என் மலர்
கர்நாடகா
- இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது.
- அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை.
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவaடுக்கப்பட்டது.
இந்நிலையி்ல் இந்த சம்பவத்தில் ஆர்சிபி அணி மீது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி தான் பொறுப்பு என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறையினரை ஆதரித்த தீர்ப்பாயம், அவர்களும் மனிதர்கள்தான், கடவுள்களோ மந்திரவாதிகளோ அல்ல என்று கூறியது. அவர்களிடம் அலாவுதீனின் மந்திர விளக்கு இல்லை என்றும், விரலால் தேய்த்தால் எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியது.
மூன்று முதல் நான்கு லட்சம் பேர் வருகை தந்ததற்கும், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி பெறாததற்கும் ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும். சமூக ஊடகங்களில் பதிவுகள் காரணமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்ததாக தீர்ப்பாயம் கூறியது.
மேலும் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரி விகாஸ் குமாரை இடைநீக்கம் செய்த அரசின் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
- கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
- நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் செல்லுங்கள்.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா,
"கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 10 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே குழுவிற்கு கடந்த பிப்ரவரி மாதமே, மாநிலத்தில் இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்களுக்கான காரணங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த தொடர்பாக, இதய நோயாளிகளை பரிசோதிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையும் எதிர்காலத்தில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் நாங்களும் மதிப்பளிக்கிறோம், அவர்களின் குடும்பங்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
இதுபோன்ற விஷயங்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் செயல்களை நான் கண்டிக்கிறேன். கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்.
ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும்.
- பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்
கர்நாடகாவில் முதல்வரை மாற்ற கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உடனடியாக முதல்வராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், 2028 சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் காங்கிரஸை வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "கட்சியும் ஒழுக்கமும் முக்கியம். நாடு முழுவதும், அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களையும் வலுப்படுத்த விரும்புகிறோம். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டும் பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்," என்று கூறினார்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கருத்து குறித்து கேட்டபோது, "யாருடைய ஆதரவும் தனக்கு தேவையில்லை என்றும், தற்போது முதல்வர் நாற்காலியை நோக்கிப் இருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
அடுத்த தேர்தலிலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே தனது முன்னுரிமை என்று கூறினார். கர்நாடகாவில் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் தெளிவுபடுத்தினார்.
- புல்லட் ரெயில்கள் விடப்போவதாக பாஜக வாக்குறுதி அளித்தது.
- நமக்கு அளித்தது தடம் புரண்டது, எரியும் பெட்டிகள், உடைந்த நம்பிக்கைகள், இதுவரை இல்லாத வகையிலான பணவீக்கம்.
காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலே "புல்லட் ரெயில்கள் விடப்போவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் நமக்கு அளித்தது தடம் புரண்டது, எரியும் பெட்டிகள், உடைந்த நம்பிக்கைகள், இதுவரை இல்லாத வகையிலான பணவீக்கம். ரெயில் கட்டணம் மற்றும் பெங்களூரு சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு மூலம் பாஜக சாமாணிய மனிதன் பையில் இருந்து பணத்தை பறிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
- மூதாட்டி வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
- மூதாட்டிக்கு குப்பை கொட்டிய பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஹுச்சம்மா (76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார். இதைப்பார்த்த மூதாட்டி ஹுச்சம்மா அவரிடம் ஏன் எனது வீட்டின் முன்பு குப்பை கொட்டினாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தை சேர்ந்த மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் வந்து மூதாட்டியிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் ஆத்திரம் அடைந்த பிரேமா, மூதாட்டி ஹுச்சம்மாவை அந்த பகுதியில் இருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்து தாக்கினார். இந்த சம்பவத்தில் பிரேமாவுக்கு ஆதரவாக மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் செயல்பட்டனர். மூதாட்டியை பிரேமா மரத்தில் கட்டி வைத்து தாக்கியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் மூதாட்டியை மீட்டனர்.
பின்னர் இது குறித்து தாக்கப்பட்ட ஹுச்சம்மாவின் மகன் கண்ணப்பா என்பவர் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோர் மீத தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய பிரேமாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் பங்கு என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..
- டி.கே. சிவகுமார் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முதலமைச்சராக வாய்ப்பு பெறலாம்.
- காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவில் இப்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
சித்தராமையாவுக்குப் பதிலாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்பார் என்ற ஊகங்கள் வேகமெடுத்துள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பெங்களூரு வருகை இந்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளது.
