என் மலர்
இந்தியா

அடுத்த மாதம் நக்சலிசம் முடிவுக்கு வரும்: உள்துறை இணை மந்திரி
- நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
- இந்தப் பிரச்சனை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:
இடதுசாரி பயங்கரவாதம் அல்லது இந்தியாவில் பொதுவாகக் குறிப்பிடப்படும் நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது. இதுகுறித்த தேசியக் கொள்கை இல்லாததால் இது பல தசாப்தங்களாக நீடித்து வந்தது.
2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா நக்சலிசத்தில் இருந்து விடுபடும்.
கடந்த 2018-ம் ஆண்டு பயங்கரவாதத்தால் 126 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2025 டிசம்பரில் அவை 8 மாவட்டங்களாகக் குறைந்துள்ளன.
பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை மற்றும் தலைமையின் கீழ் நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
Next Story






