிறது. என்.டி.ஏ கூட்டணி 296 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்கு தேசம், ஆர்.ஜே .டி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் இறுதி முடிவு எப்படியும் மாற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போதைய 4.00 மணி நிலவரப் படி இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி முகத்தில் உள்ளார். வயநாடு தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    குறிப்பாக ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை உத்தரப் பிரதேச மாநிலத்திலேயே இன்று பதிவான அதிக வாக்கு வித்தியாசம் இதுவாகும்.

    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே உள்ளார். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுவது வழக்கம். கடந்த 2019 தேர்தலில் 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அங்கு இந்த தேர்தலின் மூலம் முதல் முறையாகக் களம் காணும் அவரது மகன் ராகுல் காந்தி தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

     

    • 75 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது.
    • ராமர் கோவில் கட்டியது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பா.ஜ.க.வுக்கு பெரும்பாலான தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்குதான் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவு அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்.

    2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜனதா இங்கு அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. 2014-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா 71 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அந்த கட்சி கூடுதலாக 61 இடங்களை அப்போது கைப்பற்றி இருந்தது. 2019 தேர்தலில் பா.ஜனதாவுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இது 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகும்.

    இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு உத்தரபிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

    மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜனதா 75 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 இடங்களில் அப்னாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றன.

    75 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதாவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அந்தக்கட்சி 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியே தொடக்கத்தில் பின் தங்கியிருந்தார். பின்னர் தான் அவர் கூடுதல் வாக்குகள் பெற்று அதிக முன்னிலைக்கு சென்றார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, சுல்தான்பூரில் களத்தில் நின்ற மேனகா காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். இது பா.ஜனதா தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமர் கோவில் கட்டியது, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக பா.ஜனதாவுக்கு பெரும்பாலான தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா கூட்டணியின் சிறப்பான செயல்பாடுகளால் பா.ஜனதா உத்தரபிரதேசத்தில் பெரும் சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அந்த கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் அந்த மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்கள். ஆனாலும் இந்த பிரசாரம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை அந்த மாநிலத்தில் இருப்பதை காண முடிந்தது. இதை இந்தியா கூட்டணி சரியாக பயன்படுத்திக் கொண்டது.

    பா.ஜனதா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    உத்தரபிரேதசத்தில் பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை அமைத்தார். ராகுல் காந்தியுடன் இணைந்து நடத்திய கூட்டங்கள் இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

    இங்கு இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 62 தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த முறையை விட 30 இடங்கள் கூடுதல் ஆகும். 2019 தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 இடங்களே கிடைத்தது.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது. இதில் 8 இடங்களில் அந்த கட்சி முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலை விட அந்த கட்சி தற்போது 7 இடங்களில் கூடுதல் பெற்று முன்னிலையில் இருக்கிறது. 2019-ல் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.

    தற்போது ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்களின் பிரசாரமும் , பா.ஜனதாவுக்கு எதிரான தேர்தல் வியூகமும் அந்த கட்சிக்கு கைக்கொடுத்தது.

    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

    இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவி மல்லிகா நட்டாவும் தனது வாக்கினை செலுத்தினார்.


    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


    சமாஜ்வாதி கட்சியின் காஜிபூர் மக்களவை வேட்பாளர் அப்சல் அன்சாரியின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிப்கதுல்லா அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பஞ்சாப்பில் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    எஸ்பிஎஸ்பி தலைவரும், உ.பி., அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் பல்லியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ×