என் மலர்
இந்தியா

சத்தீஸ்கரில் 16 நக்சல்கள் சரண்.. தலா ரூ.25 லட்சம் வெகுமதி
- ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எஸ்பி கிரண் சவான் தெரிவித்தார்.
- ரூ.1 கோடியில் இந்த கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டிலிருந்து நக்சல்களை ஒழிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ள நிலையில், அவர்களின் சரணடைதல் தொடர்கிறது.
திங்கட்கிழமை சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட காவல் நிலையத்தில் 16 நக்சல்கள் சரணடைந்தனர்.
சரணடைந்த நக்சல்களுக்கு ரூ.25 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று எஸ்பி கிரண் சவான் தெரிவித்தார்.
அவர்களில் ஒன்பது பேர் சிந்தலநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதினாறு நக்சலைட்டுகளில் 9 பேர் கெர்லபெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதனால் கிராமம் நக்சல் இல்லாத கிராமமாக மாறியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத் திட்டத்தின்படி ரூ.1 கோடியில் இந்த கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்
Next Story






