என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • 30 வருடத்திற்கு முன் மூன்று பேர் 40 வயது நபரை தாக்கியுள்ளனர்.
    • தற்போது மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் ஒரு அடிதடி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 30 வருடங்களை சந்தித்து, 15 நீதிபதிகள் கைகளை கடந்த தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    1994-ம் ஆண்டு கமாசின் காவல் விலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராம்ரூப் ஷர்மா என்பவரை மூன்று பேர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட அவர்கள், குடிப்பதற்கு பணம் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் ராம்ரூப் ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடக்க விசாரணைக்குப்பின் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகள் ஆஜராக நிலையில் வழக்கு அப்படியே நிலுவையில் இருந்துள்ளது. இறுதியாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் விசாரணை தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 30 வருடத்தில் 15 நீதிபதிகள் மாறியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இருவர் சம்பவம் நடைபெற்றபோது வாலிபர்களாக இருந்தவர்கள். தற்போது 50 வயதை தாண்டியுள்ளது. ஒருவர் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார்.

    தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு அப்போது 40 வயதாகும். தற்போது 70 வயதை தாண்டியுள்ளது. தன்னை தாக்கியவர்கள் ஏராளமான வழக்கில் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் தொழில்முறை குற்றவாளிகள். இந்த சிறிய தண்டனை அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

    • காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.
    • இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தத்க்கது.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க ஊக்குவிக்கும் வீடியோக்களை வெளியிட்டு பாடம் எடுத்த பெண் யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் வசித்து வரும் சிக்கா மெத்ரே 'She will say no - let her' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார். 20,50 சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட இந்த சேனலில் இதுவரை 115 வீடியோக்களை அவர் பதிவேற்றியுள்ளார்.

     

    அந்த வீடியோக்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அனுமதி இல்லாமல் வலுக்கட்டாயமாக அவர்களுடன் பாலியல் உறவு வைப்பதை ஊக்குவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாராயண் பரத்வாஜ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது மெத்ரே கைது செய்யப்பட்டுள்ளார். பரத்வாஜ் தனது புகாரில், இந்த வீடியோக்கள் மூலம் மெத்ரே இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சிக்கா மெத்ரேவிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரது யூடியூப் சேனலையும், சமூக வலைதளக் கணக்குகளையும் முடக்கியுள்ளனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    தனது யூடியூப் பக்கத்தை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால் சிக்கா மெத்ரே இத்தனை நாள் சிக்காமல் இருந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள நேஷனல் பேஷன் டெக்னோலஜி இன்ஸ்டிடியூட்டில் [NIFT] பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.
    • 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள கல்லறையில் ஒரு நபர் கத்தியால் பெண்ணின் தலையை துண்டித்து, வீடியோவில் குற்றத்தை வெட்கமின்றி ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா நகர் கோட்வாலி பகுதியின் மொஹல்லா கிர்கானியில் உள்ள கல்லறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அந்த பெண்ணை கொலை செய்ததாக அந்த இளைஞர் வீடியோவில் தற்பெருமை பேசுகிறார்.

    அந்த கொடூரமான குற்றத்திற்கு எந்த வருத்தமும் காட்டாத அந்த நபர், தனது நண்பர்கள் காட்டிக் கொடுத்தால் அவர்களையும் கொன்றுவிடுவேன் என்று கூறினார். மேலும் அந்த வீடியோவில் தான் செய்த குற்றத்தை பேசி சிரித்துவிட்டு, தான் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகன் என்றும், "கல்நாயக்" படத்தில் தத் நடித்த 'பல்லு பல்ராம்' கேரக்டரின் ரசிகன் என்றும் கூறியுள்ளார்.

    காதலில் துரோகத்தை எதிர்கொண்டதாகவும், துரோகத்திற்கு "மரணம்" தான் தண்டனை என்றும் அந்த மனிதன் கூறுவதுடன் சிலிர்க்க வைக்கும் வீடியோ தொடங்குகிறது. "நான் அவளது கழுத்தை அறுத்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். குற்றத்தை செய்ய ஏன் படம் பார்த்தீர்கள் என்று கேட்டதற்கு, "பல்லு. நான் சஞ்சய் தத்தின் ரசிகன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். வீடியோவில், அவர் தன்னை "பல்லு" என்று அடையாளம் காட்டுகிறார். இருப்பினும், அவரது பெயர் அட்னான் என்று கூறப்படுகிறது.

    மேலும் தான் செய்த குற்றத்தை தற்பெருமை கூறியதோடு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதில் "எனது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது தொட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தொடத் துணிந்தவர்களின் வீடுகளில் குண்டு வீசுவேன்" என்றும் கூறியுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் ஒரே ஒரு கொலை செய்ததால் என்னை என்கவுன்டர் செய்யமாட்டார்கள், 10 அல்லது அதற்கும் மேல் கொலை செய்தால் தான் என்கவுன்டர் செய்வார்கள் என்றும் திமிராக பதில் பேசியுள்ளார்.

