என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா சத்சங் என்ற இந்துமத பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற இந்துமத பிரசார கூட்டம் நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    அந்த மத பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் பஸ் மற்றும் வேன்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

    • அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது.
    • ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் ஜாமின் கேட்டவரின் வழக்கு விசாரணையில் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் ஒருநாள் மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இருந்த டெல்லியில் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மதமாற்றம் செய்யப்படுவதாக கைலாஷ மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ராம்காளி பிரஜாபதி என்பவர் தனது சகோதரர் ராம்பாலை கைலாஷ் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.

    ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு டெல்லியில சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவார் எனவும் கைலாஷ் தெரிவித்தார். ஆனால் ராம்பால் திரும்பவில்லை. இது தொடர்பாக ராம்காளி கைலாஷிடம் கேட்டபோது, அவர் திருப்தி அளிக்கும் வகையிலும் பதில் அளிக்கவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஹமிர்பூர் கிராமத்தில் இருந்து ஏராளமான மக்களை டெல்லி மதக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் கைலாஷ் மீது கடத்தல் மற்றும் மதமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கே. கிரி, இதுபோன்ற மதக் கூட்டங்களில் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைலாஷ் ஹமிர்பூரில் இருந்து மக்களை அழைத்து சென்று, அதற்குப் பதிலாக பணம் பெற்றுள்ளார் என வாதிட்டார்.

    அதேவேளையில் கைலாஷ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால் "ராம்பால் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்படவில்லை. அவர் கிறிஸ்தவ மதக் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். சோனு பாஸ்டர் இதுபோன்ற கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

    அப்போது நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் "அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    பிரசாரம் என்ற வார்த்தை ஊக்குவித்தல் என்று அர்த்தம். ஆனால், ஒரு நபரை அவரது மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றுவது என்று அர்த்தம் அல்ல.

    இதுபோன்ற செயல்முறைக்கு அனுமதி அளித்தால், இந்த நாட்டின் மெஜாரிட்டி மக்கள் ஒருநாள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். இந்திய மக்கள் இதுபோன்ற மதக் கூட்டம் மூலம் மதமாற்றம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

    உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் உள்ளிட்ட பிற சாதியினரை கிறிஸ்தவர்களாக மாற்றும் சட்ட விரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது என்பது பல வழக்குகளில் இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது" என்றார்.

    அத்துடன் கைலாஷுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    • சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
    • சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.

    அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம்.

    டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் புறநகரில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்தது.

    மழை காரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் முரதாபாத் மாவட்டத்தில் போலாநாத் காலனியில் மழை நீர் தேங்கி உள்ளது. போலாநாத் காலனி பகுதியில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மழை நீர் வடிகால் இல்லை. இங்கு தேங்கி இருக்கும் நீரில் மூழ்கவும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் 3 நாட்களாக இங்கு அடைபட்டிருக்கிறோம். நேற்று மட்டும் ஒரு படகு வந்தது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் இப்படிதான் நடக்கும் என்றார்.

    இந்த பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் படகை பயன்படுத்தி வருகிறோம். இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம். படகு நேற்றுதான் வந்தது. இந்த தண்ணீரில்தான் பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

    • ஒருநாள் ரீல்ஸ்களை பார்த்த ராஜ்குமாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
    • நெகிழ்ந்த கோவிந்த் கடந்த 20-ந்தேதி அன்று ராஜ்குமாரியின் கிராமத்திற்கு வந்தார்.

    கான்பூர்:

    சமூக வலைத்தளங்கள் மூலம் காணாமல் போனவரை கண்டுபிடித்தது தொடர்பான செய்திகள் அண்மை காலமாக நிகழ்ந்து வருகிறது. அதேபோல் குடும்ப பாடலை பாடி தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான காட்சிகள் சினிமா படக்காட்சிகளில் வரும். இவ்விரு விஷயத்தையும் கிட்டத்தட்ட சேர்ந்தாற் போல் ஒரு சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ளது.

    கான்பூரை சேர்ந்த ராஜ்குமாரி என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பார்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி ஒருநாள் ரீல்ஸ்களை பார்த்த ராஜ்குமாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ரீல்சில் காணப்பட்ட ஒருவரின் முகம் பழக்கப்பட்ட முகமாக இருந்தது. இதனால் சற்று உற்று கவனித்த ராஜ்குமாரிக்கு அது தொலைந்து போன அண்ணன் என தெரியவந்தது.

    கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை தேடுவதற்காக சென்ற ராஜ்குமாரி அண்ணன் பால் கோவிந்த் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் குறித்து விசாரித்த போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் ராஜ்குமாரிக்கு ரீல்ஸ் உதவி உள்ளது. அதிலும் சுவாரசியம் என்னவென்றால் கோவிந்தை கண்டுபிடிக்க உதவியது அவரது உடைந்த பல் தான். ஆம் சின்ன வயதில் கோவிந்தின் பல் ஒன்று உடைந்து இருக்கும் என்று கூறுகிறார் ராஜ்குமாரி.

    அண்ணன் கிடைத்த மகிழ்ச்சியில், ராஜ்குமாரி தனது சகோதரனை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரும்படி கெஞ்சினார். இதனால் நெகிழ்ந்த கோவிந்த் கடந்த 20-ந்தேதி அன்று ராஜ்குமாரியின் கிராமத்திற்கு வந்தார்.

