செய்திகள்

சிவகாசி அருகே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர்

Published On 2017-11-11 09:56 GMT   |   Update On 2017-11-11 09:56 GMT
காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்ததாக வாலிபர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

சிவகாசி:

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே உள்ள மூக்கம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஆனந்த் (வயது 22).

அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகள் சுசீலா (19). இவருக்கும், ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

சுசீலாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஆனந்த் அவருடன் நெருங்கி பழகினார். இதில் சுசீலா கர்ப்பம் அடைந்தார்.

உடனே தன்னை திருமணம் செய்யும்படி சுசீலா வற்புறுத்தினார். ஆனால் ஆனந்த் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுசீலா, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது ஆனந்த் திருமணத்திற்கு மறுப்பதாகவும், இது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி ஆனந்த், அவரது தாயார் சகுந்தலா, தம்பி பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News