    இந்நிலையில் பலியான பெண் ஆஸ்மா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


    • இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் பதவி பறிபோகும்.
    • சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பா.ஜனதாவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது.

    இதனால் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது. இதற்கு உத்தரபிரேதசத்தில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.

    இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்ற உத்தரபிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

    இதில், காஜிபூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அப்சல் அன்சாரி பா.ஜ.க.வின் பராஸ்நாத் ராயை 1, 24, 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடிந்தது.

    ஜூலை மாதம் அவரது வழக்கில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்புதான் அவரது புதிய எம்.பி. பதவி நீடிக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

    இதேபோன்று அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திரயாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவேளை அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும்.

    ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவரது எம்.பி. பதவியும் கைவிட்டுப் போய்விடும்.

    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சந்தவுலி தொகுதியில் பா.ஜ.க.வி.ன் மகேந்திரநாத் பாண்டேவை தோற்கடித்த சமாஜ்வாடியின் வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் அவரது எம்.பி. பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

    இறுதியாக, உ.பி.யில் சுயேச்சையாக வென்ற பட்டியலின தலைவர் சந்திர சேகர் ஆசாத்மீது 30 வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதால் அவரது அரசியல் வாழ்க்கைக்கே பேராபத்து நேரும் அபாயம் உள்ளது.

    இதனால் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.

    • வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வென்றார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.

    அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.

    ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.

    பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.

    • கட்டணம் கேட்டதால் ஜேசிபி டிரைவர் ஆத்திரம் அடைந்தார்.
    • புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை தகர்க்கும் வீடியோ வைரலானது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு வந்த புல்டோசர் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்தும்படி டிரைவரிடம் கேட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த டிரைவர் திடீரென புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடிக்கத் தொடங்கினார். இதனால் அங்கு செயல்பட்டு வந்த இரு கட்டணம் வசூலிக்கும் மையங்கள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவுசெய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஹபூர் மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும் திடீரென ஏ.சி. பெட்டிகளில் ஏறி பயணிப்பதும், அவர்களுடன் சக பயணிகள் சண்டையிடும் காட்சிகளும் இணையத்தில் அடிக்கடி வெளியாவது உண்டு.

    இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் உத்தரகாண்டின் டேராடூனுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் ஏராளமான பயணிகள் நின்றபடி பயணம் செய்யும் காட்சிகள் உள்ளது. மேலும் பயணிகள் நிற்க கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.

    வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டவை. அதில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் கிடையாது. அவ்வாறு இருக்கும் போது வந்தே பாரத் ரெயிலுக்குள் இவ்வளவு பயணிகள் கூட்டம் வந்தது எப்படி என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களில் மெட்ரோவில் இருப்பதை போன்று டிக்கெட் இல்லாமல் யாராலும் உள்ளே வர முடியாது என்ற முறையை கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.


    • ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர்.
    • இந்த மோசடிவேலையில் தந்தையும் உடந்தை என்று தெரியவந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கூட்டாக சேர்ந்து மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், இல்லத்தரசிகள் என வகைதொகை இல்லாமல் பலரை ஏமாற்றி ரூ.400 கோடி வரை திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது.

    நிகாரிகா வென்டியூர்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்தி வந்த அபிஷேக் திவேதி அவரது மனைவி நிஹாரிகா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

     

    இந்த மோசடி வேலையில் அபிஷேக்கின் தந்தை ஓம் பிரகாஷும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் போலீசார் FIR பதிந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகாரிகா நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதில், நவீன மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது நின்று பயணம் செய்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    • விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
    • பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும்.- காங்கிரஸ் தலைவர்.

    மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைக்க இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை பாராளுமன்றத்திற்கான அக்கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். இதற்கான கூட்டம் பழைய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர்ந்தனர். ஆனால் உத்தர பிரதேசத்தில் இரண்டு எம்.பி.க்களை கொண்டு ராஷ்டிர லோக் தளம் கட்சி தலைவரும் ஜெயந்த் சவுத்ரி எம்.பி.க்களுடன் அமர்ந்திருந்தார். இவர் முன்னாள் பிரதமர் சரண் சிங் சவுத்ரியின் பேரன் ஆவார்.

    எம்.பி.க்களுடன் அமர வைத்து ஜெயந்த் சவுத்ரியை அவமதித்துள்ளது என பாஜக மீது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் விமர்சனம் செய்துள்ளது. அதேவேளையில் இது ஒரு பெரிய விசயம் அல்ல என ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தெரிவித்துள்ளது.

    சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய்

    இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய் கூறுகையில் "மேடையில் இடம் வழங்காதது மூலம் சிறந்த விவசாயிகளுக்கான சிறந்த தலைவரின் (சரண் சிங் சவுத்ரி) பேரனை இழிவுப்படுத்துவதாகும். விவசாயிகளை பயங்கரவாதிகள் மற்றும் துரோகிகள் என அழைத்து அதே கட்சிதான் பாஜக.

    விவசாயிகள் மற்றும் தன்னுடைய சுய மரியாதை குறித்து கவலைப்பட்டால் இதை அவர் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சமாஜ்வாதி கட்சியில் அவர் மிகப்பெரிய அவரில் மதிக்கப்பட்டார். அவருடைய சுய மரியாதைக்காகவும், விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதற்காகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு வர விரும்பும் ஒவ்வொருவரையும் வரவேற்க தயாராக இருக்கிறோம். அகிலேஷ் யாதவிடம் யாரெல்லாம் செல்கிறார்களோ, அவர்களை இரண்டு கைகளை விரித்து வரவேற்பார்" என்றார்.

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்

    காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில் "பாஜக கூட்டணி கட்சி தலைவரை அவமதித்துள்ளது. பாஜக கட்சிக்கு சென்றவர்களுக்கு எல்லாம் இதுபோன்றுதான் நடக்கும். அவர்களுடைய கட்சியில் இணையும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். பெரிய மாலை போடுவார்கள். பின்னர் அவமதிப்பார்கள்" என்றார்.

    ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார்

    இதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. அனில் குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி எப்போது எங்களுக்கு மரியாதை கொடுத்தது? ஒருவர் மேலே அமர்ந்தாலும் கீழே அமர்ந்தாலும் பெரிய விஷயம் இல்லை. பரந்த மனதுடன் அரசியல் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. எங்கள் கட்சி என்.டி.ஏ.-வின் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாகும். தொடர்ந்து அதனுடன் இருக்கும்.

    இவ்வாறு அனில் குமார் தெரிவித்தார்.

    • ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்தது.
    • அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 293 இடங்களில் வென்று பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களில் வென்றுள்ளது.

    பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளதால் கூட்டணி காட்சிகளை நம்பியே மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் ஏமாற்றம் அடைந்ததாகக் 'ராமாயணம்' டிவி தொடரில் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் சமாஜ்வாதியிடம் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ராமாணந்தின் 'ராமாயணம்' டிவி தொடரில் லஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், முதலில், வாக்குப்பதிவு மிகவும் குறைவாக இருந்தது, பின்னர் இப்படிப்பட்ட ஒரு முடிவு. நான் தொடர்ந்து மக்களை வாக்களிக்க வற்புறுத்தினேன், ஆனால் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ஆனால் இந்த கூட்டணி அரசால் 5 வருடங்கள் சிரமமின்றி இயங்க முடியுமா?

    வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் என்பதை மறந்துவிட்டோம். கடவுளையே மறுப்பவர்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? சுயநலவாதிகள். அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம்.

    ராமரைக் கூடாரத்திலிருந்து வெளியே எடுத்து வந்து பிரமாண்ட கோவிலில் கட்டியர்களுக்கு எப்படி உங்களால் துரோகம் செய்ய முடிந்தது. இந்தியா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.

    கங்கனா ரனாவத், மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார், இரண்டாவதாக, மீரட்டில் எனது மூத்த சகோதரர் அருண் கோவில் வெற்றி பெற்றுள்ளார். இருவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ராமாயண தொடரில் லஹேரியுடன் இணைந்து ராமராக நடித்த அருண் கோவில் பாஜக சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ராமர் படத்துடன் மீரட்டில் பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
    • பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.

     பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி பல இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும் 6 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் 16 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    அக்பர்பூர், அலிகார், அம்ரோஹா, பான்ஸ்கான், பதோஹி, பிஜ்னோர், தியோரியா, ஃபரூக்காபாத், ஃபதேபூர் சிக்ரி, ஹர்தோய், மீரட், மிர்சாபூர், மிஸ்ரிக், புல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ் ஆகிய 16 தொகுதிகளில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது

    இந்த 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றிருந்தால் பாஜக 226 இடங்களையும் பாஜக கூட்டணியாக 278 இடங்களையும் தான் வென்றிருக்கும்.

    2014 மற்றும் 2019 தேர்தல்களில் முறையே 19.77% மற்றும் 19.42% வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் 2024 தேர்தலில் வெறும் 9.39 சதவீத வாக்கையே பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெல்லவில்லை. கடந்த முறை 5 தொகுதிகளை வென்ற சமாஜ்வாதி இம்முறை 37 இடங்களில் வென்றுள்ளது.

    அலிகர் தொகுதியில் 15,647 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது.

    அம்ரோகா தொகுதியில் 28,670 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்ற நிலையில் அத்தொகுதியில் பகுஜன் சமாஜ் 1,64,099 வாக்குகள் பெற்றுள்ளது.

    ×