இந்தச் சூழலில், திங்களன்று, "கர்நாடக முதல்வர் அக்டோபரில் மாற்றப்படுவார் என்று சொல்கிறார்கள்" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அது உயர்மட்டத்தின் எல்லைக்குள் உள்ள விஷயம். இங்கு உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. இந்த விஷயத்தை உயர்மட்டத்திடம் விட்டுவிட்டோம், மேலும் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை யாரும் உருவாக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
மறுபுறம், டி.கே. சிவகுமார் அணியை சேர்ந்த தலைவர்கள் தலைமை மாற்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்.ஏ. இக்பால் உசேன், "டி.கே. சிவகுமார் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முதலமைச்சராக வாய்ப்பு பெறலாம்" என்று கூறினார்.
சிவகுமாரின் கடின உழைப்பு மற்றும் கட்சியின் வெற்றிக்கான உத்திகள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும், சரியான நேரத்தில் உயர் கட்டளை அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று சில தலைவர்கள் கூறி வருவதாகவும், அதைப் பற்றி அவர் பேசி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மே 2023 இல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
அந்த நேரத்தில், உயர்மட்டக் குழு இருவருக்கும் இடையே சமரசம் செய்து சித்தராமையாவை முதலமைச்சராகவும், சிவகுமாரை துணை முதலமைச்சராகவும் நியமித்தது.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் வகையில், அவர்களுக்கு இடையே சுழற்சி முறையில் முதல்வர் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அப்போது செய்திகள் வந்தன. இருப்பினும், கட்சி இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவில் இப்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
- பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக மாநகராட்சியின் குப்பை லாரியை நிறுத்துவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று இரவும் குப்பை லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அதிகாலையில் ஒரு நபர் குப்பையை போடுவதற்காக அங்கு வந்தார். அப்போது குப்பை லாரியின் பின்புற பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் தலை தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து குப்பை லாரியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு பெண்ணை கொன்று, அவரது கை, கால் கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டைக்குள் திணித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் பற்றி தெரிய வந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அந்த பெண் கழுத்தை நெரித்தோ அல்லது மூச்சை திணறடித்தோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டி-சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த நிறுவனத்தின் பெயர் மூலமாக போலீசார் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் உளிமாவு அருகே வசித்து வந்த புஷ்பா என்ற ஆஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இளம்பெண் புஷ்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் திணித்து குப்பை லாரியில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாவின் கணவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார்.
- போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்தூர் தாலுகாவில் உள்ள நோனவினகெரே அருகே உள்ள கடுஷெட்டிஹள்ளியில் வசித்து வந்தவர் சங்கரமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி சுமங்கலா (43).
திப்தூர் நகரில் உள்ள கல்பதரு கல்லூரியின் பெண்கள் விடுதியில் சமையல்காரராக சுமங்கலா பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் சமையல் உதவியாளராக கரடலு சாந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏறப்பட்டது. 2 பேரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த சங்கரமூர்த்தி மனைவி சுமங்கலாவை கண்டித்தார். இது பற்றி சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவிடம் தெரிவித்தார். தகாத உறவுக்கு சங்கரமூர்த்தி ஒரு தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ய சுமங்கலாவும், நாகராஜுவும் ஒரு திட்டத்தை வகுத்தனர்.
அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு சுமங்கலா தனது கள்ளக்காதலன் நாகராஜூவை கடுஷெட்டிஹள்ளி உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். பண்ணை வீட்டில் சங்கரமூர்த்தி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கால்களை நாகராஜூ இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சுமங்கலா, கணவரின் கண்களில் மிளகாய் பொடி, உப்பு பொடி கலந்து ஊற்றினார். இதனால் சங்கரமூர்த்தி சத்தம் போடவே, அவரை கம்பால் அடித்து அவரது கழுத்தை மிதித்து துடிக்க, துடிக்க சுமங்கலா கொலை செய்தார்.
பின்னர் சுமங்கலாவும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து, சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கொண்டு சென்று அங்கே வீசினர். பின்னர் எந்த சந்தேகமும் ஏற்படாதபடி இருவரும் கிராமத்திற்கு திரும்பினர்.
இதையடுத்து சுமங்கலா தனது கணவர் மாயமானதாக நோனவினகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சங்கரமூர்த்தி மீது காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
முதலில் சுமங்கலாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆராய்ந்த போலீசார் சுமங்கலாவின் கள்ளக்காதல் மற்றும் கொடூரமான சதித்திட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சங்கரமூர்த்தியின் பண்ணை வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சங்கரமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் மிளகாய், உப்பு பொடி மற்றும் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளமும் காணப்பட்டன.
இதனால் போலீசார் சுமங்கலாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தானும், கள்ளக்காதலனும் சேர்ந்து சங்கரமூர்த்தியை கொலை செய்ததை சுமங்கலா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் சுமங்கலா மற்றும் நாகராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து சங்கரமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த கணவரின் கண்களில் மனைவி மிளகாய், உப்புப் பொடியை ஊற்றி, அவரது கழுத்தை மிதித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- சிவமொக்கா, ஷிகாரிபுரா மற்றும் ஹோசநகர், சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகள் வீடுகளில் அடிக்கடி லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி வருகிறார்கள்.
