செய்திகள்

ஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-02-18 17:14 GMT   |   Update On 2019-02-18 17:14 GMT
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
சென்னை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறினார். அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
Tags:    

Similar News