என் மலர்tooltip icon

    இந்தியா

    • 15 ஆண்டுகளுக்குப் பிறகு 4-ந்தேதி கும்பாபிஷேகம்.
    • இன்று மாலை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேசு வரி உடனுறை மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

    சமஸ்தான தேவஸ்தானம், தமிழக அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மூலம் திருப்பணிகள் முடிவடைந்துள்ளன. 4-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது இன்று மாலை திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.

    இதுகுறித்து திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

    கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு இன்று மாலை மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு அவருக்கு சாத்தப்பட்டுள்ள சந்தனக்காப்புகளையப்படுகிறது. 4-ந்தேதி வரை 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்திருக்கும். தொடர்ந்து 4-ந்தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சாத்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சாத்தப்படுகிறது.

    கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று மேல்பகுதி தளத்தில் மட்டும் சுமார் 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், 2-வது நாளாக இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக சாலை பூஜைகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ஆருத்ரா தரிசன விழாவின் போது ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி அன்று திரு உத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 4 நாட்கள் மரகத நடராஜர் சன்னதி திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
    • குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

    அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

    டெல்லி சென்றார். அங்கு பளார்... பளார்ன்னு அறை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

    இங்கே வந்த பிறகு அதை மறைக்க ஏதாவது பேசிதானே ஆகணும்.

    வரச்சொல்லுங்கள். ஏதாவது ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு தரம் இல்லையென்றால் அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு செல்லலாம்.

    அப்படி இருந்தால் நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அடுத்தடுத்து அந்த குறைகளையும் சரிசெய்ய இந்த அரசு தயாராக உள்ளது.

    குறைகளே சொல்லக்கூடாது என்பது அல்ல. குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போது தான் நாங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

    ஆகவே அவர் கூறிய அந்த கருத்தை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படுகின்ற எங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம். அப்படி ஏதாவது இருந்தால் அந்த குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.

    • பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்வு
    • ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரிப்பு

    திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ. 253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் சீராக இருந்தது. இந்நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
    • 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில், நாளை 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கேரளா முதல்வர் பினராயி விஜ யன், பிருந்தா காரத், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்-திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா. சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங் கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர்.

    கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரு மான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள்-கருத்தரங்குகள் நடை பெறுகின்றன.

    இதில், 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமைச்சர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்பட இயக்கு நர்கள் உள்ளிட்ட ஆளுமை கள் பங்கேற்கின்றனர்.


    இதன்படி நாளை மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப் பறை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.

    3 ந்தேதி மாலை 5 மணிக்கு, கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை'என்றதலைப்பில் மாநில உரிமைகள் பாது காப்புக் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி சுதாகர். சி.பி.எம். அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

    4-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. திரைக் கலைஞர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக் கனி, வெற்றிமாறன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

    6-ந்தேதி மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்கு நர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பேசுகிறார்கள்.

    வரலாற்றுக் கண்காட்சி யை மூத்த ஊடகவியலாளர் என்.ராம் திறந்து வைக்கி றார். புத்தகக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. பரமேஸ்வரன் திறந்து வைக்கிறார்.

    6-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் என். சங்கரய்யா நினைவுத்திடலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    • குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில், குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
    • ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையிலும் கப்பல் மற்றும் ரெயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 111 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

    பலமிழந்த பழைய பாலத்தின் உறுதித்தன்மையில் ஏற்பட்ட கேள்விக்குறியால் அதன் அருகிலேயே புதிய ரெயில் பாலம் அமைக்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

    இதற்கிடையே பழைய ரெயில்வே பாலம் தனது ரெயில் சேவைகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொண்டது.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் மண்டபம் வரை ரெயிலில் பயணித்து பின்னர் அங்கிருந்து பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.

    இதற்கிடையே ரூ.550 கோடி மதிப்பிட்டில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்து உள்ளது. மேலும் புதிய பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் சென்று வரும் வகையில், செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் வழியாக ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 6-ந்தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அக்னி தீர்த்தம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களும் சேகரிக்கப்பட்டு அது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து அவர் கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை மன முருகி வேண்டுகிறார். சுமார் 20 நிமிடங்கள் வரை அவர் கோவில் பிரகாரம் உள்ளிட்டவற்றை சுற்றி வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புதிய பஸ் நிலையம் அருகே சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றுகிறார். இந்த விழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    இதனைத்தொர்ந்து, அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளது. விழா நடை பெறும் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் 120 மீட்டர் நீளத்தில் வெயிலை தாங்கி நிற்கும் அளவிற்கு 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வரை தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்படர் மூலம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார்.

