என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    • தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார்.

    சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது . மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் முஜாஹித் (வயது 20) என்ற வாலிபருக்கு நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

    முன்னதாக முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக அவரை ஓம்பிரகாஷ் என்பவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஜாஹித் தனக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து பேசியபோது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பிருந்தே ஓம் பிரகாஷ் என்னை நிர்வாணமாக படம்பிடித்து தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். நான் வசித்து வந்த குடியிருப்பில் வைத்து என்னை ஓம் பிரகாஷ் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    இந்நிலையில் அவரது சூழ்ச்சியால் தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார். மேலும் எனது தந்தையை கொன்றுவிடுவேன் என்று ஓம் பிரகாஷ் மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார்.
    • மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான வடிகால் கட்டுமானம் செய்யப்படவில்லை

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது தொடக்கத்திலிருந்தே இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்துக்காகவே பாஜக ராமர் கோவிலை காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றமாசாட்டி வருகின்றன.

    மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சத்துடன் நடத்தப்பட்ட ராமர் கோவில் திறப்பு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாத நிலையில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலும், விமான முனையமும் அந்த பகுதிக்கு புதிய பளபளப்பை கொடுத்தாலும் அங்குள்ள மக்களின் மனநிலை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாகவே இந்த முடிவுகளை பார்க்கமுடிகிறது.

    இதற்கிடையில் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சமபவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

     

     

     

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்படும் முன்னதாகவே அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இன்னும் அங்கு கட்டுமனாப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன. 

     

    • தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்
    • அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.

    தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு டி.எஸ்.பி. கிருபா சங்கர் எடுத்திருந்தார்.
    • ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பிக்பூர் சர்க்கிள் அதிகாரியாக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தார்.

    ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அப்போது அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை அவர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

    அந்த சமயம் தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் சந்தேகப்பட்ட அவரது மனைவி தனது கணவனை காணவில்லை என்று உன்னாவ் எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளார்.

    அப்போது டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

    உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

    • சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.
    • சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உத்தபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் 15 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் வெகு நேரமாக குளித்து மகிழ்ந்துள்ளார். பின்னர் வெளியே வந்த சில நிமிடங்களில் அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் மற்றொரு வாலிபரை ஏமாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
    • பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களை சம்மதிக்க வைத்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பாரதிய கிஷான் யூனியன் (BKU) இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் இந்த சம்பவம் முஜாஹித் (வயது 20) வயது வாலிபருக்கு நடந்துள்ளது.

    இதெல்லாம் தனக்கு ஓம் பிரகாஷ் என்பரால் நடைபெற்றதாக முஜாஹித் தெரிவித்துள்ளார். முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரியில் ஓம்பிரகாஷ் சேர்த்துள்ளார்.

    அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மருத்துவவர்கள் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் ஓம் பிரகாஷ் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

    முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது ஓம் பிகராஷ் ஆபரேசன் தியேட்டரில்தான் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக முஜாஹித் கூறியதாவது:-

    ஓம் பிரகாஷ் இங்கே என்னை அழைத்து வந்தார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. நான் மயக்கம் தெளிந்து பார்க்கும்போது, நான் பெண்ணாக மாற்றப்பட்டுள்ளேன் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

    பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். இனிமேல் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் யாரும் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார். தனது தந்தையை சுட்டுக் கொள்வேன். குடும்ப நிலத்தின் என்னுடைய பங்கை பெறுவேன் என ஓம் பிரகாஷ் மிரட்டினார்.

    நான் உன்னை பெண்ணாக மாற்றியுள்ளேன். தற்போது நீ என்னும் வாழ வேண்டும். நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்ள வழக்கறிஞரை ஏற்பாடு செய்து விட்டேன். உன்னுடைய நிலத்தை விற்று லக்னோ சென்று விடுவேன் எனக் கூறினார்.

    இவ்வாறு முஜாஹித் தெரிவித்துள்ளார்.

    விவசாய தலைவர் ஷியாம் பால் தலைமையில் BKU தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓம் பிரகாஷ் மற்றும் இதில் தொடர்புடைய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசார் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே போலீசார் ஓம்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    உத்தரபிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

    7 பேர் பயணம் செய்த பைக்கின் பின்புறம் வந்தவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில், ஹாப்பூர் போலீசார் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு 9,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்தாண்டு இதே ஊரில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் 22,000 அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.
    • 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும்.

