என் மலர்
நீங்கள் தேடியது "சிராஜ் பஸ்வான்"
- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது.
- நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது.
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் பீகாரில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் குடியுரிமை சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக மறைமுகமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. மேலும், வாக்காளர்களை நீக்கி தேர்தலில் வெற்றிபெற பாஜக முயல்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால், கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய பாராளுமன்ற அலுவல் பணி முற்றிலுமாக முடங்கியது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான சிராக் பஸ்வான் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) புதிது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிராக் பஸ்வான் கூறுகையில் "சிறப்பு தீவிர திருத்தம் பணி நமது நாட்டில் முதன்முறையாக நடைபெறவில்லை. முன்னதாக 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த முறை அதே அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது. ஆனால் யாராவது நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால், அவர்கள் மிகப்பெரிய உரிமையான வாக்குரிமையை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
- இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது
- லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை கடை முன் பெயர்பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
முதலாவதாக மத்தியில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் இந்த உத்தரவு ஏற்றத்தாழ்வுகளுக்கு உதாரணமாக அமையும் என்று கண்டித்திருந்தது.
மேலும் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிவினையை ஏற்படுத்தும் எதையும் தான் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உ.பியில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவரும் பாராளுமன்ற எம்.பியுமான ஜெயந்த் சவுத்ரே, கன்வரை சேர்ந்தவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் எப்போதும் ஒருவரின் மதத்தை கேட்பதில்லை. அது முக்கியமும் இல்லை. சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மதம் சார்ந்து பாஜக எழுப்பியுள்ள இந்த சர்ச்சைக்கு கூட்டணி கட்சித் தலைவர்களே கண்டனம் தெரிவித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

- கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும்.
- திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
கர்வா மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜ.க.வின் 'பரிவர்தன் யாத்ராக்கள்' (மாற்றத்திற்கான பேரணிகள்) பற்றி குறிப்பிடுகையில், மற்ற மாநிலங்களின் தலைவர்கள் "கழுகுகள் போல் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடிகிறது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜார்க்கண்டிற்கு வந்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அனைத்தையும் சொல்லும்.
கட்சி கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மாநில தலைமை முடிவு செய்யும். திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுதியதாக கூறப்படும் சம்பவம் கவலைக்குரியது மற்றும் கண்டனத்துகுரியது. இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியால் தற்போது வெளிநாடுகளில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. இப்போது இந்தியா சொல்வதை உலகமே கேட்கிறது என்றார்.






