இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது கற்கள் வீசி தாக்குதல்

Published On 2024-05-25 12:32 GMT   |   Update On 2024-05-25 12:32 GMT
  • பாஜக வேட்பாளர் மீது கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல்.
  • உள்ளூர் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை என புகார்.

மேற்கு வங்கத்தில் ஜார்கிரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரனாத் துடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கம் மொங்லோபோத்ராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு பாஜக வேட்பாளர் ஆய்வு செய்ய சென்றபோது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு, பாஜக வேட்பாளர் மீது கற்கள் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பாஜக வேட்பாளர் பிரனாத் துடு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் அளிக்கவில்லை என பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ய சென்றதாக பாஜக வேட்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News