    மோடி 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வாரணாசி சென்றார். 20 ஆயிம் கோடி ரூபாய்களை விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுத்துவதை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொணடு பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    கங்கா தேவி என்னை மடியில் ஏந்திக் கொண்டது. இதனால் நான் வாரணாசியின் ஒரு பகுதியாகிவிட்டேன். வாரணாசி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.பி.யாக மட்டும் தேர்வு செய்யவில்லை. பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர்.

    ஜனநாயக நாடுகளில் 3-வது முறையாக ஒரு அரசை தேர்வு செய்வது அரிதிலும் அரிது. ஆனால் இந்திய மக்கள் அதை செய்துள்ளனர்.

    பாபா விஷ்வநாத் மற்றும் கங்கா தேவி ஆசிர்வாதத்துடன், காசி மக்களின் அன்புடன், 3-வது முறையான உங்களுக்கு சேவை செய்ய நாட்டின் பிரதமராகியுள்ளேன்.

    21-ம் நூற்றாண்டில் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3-வது மிகப்பெரிய நாடாக மாற்றுவதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். உங்களின் நம்பிக்கை என்னுடைய மிகப்பெரிய சொத்து. இந்த நம்பிக்கை நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், கடினமாக உழைக்கவும், உங்களுக்கு சேவை செய்யவும் உத்வேகம் அளித்துள்ளது. நான் இரவு பகலாக வேலை செய்வேன். உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

    முன்னேற்ற இந்தியாவின் வலிமையான தூணாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது 3-வது வருட ஆட்சி காலத்தை தொடங்கியுள்ளேன். அரசு அமைந்த உடன் முதல் முடிவு விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்கள் தொடர்பான குறித்து எடுக்கப்பட்டது.

    நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டினாலும் அல்லது பிரதமர் கிசான் சம்மன் நிதியை முன்னெடுப்பதாக இருந்தாலும், இந்த முடிவுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவும்.

    இன்றைய திட்டமும் வளர்ந்த இந்தியா என்ற பாதையை வலுப்படுத்தப் போகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ரூ.20,000 கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைந்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • அனுமதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
    • லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    தந்தையின் விருப்பத்தை மகள்கள் நிறைவேற்றும் வகையில் லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

    லக்னோ சவுக்கில் வசிக்கும் முகமது இக்பால், தனது மகளின் திருமண தேதி நெருங்கி வரும் வேளையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    லக்னோவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.

    முகமது இக்பாலின் உடல் நலம் மோசமாக உள்ளதால், தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்ட மகள், அவர் முன்பாகவே திருமணம் நடைபெற முடிவு செய்தார்.

    அதன்படி, மருத்துவமனையின் ஒப்புதலோடு ஐசியுவில் தந்தை முன்பாக இஸ்லாமிய முறைப்படி ஒரு வித்தியாசமான திருமண விழா நடந்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    மகளின் இந்த செயல் தந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என இணைய வாசிகள் மணமகளை வாழ்த்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, திருமணம் முடிந்த நிலையில் குடும்பத்தினர் முகமது இக்பால் குணமடைய தொடர்ந்து நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.

    • கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
    • மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் வெப்ப நிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மக்கள் சொல்லிலடங்கா இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் பஞ்சம், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் என நிலைமையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களின் நிலைமை இன்னும் மோசமானது ஆகும்.

    நாட்டில் இதுவரை ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அரசியல் போட்டியில் அண்டை மாநிலமான அரியானா யமுனை நதி நீரை அடைத்து வைத்துள்ள நிலையில் தலைநகர் டெல்லி தண்ணீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கடந்த ஒன்றரை மாத காலமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் புனித கங்கை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

    நீர் வற்றிய நிலையில் கற்பாறைகளும், குப்பைக்கூளங்களும், உடைந்த படகுகளும் நதி மணலில் கிடப்பது காண்போருக்கு வெயிலின் கொடுமையைதெள்ளிதின் உணர்த்துகிறது. வற்றாத ஜீவ நதியான கங்கையின் நிலைமையே இப்படியாக இருக்கும் நிலையில் மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

     இமய மலையில் உருவாகி வங்கக்கடலில் கடக்கும் கங்கை நதி இந்து மதத்தில் புனத்தமனாதாக பராக்கப்படும் நிலையில் மக்கள் அதிகம் புழங்குவதால் மிகுந்த அழுக்கடைந்த நிலையில் மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழித்து கங்கையை சுத்தம் செய்யும் பணியில் சமீப காலங்களாக ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    • தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
    • கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.

    ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    • பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
    • புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.

    இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.

    அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

    மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×