என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையின் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
    • கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

    தெற்கு காசாவில் உள்ள முக்கியமான மருத்துவமனையின் 4ஆவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இதுவாகும். கடந்த 22 மாதங்களாக நடைபெறும் தாக்குதல் காரணமாக மருத்துவனைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாஃப் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் இஸ்ரேல் இது தொடர்பாக உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காசா முனையில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அதேவேளையில் தாக்குதலும் நடத்தி வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் 62,686 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும்.
    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    ஐ.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்., எம்.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'கேட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன.

    இது நுழைவுத்தேர்வாக மட்டுமன்றி இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சேருவதற்கும் இதில் பெரும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி, 'கேட் 2026' நுழைவுத்தேர்வு என்ஜினீயரிங், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட 30 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒரு தேர்வர் ஒன்று அல்லது இரண்டு தாள்கள் தேர்வை தேர்வு செய்து எழுதலாம்.

    இந்த தேர்வை என்ஜினீயரிங் இளநிலை பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுத முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.gate 2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் 7, 8 மற்றும் 14, 15-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

    • பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.
    • வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன்.

    பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தெலுங்கில் அவர் தயாரித்து வெளியிட்ட 'சுபம்' படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

    தற்போது சினிமாவில் இருந்து விலகப்போவதாக சமந்தா கூறியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், "ரசிகர்கள் எனக்கு தந்த ஆதரவை என்றுமே நான் மறக்க மாட்டேன். அதேவேளை பல புதிய பரிமாணங்களை எடுக்கவும் யோசிக்கிறேன்.

    வருங்காலத்தில் நான் படத் தயாரிப்பு மற்றும் சில தொழில்களில் கவனம் செலுத்தலாம் என்று யோசிக்கிறேன். எனவே நடிப்பதை நிறுத்தலாமா? என்றும் யோசிக்கிறேன்" என்று சமந்தா குறிப்பிட்டார்.

    சமந்தாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்தாலும், 'சமந்தா விளையாட்டுக்காக இதை சொல்லியிருக்கலாம்' என்று மனதை தேற்றி வருகிறார்கள்.

    • சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
    • கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

    அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
    • அதில், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    அங்காரா:

    அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

    அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததைப் பாராட்டினார்.

    தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
    • இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.

    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.

    இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

    தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?

    பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?

    காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.

    • கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.
    • அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும்.

    பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய யாத்திரை வரும் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இன்றைய யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் மற்றும் தொண்டர்களுடன் பைக் பேரணி சென்றார் ராகுல்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல், "தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றுவரை, எனது கேள்விகளுக்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கர்நாடகாவில், 1 லட்சம் வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்டேன், ஆனால் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இதற்கு பதிலளிக்க முடியவில்லை.

    நான் பத்திர்கையாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஏற்க மாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. சில நாட்களுக்குப் பிறகு அனுராக் தாக்கூரும் இதேபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். ஆனால் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் கேட்கவில்லை.

    இந்தத் தேர்தல் ஆணையம் யாருடன் நிற்கிறது என்பது  மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமற்றவர்களாக இருந்தால், அனுராக் தாக்கூரிடமிருந்து பிரமாணப் பத்திரம் கோரப்பட்டிருக்கும். எனவே தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் பாஜக இடையே ஒரு தொடர்பு உள்ளது.

    நீங்கள் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில், அரியானாவில் வாக்குகளை திருடினீர்கள். ஆனால் இங்கே பீகாரில் அதை நடக்க நாங்கள் விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.  

    • சிவகார்த்திகேயனுக்கும், எனக்கும் இது 8வது படம்.
    • மதராஸி படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

    மதராஸி இசை வெளியீட்டு விழா இசையமைப்பாளர் அனிருத் பேசினார். அப்போது அவர், " மதராஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வௌியீட்டு விழாவிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி.

    சிவகார்த்திகேயனுக்கும், எனக்கும் இது 8வது படம். மதராஸி ரொம்பவே ஸ்பெஷல். ஏ.ஆர்.முருகதாஸ் சாருடன் எனக்கு இது 3வது படம்.

    நான் முதல் 2 படம் பண்ணும்போதே என்னை நம்பி பெரிய படம் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் சார். அந்த நன்றிக்கடன் எனக்கு எப்பவுமே இருக்கு.

    எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் எங்களது வளர்ச்சி ஒன்றாகதான் வளர்ந்திருக்கிறது. அந்த பாண்டே ரொம்ப ஸ்பெஷல் தான்.

