search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxal"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
    தாமாக முன்வந்து சரணடைந்த நக்சலைட் இயகத்தை சேர்ந்த பெண்ணுக்கு, போலீசார் தரப்பில் 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Naxal
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், கோண்டகோன் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த பிசாந்தி நீதம் என்ற பெண் அம்மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி மகேஷ்வர் நாக் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.

    நக்சல் இயக்கத்தில் கொரில்லா படைப்பிரிவில்  இருந்த பிசாந்தி நீதமின் தலைக்கு போலீசார் 3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தனர். ஆனால், பிசாந்தி போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.  

    சரண்டர் ஆகும் நபர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் மாநில அரசின் திட்டத்தால் கவரப்பட்டு, போலீசாரிடம் சரணடைந்ததாக பிசாந்தி தெரிவித்தார். அவருக்கு திருந்தி வாழ தேவையான அரசின் மறுவாழ்வு நலத்திட்டங்கள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Naxal
    சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் இயக்கத்தின் துணை தளபதி மற்றும் ஆதரவாளர்கள் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Naxalencounter
    ராய்ப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டம் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லையில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நன்டகன் மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள போர்டாலாவ் வனப்பகுதியில் இன்று காலை 11 மணியளவில் நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

    சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் நக்சலைட் துணை தளபதி ஆசாத் மற்றும் நக்சலைட்களுக்கு தேவையான பொருட்களை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கொடுக்கும் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. #Naxalencounter 
    ×