அதே போல் இன்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் பேரில் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருக்கும் பெங்களூரு பஞ்சாயத்து ராஜ் என்ஜினீயரிங் துறை அதிகாரி மல்லிகார்ஜூன் அலிபூரின் வீடு, கலபுரகியில் உள்ள அவரது அலுவலகம், சன்னூர் பி.டி.ஓ. ராமச்சந்திரன் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் சிவமொக்கா, ஷிகாரிபுரா மற்றும் ஹோசநகர், சிக்கமகளூரு, உள்ளிட்ட இடங்களிலும் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.
- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
- இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால், மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, பிரதமர் மோடியை எச்சரித்துள்ளார்.
கர்காடக மாநிலம் ராய்ச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது கார்கே கூறியதாவது:-
சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி பயங்கரவாதிகளை அழித்தது இந்திய படைகள்.
ஒட்டுமொத்த நாடும், இந்திய படைகளும் நாட்டை பாதுகாக்க ஒற்றுமையாக இருந்த நிலையில், சில தனி நபர்கள், தனிப்பட்ட ஆதாயத்தை பெற முயற்சி செய்தார்கள்.
அவர்கள் ராணுவத்தில் கேப்டன், கர்னல் அல்லது லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றியிருந்தால், நாட்டிற்காக சிறப்பாகப் போராடியதற்காகவும், சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் நாம் அவர்களைப் பாராட்டியிருப்போம். ஆனால் அது அப்படியல்ல.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டு கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அதற்குப் பதிலாக பீகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிசியாக இருந்தார். இதற்கு அர்த்தம் என்ன?. நாட்டு மக்களும், வீரர்களும் ஒருபக்கம் போரிட்டு கொண்டிருக்கும்போது, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிறகு, மறுபக்கம் பிரதமர் பிரசாரத்தை தேர்வு செய்துள்ளார்.
நீங்கள் எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீட்டால் தலைவர்கள், மக்கள், குறிப்பாக நாட்டின் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அமெரிக்க தேர்தல்களின்போது மோடி 'பிர் ஏக் பார் டிரம்ப் சர்க்கார் (Phir Ek Baar Trump Sarkar)' என்ற முழக்கத்தை எழுப்பினார். இந்த பெரிய மனிதர் (பிரதமர் மோடி) அமெரிக்காவில் இதைச் சொன்னார். ஆனால் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தார். பிரதமர் மோடி அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
- ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
- கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன.
பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பைக் டாக்சியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய ஆட்டோ டிரைவர்கள் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்குமாறு கோரி தீவிர போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, கர்நாடக அரசு, இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதை நம்பி இருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ள பைக் டாக்ஸி சேவையை மீண்டும் அனுமதிக்கக் கோரி 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெங்களூருவில் பேரணி நடத்தினர்.
மைசூரு, மண்டியா, ஹாசன், தாவணகெரே, தும்கூர், ராமநகரா, சிவமொக்கா மற்றும் கனகபுரா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
- மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மவரா தாலுகா ஹிலியானா கிராமத்தில் உள்ள ஹோசமாதா பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி (வயது 42). இவரது மனைவி ரேகா (27).
கணேஷ் பூஜாரி சங்கரநாராயணா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி ரேகா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை தொடர்ந்து ஆர்வமாக மணிக்கணக்கில் பார்த்து வந்தார். இதனால் அவரை கணவர் சத்தம் போட்டார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரீல்களை பார்ந்து வந்தார்.
இது குறித்து தம்பதியினர் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கணேஷ் பூஜாரி, ஒரு கத்தியை எடுத்து மனைவி ரேகாவின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். சம்பவம் நடந்த உடனேயே பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.
டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை இருண்ட பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஜி. பால்யா பகுதியை சேர்ந்தவர் குமார் (33).
இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இதனால் குமாரின் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனால் குமாரின் மனைவி கண்டு கொள்ளவில்லை. மேலும் கணவர் தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்திய போதிலும், அவரது மனைவி தொடர்ந்து ரீல்களை உருவாக்கி பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஆன்லைனில் பதிவேற்றிய வீடியோக்கள் குறித்து நண்பர்கள் அடிக்கடி கேலி செய்ததால், அவர் மன உளைச்சலை எதிர்கொண்டார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
வாக்குவாதம் உச்சத்தை எட்டியதை தொடர்ந்து குமார் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களில் அதிகப்படியான ஈடுபாட்டை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.






