என் மலர்
உள்ளூர் செய்திகள்
- படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
- மங்களூரில் இருந்து இன்று 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.
கொல்லம்
சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்த
னூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.
போத்தனூா்
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி
புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.
மங்களூரு - திருவனந்தபுரம்
மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.
- டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு......
அன்புதானே எல்லாம் என்றும்
டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
ஏற்கனவே சொன்னது தான்…
தனி நபர்களை விட தலைமை பெரியது
தலைமையை விட இயக்கம் பெரியது
இயக்கத்தை விட சமூகம் பெரியது
சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் அது தற்போதைய சூழலில் டாக்டர் அன்புமணி தலைமையில் மட்டுமே…
டாக்டர் அன்புமணி வழியில் நாம்... என்று பதிவிட்டுள்ளார்.
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள்.
இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை தி.மு.க. மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
- சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசனின் போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து அரிய இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்படி தற்போது அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலிருந்து உள்ளூர் வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது பயணிகளின் வருகையை குறித்து கொடைக்கானலில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர புதிதாக ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 2 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 20ம் தேதிக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்காக அரசு சிறப்பு சைட்சீயிங் பஸ் இயக்கப்பட உள்ளது. குறைவான கட்டணத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியும். பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் அவர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அலுவலர்கள் வழிகாட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.
- அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர்.
சென்னை:
'மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி' என்ற தலைப்பில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
* இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தன்மையை பாதுகாத்திடும் பேரியக்கமாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் தி.மு.க.வின் போராட்டம் தொடரும்.
* மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி தி.மு.க.
* கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.
* தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப்போராட்டத்தின் வழியே முன்னெடுக்க ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
* தி.மு.க. அதன் தலைமையிலான அரசின் சட்டப்போராட்டத்தால் பெறும் தீர்ப்புகள் ஜனநாயகத்திற்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியவை.
* பா.ஜ.க.வினர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர் என கூறியுள்ளார்.
- பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது.
- தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.
காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
- மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
- தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.
சென்னை:
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
தென் தமிழகத்தை யொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டை யொட்டி இருக்கும்.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிக பட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு.
- அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுவதாகவும், நானே தலைவர் பதவியில் நீடிப்பேன் எனவும் ராமதாஸ் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
முன்னதாக, அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது.
- 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
ராயபுரம்:
சென்னையில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டி தூக்கி வீசிய சம்பவங்களும் சமீபத்தில் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் பெண் ஒருவரை மாடு விரட்டி சென்று முட்டியது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவவீரரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் கண்காணிப்பு காமிரா காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்தது.
இதற்கிடையே சென்னை நகரப்பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
2-வது முறை அதே மாடு பிடிபட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனினும் பல்வேறு இடங்களில் இன்னும் கால்நடைகள் வழக்கம்போல் போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன.
இது அண்ணா சாலை, ஈ.வி.ஆர் பெரியார் சாலை, ஜி.எஸ்.டி சாலை போன்ற முக்கிய சாலை, மதுரவாயல் முதல் கோயம்பேடு மார்க்கெட் வரையிலான 5 கி.மீ பகுதியிலும், சென்னை துறை முகத்தை நோக்கி செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகள் செல்லும் பாதையிலும் மாடுகள் அடிக்கடி சுற்றுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைத்து பராமரிப்பதற்காக ராயபுரம் மண்டல அலுவலகம் அருகே நவீன வசதியுடன் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதல் கட்டமாக 250 மாடுகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
விபத்தில் கால் நடைகள் சிக்கினால் சிகிச்சை அளிக்கவும் தனி இடம் உள்ளது. சுத்தமான மற்றும் விசாலமான பகுதியில் மாடு களை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பராமரிப்பு மையத்தின் முகப்பு பகுதி மற்றும் உட்புற பகுதியில் இயற்கை சூழல் படத்துடன் வர்ணம் பூசப்பட்டு து உள்ளது. இது பார்ப்பவர்களை கவர்ந்து உள்ளது. இந்த புதிய கால்நடை பராமரிப்பு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வரும் மாதங்களில் இங்கு 600 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட உள்ளது.
மேலும் போதிய இடவசதி இல்லாமல் மாடுகளை பராமரிப்பவர்களும் இங்கு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பரமாரிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக தினமும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் அதற்கான செலவு குறித்து வரும் நாட்களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிக்க ராயபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
250 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்குள் 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் (2024) மொத்தம் 2,800 கால்நடைகள் பிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது. 1500 உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களது மாடுகளை சுதந்திரமாக சாலையில் சுற்றித் திரிய அனுமதித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.
- தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
- தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு.
நெல்லை:
உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழி தமிழ். இதனை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள். பாரம்பரிய பெருமை உடையவர்கள்.
தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. அதனால் தான் வெளிநாட்டினரும் தமிழ் கலாசாரத்தை நேசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு விழாக்களி லும் தமிழர்கள் பின்பற்றும் கலாசாரங்கள், நடைமுறைகள் இன்றளவிலும் வெளிநாட்டினரை ஈர்த்து வருகிறது. தமிழனின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு கடல் கடந்து வந்து காதலித்து தமிழனை திருமணம் செய்த பெண்கள் ஏராளம்.
அந்த வகையில் தான் நேற்று நெல்லை டவுனை சேர்ந்த ஒரு தமிழ் இளைஞரை வியட்நாம் நாட்டை சேர்ந்த இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-வாசுகி தம்பதியினர். இவர்களது மகன் மகேஷ் (வயது 35). இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து வியட்நாமில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதே நிறுவனத்தில் வியட்நாம் நாட்டு இளம்பெண்ணான நுயென் லே துய் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் காதலாக மாறியது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 2 பேரும் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இருவரது பெற்றோரிடமும் தங்களது காதலை தெரிவிக்கவே, அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்னர். மகிழ்ச்சியில் திளைத்த காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தபோது தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று நுயென்லே துய் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மணமகன் மகேஷ் மகிழ்ச்சியுடன் தனது காதலியையும், காதலியின் தாயாரையும் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.
நெல்லை டவுன்-குற்றாலம் சாலையில் உள்ள கோவிலில் வைத்து இருவ ருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து திரளான உறவினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்த னர். வெளிநாட்டு பெண் என்ற தகவலை கேள்விப் பட்டு, அவரை பார்ப்ப தற்காகவே ஒரு கூட்டம் அங்கு அலைமோதியது.
இந்த திருமணம் குறித்து மணப்பெண் நுயென்லே துய் கூற ஆரம்பித்தபோது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிதான் பேச ஆரம்பித்தார். அவரது அழகான தமிழ்பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இன்று எனக்கு திருமணம். நான் இப்போது இந்திய கலாச்சாரப்படி புடவையில் உள்ளேன். தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. அதன்படி எனக்கு திருமணம் நடந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் நாட்டையும் மிகவும் பிடித்து உள்ளது. இரண்டையும் நான் நேசிக்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறினார்.
- கொள்கை, கோட்பாடு உள்ள கட்சி பா.ம.க.
- உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
பா.ம.க. தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
* கொள்கை, கோட்பாடு உள்ள பா.ம.க. கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு தொடர்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்.
* பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஆபத்து உள்ளதால் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
* உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.






