தமிழ்நாடு செய்திகள்
குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்
- தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ரூ. 200 தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கூடுதல் அவகாசம் என்பதால், கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே பணிகளை முடிப்பது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.