    இதனால் பல ஆண்டு காலம் பிரிந்த அண்ணன் - தங்கை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் உடைந்த பல் மூலம் ஒன்றிணைந்தனர்.

    • அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
    • கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    ஆனால் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சம்பவங்கள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

     

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ராம் பாத் சாலையில் பொத்தல்கள் ஏற்பட்டு மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில்தான் தற்போது, யோகி ஆதித்தனாத் அரசு மூன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

    இதற்கிடையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாகவும், கோவில்கள் பாஜக கொள்ளையடிப்பதற்கான இடங்களாக மாறிவிட்டன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
    • காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.

    உத்தரப் பிரதேசத்தில் பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தில் பிரியங்கா என்று பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளார் பிரியங்கா.

     

     

    இந்நிலையில்தான் நேற்று [ஜூன் 27] வியாழக்கிழமை காலை கிராமத்தின் அருகில் உள்ள கேசம்பூர் காட் நதிக்கு குழந்தைகளை குளிக்க அழைத்துச்சென்று தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.

     

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மொத்தம் உள்ள 4 குழந்தைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுவன் ஆற்றில் அருகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.

     

    இதற்கிடையில் தாய் பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, தனது குழந்தைகள் சதா பசியால் அழுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரகள் படும் கஷ்டத்தைப் போக்கவே அவர்களை கொன்றதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளார். 

    • சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், மஹோபா நகரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க மேலாளர் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் குமார் ஷிண்டே கடந்த 19ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சக ஊழியர்களுடன் ராஜேஷ் குமார் லேப்டாப் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென நாற்காலியில் சரிந்து கண்கள் மேலே சென்றவாரு மூச்சு பேச்சின்றி ஆனார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ராஜேஷ் குமாரை காப்பாற்ற முயன்றனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும், சிபிஆர் கொடுத்து காப்பாற்றவும் முயன்றனர்.

    பிறகு, அவரது உடல்நலம் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ராஜேஷ் குமார் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவர் திடீரென மாரடைப்பால் அவதிப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், 30 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், இளம் இந்தியர்களிடையே இதய நோய்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

    • இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.
    • 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று.

    செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

    இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

    'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவை வாரணாசி போலீசார் நிறைவேற்றி உள்ளனர்.

    9 வயது சிறுவன் ரன்வீர் பார்தி மூளைக்கட்டிக்கு மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இத்தகைய சூழ்நிலையில், ரன்வீர் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    சிறுவனின் விருப்பம் வாரணாசி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவன் ரன்வீர் பார்தி விருப்பத்தை வாரணாசி போலீசார் நிறைவேற்றினர். 

    போலீஸ் அலுவலகத்தில் சிறுவன் காக்கி சீருடை அணிந்து கேபினில் உள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்டான். அவனுக்கு மற்ற அதிகாரிகள் கைகுலுக்கி சல்யூட் அடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை வழங்கி இருந்தார்.
    • சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது.

    அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டத்தை டாடா சன்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அம்மாநில சட்டசபை வழங்கியது. அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கி இருந்தார்.

    இந்த நிலையில், கோவில்களின் அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த டாடா சன்ஸ் குழுமத்திற்கு உத்திர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ. 650 கோடியில் உருவாகும் இந்த திட்டத்திற்காக உத்திர பிரதேச அரசின் சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது. 90 ஆண்டுகள் லீசுக்கு வழங்கப்படும் நிலத்திற்காக ரூ. 1 மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.

    அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியக திட்டத்திற்காக டாடா சன்ஸ் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 650 கோடியை செலவு செய்ய இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் நாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில்களின் கட்டமைப்பு திறன் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும்.

    அருங்காட்சியகம் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி திட்டம் ஒன்றும் டாடா சன்ஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி ஆகும். இதே போன்று லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்து ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தவும் சட்டபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
    • வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் இப்போது சிக்கன் பிரியாணி எனப்படும் கோழி இறைச்சி பிரியாணி முக்கிய இடம் பெறுகிறது. பிரியாணி என்றால் அதில் லெக்பீஸ் எனப்படும், பெரிய இறைச்சித் துண்டு இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி, குஸ்காவாகிவிடும்.

    ஒரு திருமணவிழாவில் லெக்பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய ரகளையே ஏற்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நேற்று முன்தினம் அந்த திருமண விழா நடந்தது.

    அப்போது மணமகன் வீட்டாருக்கு வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் சிலருக்கு லெக்பீஸ் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லையாம். இதனால் வாலிபர்கள் அதை பிரச்சினையாக்கினர். முறையிடலாக தொடங்கிய பிரச்சனை வாக்குவாதம், கைகலப்பாக வளர்ந்து களேபரமானது. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையும் கோதாவில் இறங்கி, தங்கள் தரப்பினருக்காக சண்டையிட ஆரம்பித்தார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பலருக்கும் அடி உதை விழுந்தது. அப்போது சிலர் நாற்காலிகளையும் தூக்கி வீசினர்.

    இந்த மோதலை யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதுபற்றிய காட்சிகள் வைரலாக பரவியது. ஆனால் இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. வலைத்தள காட்சிகளை பார்வையிட்ட போலீசார், புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×