என் மலர்
டெல்லி
- ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார்.
- காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த வெடிப்புக்குக் காரணமான கார் பல முறை விற்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அரியானா பதிவு எண்ணைக் கொண்ட 2013 மாடல் ஹூண்டாய் i20 மாடல் காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் குருகிராமைச் சேர்ந்த சல்மான் ஆவார்.
சல்மான் வேறு ஒருவரிடமிருந்து காரை வாங்கி 2014 இல் தனது பெயரில் பதிவு செய்துள்ளார். போலீசார் சல்மானைத் தொடர்பு கொண்டபோது, ஓக்லாவைச் சேர்ந்த தேவேந்திரா என்ற நபருக்கு காரை விற்றதாகக் கூறினார்.
பின்னர் தேவேந்திராவைத் தொடர்பு கொண்டபோது, அது அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் அது ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அமீருக்கு விற்கப்பட்டது. அமீரிடமிருந்து, அக்டோபர் 29 ஆம் தேதி மாலை பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாக்டர் உமர் முஹம்மதுவின் கைகளுக்கு அது சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்சி ஆவணத்தின் உரிமையாளர் சல்மான், போலீஸ் காவலில் உள்ளார். இவ்வளவு முறை விற்கப்பட்டபோதும் உரிமை தொடர்பான ஆர்.சி. ஆவணங்களை மாற்றத் தவறியது சந்தேகத்தை அதிர்க்கரித்துள்ளது.
அரியானாவின் பரிதாபாத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 8 மணியளவில் பதர்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் அந்த ஹூண்டாய் i20 கார் கார் நுழைந்தது.
காலை 8.13 மணிக்கு பதர்பூர் எல்லை சுங்கச்சாவடியைக் கடக்கும் கார் பற்றிய சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.
காலை 8.20 மணியளவில் ஓக்லா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பின் சிசிடிவி காட்சிகளிலும் இந்த கார் பதிவாகியுள்ளது.
மதியம் 3.19 மணிக்கு செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங் பகுதிக்குள் வாகனம் நுழைந்தது. மாலை 6.22 மணிக்கு அங்கிருந்து மெதுவாக நகர்ந்த கார், நேதாஜி சுபாஷ் மார்க்கில் உள்ள போக்குவரத்து சிக்னலை அடைவதற்கு சற்று முன்பு, மாலை 6.52 மணிக்கு வெடித்தது.
வெடிவிபத்து ஏற்பட்ட அதே நாளில் அரியானாவில் பரிதாபாத்தில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
- 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?
- இங்கே என்ன நடக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான 'ரெடிட்' இல் ஒரு மாணவரின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.
மாலை 4 மணியளவில் அவரது பதிவில், 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர். மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இடைப்பட்டு சரியாக 3 மணி நேரம் கழித்து 7 மணியளவில் அதே பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து அந்த பதிவு தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
மேலும் குணப்படுத்தமுடியாத காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரேகா குப்தா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு துணை நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்தார்.
- உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது.
கார் வெடித்துச் சிதறியதும் அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று பேசினார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
- டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.
- 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
- இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதற்கிடையே, 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு 135 முதல் 140 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 100 முதல் 110 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
NDTV கருத்துக்கணிப்பு முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 152 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 84 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
பியூபிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பின்படி என் டி ஏவுக்கு133 முதல் 148 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 87 முதல் 102 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
- சீனாவின் செங்டு மாகாணத்தில் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
- இந்தியாவின் சுமித் நாகலுக்கு சீனா செல்ல விசா மறுக்கப்பட்டது.
புதுடெல்லி:
சீனாவின் செங்டு மாகாணத்தில் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சுமித் நாகல் விசாவுக்கு அப்ளை செய்தார். ஆனால் அவருக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீனா தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், சுமித் நாகல் எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்டு ஓபனில் அவசியம் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கும் செல்ல முடியும். எனவே தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே விரைந்து உதவி செய்ய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்துச் சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் இன்று மதியம் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் டெல்லி கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது பதிவான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதில், நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. கார் வெடித்ததும் மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பும் ஏற்பட்டுள்ளது.
- பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பில் பலியானவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
* உச்ச நீதிமன்றம் சார்பாக, இந்த பேரழிவு துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
* இத்தகைய இழப்பின் வலியை எந்த வார்த்தைகளாலும் உண்மையிலேயே குறைக்க முடியாது. இருப்பினும் இந்த துயரமான நேரத்தில் தேசத்தின் கூட்டு இரக்கமும் ஒற்றுமையும் சிறிது ஆறுதலை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
* துயரமடைந்தவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதியை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
* உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும், அவர்களை இழந்த அனைவருக்கும் தைரியமும் ஆறுதலும் கிடைக்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
- பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
- கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.
- நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
- டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
* குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
* கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உண்மை மக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்.
* டெல்லி கார் வெடிப்பு விபத்தில் தொடர்புடையவர்களை தப்பிக்க விட மாட்டோம்.
* டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






