என் மலர்
நீங்கள் தேடியது "Muzaffar Nagar"
- மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது.
- உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோயிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் பள்ளத்தால் ரோட்டின் ஒருபுறத்தில் இருந்த கால்வாய் தண்ணீர் மறுபக்கத்தில் உள்ள வயல்வெளிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமாக சாலைகள் போடப்படுவதால் தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் ராமர் கோவிலில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.






