தமிழ்நாடு

விருகம்பாக்கத்தில் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல்- போலீசார் விசாரணை

Published On 2024-05-05 11:34 GMT   |   Update On 2024-05-05 11:34 GMT
  • புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதாக வாக்குவாதம்
  • தாக்குதலில் விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயம்

சென்னை விருகம்பாக்கத்தில் புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதால் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மொதல்ல விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News