search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Accident"

    • வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பிலிபிட்:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் பிரீதம் ராம் (28) என்பவர் தனது மனைவி ஈஸ்வரி தேவி, மகள்கள் நந்தினி(5), ரூபி (2) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பிலிபிட்-பிசல்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று பிரீதம் ராம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    மேலும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • உத்தர பிரதேசத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களின் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு கும்பலாக டிராக்டரில் பக்தர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி கொண்டிருந்தனர்.

    கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சம்பவ இடம் சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    உ.பி. சாலை விபத்து குறித்து தகவலறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும், பிரதமர் மோடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளார். முதல் மந்திரி ஆதித்யநாத் யோகி தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் நின்றிருந்த சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில் 8 பேர் பலியாகினர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர், உ.பி. முதல் மந்திரி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    பாட்னா:

    உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    அதிகாலையில் பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது. அப்போது, பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர் பஸ் என்ஜின் பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் 50 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆனது. மருத்துவமனையில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    உ.பி. சாலை விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், பலியானோர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    ×