    இதன் பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் ரோடு பாலத்தில் அமைக்கப்படும் தற்காலிக மேடையில் நின்றவாறு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலத்தையும் திறக்கிறார். அப்போது அந்த வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து செல்வதை சுமார் 12 நிமிடங்கள் மேடையில் இருந்தவாறு பார்த்து ரசிக்க உள்ளார்.


    பிரதமர் வருகை தரு வதையொட்டி, கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் மண்டபம் கேம்ப் ஹெலி காப்டர் இறக்கு தளத்தில் நேற்று மாலை இறக்கி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதன் பின்னர் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் சென்றது. இதே போன்று தொடர்ந்து சோதனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து பிர தமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்து ராமேசுவரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    • அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    அவர் பேசுகையில், பல பொய் பிரசாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க., அண்ணாமலையையே செட் செய்து விட்டது நன்றாக கவனித்தால் தெரியும். தி.மு.க.வின் பிரச்சனைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பா.ஜ.க. வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை என்று விமர்சித்து இருந்தார்.

    ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், என் மாமனார் காசுல நான் வாழல.. லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல.. சொந்தமா உழைச்சு சுயம்புவாக உங்க முன்னாடி நிக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆதர் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா குறித்த அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு இதர அரசியல் கட்சிகளுடன் பயணித்து வருகிறார்.

    மேலும் ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.



    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் நீண்ட நேரம் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். கோடை காலம் என்பதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடங்குகிறது. அதன் பிறகு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள், பரிந்துரை கடிதம் கொண்டுவரும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதன் காரணமாக மதியம் 1.30 மணி வரை சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்களும் ஒரே நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது.

    சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் காலை 9.30 மணிக்கு தரிசனம் செய்யலாம் என நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்கள் வரிசையில் வந்து 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் மற்ற கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    வி.ஐ.பி பிரேக் தரிசனம் அதிகாலையில் தொடங்க வேண்டும். கோடை காலம் முடியும் வரை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தேவஸ்தான அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அதில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து கருத்துக்களை கேட்கிறார்.

    மற்ற மாநிலங்களில் உள்ள தலைநகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டுவது குறித்தும் வெளிநாடுகளில் இந்துக்கள் அதிக அளவில் உள்ள நகரங்களில் கோவில் கட்டுவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 73,007 பேர் தரிசனம் செய்தனர். 24,440 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து இருந்தார்.
    • பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக கட்சியில் முக்கிய தலைவர்கள் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சந்தித்து 25 மாவட்டத் தலைவர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பதில் அளித்த செல்வப்பெருந்தகை, கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மறைந்த ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் திருநாவுக்கரசு ஆதரவாளர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார். பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கப்பட்டால் தனக்கு ஆதரவு அளிக்க அவர் கேட்டு கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தி, பிரியங்காவிடம் நெருக்கமாக இருப்பதால் பதவியை பெற்று விட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
    • கூட்டணி பற்றி பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பிரச்சனைகளுக்காக அமித் ஷாவை சந்தித்து மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட் டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மத்திய மந்திரி அமித் ஷாவும் உறுதி செய்துள்ளார்.

    அதே நேரத்தில் டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவரான செங்கோட்டையனும் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இதனால் அ.தி.மு.க.வில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பணியவைப்பதற்காக பா.ஜ.க. செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.


    அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருக்குமாறு செங்கோட்டையனுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் வருகிற 6-ந்தேதி மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் கூட்டணி ஆகியவை பற்றி இருவரும் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது.
    • முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர்.

    திட்டக்குடி:

    கள்ளநோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.

    இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.

    அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நவீன் ராஜா, காரத்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    • புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
    • உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கடலில் மீன் வளத்தை பெருக்க புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசை படகில் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடைக்காலத்தில் மீன்வர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.

    அதன்படிபுதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

    அதேபோல் மழைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×