    மதராஸியில் கப்பு, ஃபயர் கண்டிப்பா இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர்.
    • நேற்று காசா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவில் நேதன்யாகு அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை எதிர்த்து தலைநகர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது "எங்கள் ஆன்மாவையும் இரத்தத்தையும் கொண்டு காசாவை காப்பாற்றுவோம்" என்று அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சட்டவிரோதமான மற்றும் தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இதனால் ஒரு சில வாரங்களில் உணவு பற்றாக்குறையால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 115 பேர் குழந்தைகள்.

    ஐ.நா உட்பட பிற உணவு விநியோக முறைகளை முற்றிலுமாக துண்டித்து, அதன் சொந்த நான்கு மையங்களைத் இஸ்ரேல் திறந்தது. இந்த மையத்தை நோக்கி உணவுக்காக வந்த 2,076 பேரை இராணுவம் இதுவரை சுட்டுக் கொன்றுள்ளது.

    நேற்று காசா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவுக்காக காத்திருந்த 22 பேர் அடங்குவர்.  

    • எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து, இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அதனை சுற்றுவளைத்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை விரட்டியடித்தனர்.

    ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.

    ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

    • 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

    இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.

    கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் 276 ரன்கள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்றவழக்கில் கைதாகி, 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும்.
    • முதலில் பிரதமர் பெயர் இடம் பெறாமல் இருந்தது. இதை மோடி ஏற்கவில்லை என்கிறார் கிரண் ரிஜிஜு.

    பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர்கள், அமைச்சர்கள், ஐந்து ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் அந்த மசோதாவின் முக்கியம்சம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    இந்த நிலையில், இந்த மசோதாவில் முதலில் பிரதமர் பெயர் சேர்க்கப்பட வேண்டாம் என மந்திரி சபையில் ஆலோசனை வழங்கப்பட்டது. பிரதமரும் ஒரு குடிமகன், அவருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறப்பு பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கூறி பிரதமர் மோடி ஆலோசனையை ஏற்க மறுத்தார். இதனால் பிரதமர் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின் மசோதாவுக்கு சம்மதம் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்ததாவது:-

    130-வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல- இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா. 30 நாள் கைது= தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல். விசாரணை இல்லை, தண்டனை இல்லை- பாஜகவின் கட்டளை மட்டுமே.

    சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன. வாக்குகளைத் திருடுதல், போட்டியாளர்களை அமைதிப்படுத்துதல் மற்றும் மாநிலங்களை நசுக்குதல். ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், மேலும் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றும் இந்த முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமரின் கீழ் இந்தியாவை ஒரு சர்வாதிகாரமாக மாற்றுவதன் மூலம் அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளங்களையும் கெடுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

    வாக்கு திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைக்கப்பட்டதற்கான ஆணையே கடுமையான கேள்விக்குறியாக உள்ளது. அதன் சட்டபூர்வமான தன்மை சந்தேகத்திற்குரியது. மோசடி மூலம் மக்களின் ஆணையைத் திருடிய பாஜக, இப்போது இந்த அம்பலப்படுத்தலில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தீவிரமாக உள்ளது. அதைச் செய்ய, அவர்கள் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர்.

    இந்த மசோதாவின் திட்டம் தெளிவாக உள்ளது. இது, மாநிலங்கள் முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் போடவும், 30 நாள் கைது கூட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு காரணமாகக் கருதும் விதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களை நீக்கவும் பாஜகவை அனுமதிக்கிறது, எந்த தண்டனையும் அல்லது விசாரணையும் இல்லாமல். இந்த அரசியலமைப்புக்கு விரோதமான திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும், ஏனெனில் குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் தீர்மானிக்கப்படுகிறது, ஒரு வழக்கைப் பதிவு செய்வதன் மூலம் அல்ல.

    இது பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருக்கும் NDA-வில் உள்ள பிராந்தியக் கட்சிகளை மிரட்டுவதற்கான ஒரு தீய முயற்சி. எந்தவொரு வளர்ந்து வரும் சர்வாதிகாரியின் முதல் நடவடிக்கையும், போட்டியாளர்களைக் கைது செய்து பதவியில் இருந்து அகற்றுவதற்கான அதிகாரத்தை தனக்கு வழங்குவதாகும். இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது.

    இவ்வாறு தெரிவித்திருந்தார். 

    ×